Thursday 12 April 2012

சுமத்ராவில் வருகிறாய்


சுமத்ராவில் வருகிறாய்
சும்மா சும்மா வருகிறாய்
சுழற்றி போட்டு அடிக்கிறாய்
சென்னையில் ஆட்டுகிறாய்
கடல் அலையை சீற்றுகிறாய்
உறங்கும் அரசை உசுப்புகிறாய்
எல்லாம் எமக்கு தெரியும்
உன் சீற்றம் முன்பறிவோம்
என்று இறுமாப்பு கொள்வோரை
அச்சமுற வைத்து
சடுதியிலே மறைகிறாய்
பண்பாடு விற்று
கொள்கைகளை காசாக்கி
நலிந்தோரை நசுக்கும்
நயவஞ்சகர்களை
இனம் கண்டு
இடமறிந்து  
நாசமாக்க
நாளையேனும்
அறிவிப்பின்றி வா

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

Unknown said...

இதுதான் இதேதான் இதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன் நானும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.