அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது தெரியும். கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவுநாளும் அதே தினம் தான்.
அதே தினத்தில்தான் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமரும் பிறந்தார். அரசியலில் ஒரு நெறிமுறையுடன் வாழ்ந்த அந்த தலைவர் பிறந்தநாளை ஏன் நாம் அவ்வளவு விமர்சையாக கொடாடுவதில்லை என்பது புரியாத புதிர்.
அவரைபற்றி இந்துவில் திரு. பூ.கொ. சரவணன் அவர்கள் எழுதிய கட்டுரை.
அதே தினத்தில்தான் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமரும் பிறந்தார். அரசியலில் ஒரு நெறிமுறையுடன் வாழ்ந்த அந்த தலைவர் பிறந்தநாளை ஏன் நாம் அவ்வளவு விமர்சையாக கொடாடுவதில்லை என்பது புரியாத புதிர்.
அவரைபற்றி இந்துவில் திரு. பூ.கொ. சரவணன் அவர்கள் எழுதிய கட்டுரை.
லால் பகதூர் சாஸ்திரி - அரிதான அரசியல் தலைவர்
அக்டோபர் இரண்டு என்றால் எல்லாருக்கும் காந்தியை ஞாபகம் வரும். இன்னொரு
தலைவருக்கும் அக்டோபர் இரண்டு தான் பிறந்த நாள். அவர் லால் பகதூர்
சாஸ்திரி. சாஸ்திரி படித்து பெற்ற பட்டம் - சாதி பெயர் இல்லை. எளிய விவசாய
குடும்பத்தில் பிறந்த உருவத்தில் சிறிய மனிதர்.
இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்க செல்ல வேண்டும். படகில் போக காசில்லாத
நிலையில் நண்பர்களிடம் கடன் வாங்க மறுத்து, தினமும் நீந்தி மறுகரை போய்
படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்லூரி படிக்கிற காலத்தில்
விடுதலைப்போரில் மனிதர் பங்குகொண்டு சிறை சென்றபோது, இன்னமும் சிறையில்
அடைக்கும் வயது வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
திருமணம் செய்து கொண்டார் சாஸ்திரி. பெரும் வரதட்சணை பெறுவது வழக்கமாக
இருந்த காலத்தில் கதராடை ஒன்று, ஒரு கை ராட்டை ஆகியன மட்டுமே
பெற்றுக்கொண்டார் .
அடிக்கடி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை போவது இவருக்கு வழக்கம். ஒரு முறை
மகளுக்கு உடல்நலம் முடியவில்லை என்று பதினைந்து நாள் அனுமதி பெற்று
வந்தார். மகள் அந்த காலம் முடிவதற்குள்ளாகவே இறந்து போனார். இன்னம் சில
நாட்கள் பாக்கி இருந்தும் , ஈமச்சடங்குகள் முடிந்த அடுத்த நொடி சிறை
சென்றார் சாஸ்திரி.
இவர் அமைச்சரவையில் இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள் பதவியில்
அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை
அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. எளிமை,நேர்மை இது தான்
அவர். வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய் சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம்
தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை குறைத்துக்கொண்டவர். அரியலூர் ரயில்
விபத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பற்று தன்னுடைய அமைச்சர் பதவியை
ராஜினாமா செய்தார். அடுத்த நாள் ,"இனிமேல் நம் வீட்டில், சமையலில்
காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்!" என்றார்.
இந்திய பாகிஸ்தான் போரின் பொழுது தீர்க்கமாக வழிநடத்தியவர் . இந்தியாவின்
எளிய பிரதமர்களில் ஒருவர் . பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரு
இவரை அனுப்பி வைத்த பொழுது அணிந்து கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக
நேருவின் ஸ்வெட்டரை இவர் அளவுக்கு தையல்காரர் தைத்து கொடுத்தார்.
அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதன்
சொன்னார்,"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து
கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும் மறைந்து விட்டார்!" என்று . சாஸ்திரி
மாதிரி உன்னத ஆத்மாக்கள் அரிதாகத்தான் அரசியலில் தோன்றுகிறார்கள்!
![Follow kummachi on Twitter](http://twitter-badges.s3.amazonaws.com/t_logo-a.png)
9 comments:
கும்மச்சிக்கு வேறு தளம் பார்க்க நேரம் இல்லையோ...?
வெற்றிலை பாக்கு அழைக்க வேண்டுமோ...?
ஏன்யா இப்படி...?
தனபாலன் புரிகிறது? வருகிறேன்.
நல்லவர்களை மறப்பதும், அல்லக்கைகளை தூக்கி நிறுத்துவதும், இந்திய ஊடகங்களின் சாபக்கேடு போலும்.
புதின் வருகைக்கு நன்றி.
பூக்கும் பூவெல்லாம்
பூஜைக்கு வருவதில்லை!!
உண்மை அருணா, வருகைக்கு நன்றி.
உண்மையிலேயே மிகச்சிறந்த மனிதர்தான்! தகுந்த நேரத்தில் நினைவூட்டல் பகிர்வு செய்தமைக்கு நன்றி!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.