Monday 21 July 2014

டீ வித் முனியம்மா பார்ட் 15

டேய் மீச இன்னாடா அல்லாரும் எங்கே போய்கிறாங்க? பொயுது விடிஞ்சா வந்துருவாக டீ அடிக்க.

வரும் லிங்கம் சாரே? முனியம்மா வருன்ன நேரம்.

டேய் இன்னாடா வருன கிருண சொல்லிகினு தமிய வறுத்து எடுக்கிற.


முனியம்மா வருன்னு சாரே... அவிட நோக்கு அல்லாரும் வருன்னு.

இன்னாடா பயம் இன்னா கடில அஞ்சல கீதா............

இன்னா முனியம்மா எதுக்கு கேக்குற......இன்னா விசயம்........

ஒன்நியம் இல்லடா சொம்மனாங்காட்டிக்கு.......ஒரு மார்கமா வரியே இன்னா விசயம்னுதான்.......

முனியம்மா கட்சில களை பிடுங்குற வேலைய தொடங்கிட்டாரு கலீனறு.

அஹான் பாய் தேர்தலுல உள்குத்து குத்தினவனுக்கேல்லாம் ஆப்பு வைக்கிறாரு, அடுத்த தபா கெலிக்கணும் பாரு...........ஆனா அல்லர்கிட்டேயும் வெளக்கம் கேட்டு எய்தி வாங்கித்தான் ஆப்படிக்கிராறு............அதான் அவரே சொல்லிகினாரே கயகம் ஜனநாயக கச்சி, இன்னிக்கி மந்திரி நாளிக்கி எந்திரி சொல்லுற மட்ட கச்சி கெடயாது.............

ஆமா முனிம்மா அவரு பேசுவாரு...........தூன துரும்பாக்கி, பேண பெருமளாக்கின்னு.............கச்சிகுள்ள ரொம்பதான் அடிச்சிகிராணுக.......அயகிரி கயகம் வெளங்காதுன்னு சாபம் வுட்டுகிராறு.

அட லோகு இவனுக எல்லாம் இப்படிதான்,--------------கெலிக்க சொல்ல கூடி ஆட்டையபோட அனைச்சுக்குவானுங்க...........அப்பால அடிச்சிப்பானுங்க.......குடும்ப சண்டையெல்லாம் குயா அடிக்கு இட்டாந்து குமுருவாங்க, அப்பால கண்ணு புளிச்சிது, காது அரிக்குதுன்னு கட்டிப்பாய்ங்க.

பா.ம.க  வெள்ளி வியா இன்ன நூசு......

நாடார் கட்சி தொடங்கி இருபத்தைந்து வருஷம் ஆயிப்போச்சாம்,-------அதான் ராமதாசு ஒரு அறிக்கை வுட்டுகிராறு,----------மாறி மாறி கூட்டணி வச்சே அப்பீட் ஆயிட்டோம் இனி கூட்டணி கெடியாது.......அல்லாம் தனியா நின்னு ஆச்சிய பிடிப்போம்னு சொல்லிக்ராறு.......

எந்த ஆச்சிய பிடிப்பாராம்----அவங்க ஆச்சியையா

டேய் லோகு சொம்மா நாக்கால் பன்னாதே---

சட்ட சபை நூசு ஏன்னா முனியம்மா.......

அது இன்னா வயக்கம் போல அம்மாக்கு சொம்புதூக்கி அமைச்சருங்க அறிக்கை படிப்பாங்க, மத்தவனுக பெஞ்சு தட்டுவாணுக............எதிர் கட்சிக்காரங்க அம்பேல் ஆவானுங்க.....

சீமான புடிச்சு உள்ள போட்டாங்களே இன்ன விசயம் முனிம்மா....

நாடாரு அந்தாளு ஒரு பத்து அல்லக்கைங்கள வச்சிகினு ஒரு மார்கமாத்தான் இருப்பானுக........அந்தாளு பப்ளிக்கா வரசொல்ல "ஒத்து ஒத்துன்னு" அவனுக அல்லக்கை கூட்டம் இல்லாத இடத்துல கொரலு வுட்டுகினே வருவானுங்க......தோல் கேட்டுல காசு கேட்டா தகராறு பண்ணிகிரானுங்க.......அதான் உள்ள புட்சு போட்டு கிறாங்க.

ஆமாம் முனியம்மா அந்தாளு உடனே அம்மாவ எதுத்து அல்லா இடத்துலேயும் ஆளு நிருத்தப்போறேன்னு...........பேசிகினுகிராறு...

இந்தம்மா அந்தாள ஒரு காமெடி பீசாத்தான் பாக்குது பாய்.

உக்ரைணுல இந்த மலேசியா விமானத்த சுட்டுகிரானுங்க......அத்தினி பேரும் பூட்டாங்க............இன்னா கொடுமபா இது.......

பாய் மலேசியா காரனுக்கு நேரம் சரியில்ல, ஒரு பிளேனு அபீட் ஆயிடுச்சு.....அத்த "உன் கண்ணு மையா என் கண்ணு மையான்னு" மை போட்டு பாரத்தனுங்க கெடிக்கல........இப்போ உக்கிரைன்ல நடக்குற சண்டையில  எவனோ சுட்டுகிறான்.......
அதுக்கு புச்சு புச்சா நெறைய கத வுடுரானுங்கோ........"புட்டின" புட்டுக்க வைக்கத்தான் சுட்டானுங்க. இன்னாவோ லோகு அத்தினி பேரும் செத்துகிரானுங்க.

இன்ன முனியம்மா விஜய் டீவில அவார்டு கொடுக்கிரானுனங்களே அத்த பாக்கல நீ.....

தோடா பயம் உன்னியப்போல வேல வெட்டி இல்லாதவன் தான் அந்த டுபாக்கூர பாத்துகினு இருப்பீங்க.......வருசா வருஷம் அவனுக இத்த போட்டு அவனவன் துண்டைகானோம் துணிய காணோம்னு ஓட வைப்பானுங்க.....டேய் பயம் நீ எதுக்கு அத்த பாக்குறேன்னு எங்களுக்கு தெரியாதா? பிகருங்க அரகுறையா ஆடிக்கினு இருக்கும்.

இன்ன முனியம்மா கேப்டனு இன்னா ஆனாரு? அவரு நூசுல வருதில்ல.....

கேப்டனு ஆசுபத்திரி போய் வந்து ரெஸ்ட்டு எத்துகினு கீறாரு..........அவர வுடு......

வேட்டி கட்டிகினு போனவனுகள உள்ளிய உடாம போன "க்ளப்"ப என்ன செய்ய போறாங்களாம் அம்மா?.

பாய் அம்மா இந்த கிளப்புங்க மேல காண்டாகீது....தி.மு.க ஆட்சி முடிய சொல்ல இந்தம்மா கட்சி ஆளுங்க  இந்த கிளப்புல தண்டல் வாங்க போய்கிரானுங்க.....நியாயமா இந்த கிளப்புங்க ஆளுங்கட்சிக்கு ஒரு ரேட்டும் மத்த ரவுடிங்களுக்கு ஒரு ரேட்டும் கொடுப்பாங்க........போன தபா வாங்க சொல்ல  நாங்கதான் ஆச்சிக்கு வருவோம் அதே ரேட்டு கொடுன்னு சொல்லி கேட்டுகிறானுங்க.........அவனுக கொடுக்கல........அதான் இப்போ இந்த விசயத்த எத்துகினு  ரிவிட்டு அடிக்கிராக.....

அப்படியா முனிமா?............

ஆமாண்டா லோகு அந்தம்மா சட்டசபையிலே சொல்லிகீது......இந்த க்ளப்புங்க எம்மாம் துட்டு வாங்குறாங்க, எம்மாம் துட்டு அரசாங்கத்து கொண்டுக்கிறாங்க, நமக்கு இன்னா லாவம், அந்த இடம் யாருக்கு சொந்தம் எல்லாத்தையும் நோண்ட சொல்லிகீதாம்.

சரிபா வுடு கோயிலாண்ட ஜனம் வர நேரம், அல்லாம் பூக்கடையான்டியே நிக்கும்.வரேன் அப்பால பாக்கலாம்.


Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

காமெடி பீசாத்தான்... சந்தேகமேயில்லை...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

சிறந்த அலசல்
சுவையான பதிவு
தொடருங்கள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.