Wednesday 5 September 2012

கடவுள் இல்லையா? யார் சொன்னது?

"அ"கர முதல எழுத்தெல்லாம்
அன்புடனே அறியவைத்து
பண்புடனே பாடங்கள்
பல புகட்டி

எம்மொழியின் பெருமைதனை
எனக்குள்ளே விதைத்து
செம்மொழி கொண்டே
உலகினை அறியவைத்து

அறிவியல் தொட்டு
ஆயிரம்  இயலிலும் 
தேடுதல் வேட்கை
தேவை என்ற சிந்தனையை
தெளிவுடனே விதைத்து

சிந்தனை செம்மையுற
செவிவழி அமுதூட்டி
எந்தன் வாழ்வு சிறப்புற
புவிதனை புரியவைத்து

கடவுள் என்ற சிந்தனை
எந்தனிடம்  தோன்றுமுன்
சிந்தனையின்  சிறப்புதனை
உண்மை என உணரவைத்த
தன்னலமற்றவர்கள்
நான் கண்ட கடவுள்கள்.

என் வாழ்வு சிறப்புற எனக்கு அறிவூட்டிய  எண்ணற்ற ஆசிரியர்களுக்கு  சமர்ப்பணம்.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

கும்மாச்சி said...

தனபாலன் நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான ஆசிரியர் தின வாழ்த்து.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ்.ரா.

முத்தரசு said...

அட அழகா சொன்னீங்க வாழ்த்துக்களை

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோ.

”தளிர் சுரேஷ்” said...

ஆசிரியர் தின கவிதை மிகவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.