Monday 6 February 2017

சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

மினிம்மா நேற்று எல்லா ஆளுங்கட்சி சட்டசபை உறுப்பினர்களையும் கட்சி அலுவலகம் வரவைத்து வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார்கள். ஒ.பி.எஸ் ராஜினாமா செய்துவிட்டார். இவரது சமீபத்திய செயல்களை வைத்து மக்கள் இவர் மிச்சர் மாமா இல்லை என்று ஓரளவுக்கு நம்பத்தொடங்கினார்கள். ஆனால் அவர் இப்பொழுது லாலாகடையில் ஒன்றரை கிலோ மிச்சர் வாங்கி ஓரமாக உட்கார்ந்துவிட்டார். நீங்க இவ்வளவுதானா பன்னீர்!!!!,. முதலமைச்சரின் அதிகாரம் என்னவென்றே தெரியாமல் இப்படி டொக்காகி போன ஒருவரை தமிழகம் பெற்றதற்கு பெருமைப்படும்.

 வலைதளங்களில் மினிம்மாவிற்கு எதிராக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படி தாண்டி வேலைக்காரி முதலமைச்சரா? என்று வரம்பு மீறுவதில் அவர்களின் வெறுப்பு தெரிகிறது. இந்திய அரசியல் சாசனாப்படி யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். கூத்தாடிகள் ஆகும்பொழுது வேலைக்காரி ஆனால் என்ன?

ஆனால் மக்களது கோபம் அதனால் இல்லை. அவர்கள் பொங்குவது முன்னாள் முதலமைச்சருடன் 33 வருடங்கள் உடனிருந்தார்  என்பது ஒரு தகுதியாகுமா? என்பதே வாதம்.  மேலும் முன்னாள் முதலமைச்சர் சந்தித்த வழக்குகள் அனுபவித்த சிறைவாசம் எல்லாமே மன்னார்குடி மாஃபியாவால் தான் என்று ஒரு பரவலான கருத்து உண்டு. ஜெவின் தீவிர விசுவாசிகள் தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் சொல்கின்றன.

இது வரை மக்களையே சந்திக்காத, கட்சியிலும் எந்த பதவியிலும் இல்லாமல் திடீரென்று ஒருவர் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைதான் தொண்டர்களின் கருத்தும் ஏன் பொதுவாக மக்களின் கருத்தும் கூட. சின்னம்மா முதலைமச்ச்சர் ஆகி ஆறு மாதத்திற்குள் தேர்தலின் நின்று சட்டசபை உறுப்பினர் ஆகவேண்டும். அப்பொழுது மக்கள் பதில் சொல்வார்கள் எனபது விதண்டாவாதம். அவர் தேர்தலில் வெல்ல ஒன்றும் உழைக்க வேண்டியதில்லை........காசு, பணம், துட்டு பார்த்துக்கொள்ளும்.

சமூக வலைதளங்களில் நமது நெட்டிசன்கள் இபோழுது ரொம்ப பிசி...பிசியோ பிசி....

அவர்கள் போடும் நையாண்டிகளில் சில...

இப்பொழுது தி.மு.க இளனிய உருவா ஆரம்பிச்சா  சீக்கிரம் கடை போட்டுடலாம்..........

அப்போல்லோ வரை கொண்டு போகாமல் பன்னீர் செல்வத்தை பத்திரமாக இறக்கி விட்டதற்கு நன்றி..

ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லை ஒருத்தனுக்கூட பிடிக்கலைன்னா...

பன்னீர்செல்வத்திற்கு கொண்டு போன ஸ்பெஷல் பால கவுண்டமனியாட்டம் நடுவழில நடராசன் பிடுங்கி குடிச்சிட்டாப்ல..

ராதை மாண்டாலும் கோதை ஆண்டாலும் நமக்கொரு குவளை இல்லை...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு..உச்சாநீதிமன்றம்.

மணியா நாட்டாம யாரு நம்ம குமராசமியா?

சசிகலா முதல்வராக பதவியேற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பார்....மாப்ள இவர்தான் ஆனா இவர் போட்டிருக்க சட்டை அவருதில்லை மொமென்ட்..

சசிகலா முதல்வராவதற்கு திருமாவளவன் வரவேற்பு--செய்தி # நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா இல்லை சிவலிங்கமுன்னு தெரியுமா?


Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

OPS அவர்களை சொல்லி குற்றமில்லை... பாவம்...

தலைப்பு உதவி கமல்...?

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன், தலைப்பு உதவி கமலேதான்....

'பரிவை' சே.குமார் said...

OPS - uyir payathil vilakittar....

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

'பண'நாயகத்தில் எல்லாமே நடக்கும் :)

ஸ்ரீராம். said...

அரசியல் சித்து விளையாட்டுகள்.

Avargal Unmaigal said...

வேலைக்காரன் படத்தில் நடிச்ச எம்ஜியார் முதல்வர் ஆனார் ஆனால் வேலைக்காரியாக வாழ்ந்த சசிகலா முதல்வர் ஆகக் கூடாதா?

Thulasidharan V Thillaiakathu said...

நல்லா இருக்குல்ல அரசியல் அரங்கேற்றம்!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.