Sunday 22 April 2018

கலக்கல் காக்டெயில்-183

கைய பிடிச்சு இழுத்தியா?

தமிழ் நாட்டில் இப்பொழுது போராட்டங்களுக்கு குறைவில்லை. எதுக்கு? யார் யார் போராடுவது? என்று வகை தொகை இல்லாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் உண்மையான போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இது வேண்டுமென்றே திசை திருப்பப்படுகிறதா? இல்லை இந்த அரைகுறை அறிவிலிகளின் அறியாமையால் நடக்கின்றதா என்பது புரியவில்லை. ஸ்டெர்லைட்டும், காவிரி மேலாண்மை வாரியமும் "ப்ரேகிங் நியூஸ்" என்று ஒரு சொத்தை இசைக்கோர்வையுடன் வரும்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் கையபிடிச்சி இழுத்தியா? கன்னத்த தடவினியா? அவன் கூட படுத்தியா? எவன் கூட படுத்த? என்று செய்திகள் விற்கப்படுகிறது. புது புதிதாக போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சமீபத்தில் ஊடகவியலாளர்களின் கற்பை ஏலம்விட்டவர் வீட்டில் "கல்லெறியும் போராட்டம்"😑 என்று அறிவித்து கல்லெறிந்தனர் இப்படியே போனால் இனி வரும் போராட்ட அறிவிப்புகள் இப்படியும் இருக்கலாம்.

கொலை செய்யும் போராட்டம்😆
கற்பழிப்பு போராட்டம்😋😏
கத்தி குத்து போராட்டம்😜
வெடி வீசும் போராட்டம்.😕

நடத்துங்கடா?

வேலை நிறுத்தம்

சமீபத்தில் நடந்த கூத்தாடிகளின் வேலை நிறுத்தம்தான் எனக்கு தெரிந்து யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு வேலை நிறுத்தம். பொதுமக்கள் ஐயோ புதுப் படம் ஏதும் வரவில்லையே என்ன செய்வது என்று தவித்த மாதிரி தெரியவில்லை. மாறாக தக்காளி தொல்லை விட்டுதுடா என்று நிம்மதியாக இருந்தார்கள். ஏதோ தியேட்டர்காரர்களும், க்யூப் வைத்தவனுக்கும் இருந்த வாய்க்கா வரப்பு பிரச்சினை தீர்ந்ததா என்று தெரியவில்லை, ஆனால் ஹான்... ஹான்.... கூட்டம் கூடாத..பஞ்சயாத்து முடிஞ்சு போச்சு போ..போ என்று துண்டை உதறி துரத்திவிட்டு இப்பொழுது படத்திற்கேற்றார் போல் இனி டிக்கட் வசூலிக்கப்படும் என்று ஏதோ சொல்லிக்கொண்டு அவர்களே அழையா விருந்தாளியாக வந்துவிட்டார்கள்.

ஐ.பி.எல் நடந்தால் ஏற்கனவே உதாசீனப்படுத்தப்பட்ட தொழில் நாறி விடுமென்று இந்த காவிரி போராட்டத்தை சேப்பாக்கம் திருப்பிவிட்டதன் பெரும் பங்கு "ஏன் இனிய தமிழ் மக்களே" மற்றும் "டம்ளர் சாமான்" அவர்களையே சேரும்.

ரசித்த கவிதை 

நீர்ப்பிடிப்பு நிலம் 

நகரமென எழுந்துகொண்டிருக்கிறது 
முன்பொரு நாளின் நீர்ப்பிடிப்பு நிலம்
புதிய வீட்டை  சிரத்தையோடு வடிவமைத்துக்கொண்டிருக்கும் 
பொறியாளனின் நனவில் 
எழுந்து சரிகிறது அவனது கனவு வீடு
சாந்து சுமக்கும் சித்தாள் பெண்
முதல் சாமத்தில் அரங்கேறிய இரண்டாம் கலவியை நினைந்து தானே நகைக்கிறாள் 
கட்டடக் காவலாளி இரவில் ‘தேன்கிண்ணம்’ கேட்கும்பொருட்டு பகலில் பண்டுவம் பார்க்கிறான் பண்பலைப் பெட்டியை
வேறிடம்  கிட்டாத இளஞ்சோடிகள் 
பூசப்படாத வீட்டுக்குள் காதலிக்கச் செல்கிறார்கள்
தூக்கச்சடவில் கிடாயை நோக்கிக் கம்பெறிகிறான் 
தூரத்தில் ஆடுமேய்ப்பவன்  
திருஷ்டியாய் நிற்கும் ஒற்றைப் பனையில் தொங்குகிறது தூரதேசம் போய்விட்ட தூக்கணாங்குருவியின் வீடு
சூரிய தீபம் சோர்கிற பொழுதில்
மகிழுந்துகளில் வந்திறங்கி
குத்துக்கற்களின் குறுக்கும்மறுக்குமாய் நின்று
நீளம் அகலம்  பட்டா சிட்டா
அடங்கலென நீட்டிமுழக்குவார்கள் 
யானைகட்டிப் போரடித்த மூதாதையரின்
திணை திரிந்த வழித்தோன்றல்கள்.

- ஸ்ரீதர்பாரதி   

சினிமா

தமிழ்நாட்டில் தான் போராட்டங்களுக்கு குறைவில்லை என்றால் ஆந்திராவிலும் அரைநிர்வாணப் போராட்டம்  "Casting couch" க்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு பொது இடத்தில் "டாப்பை" கழற்றி தெருவில் உட்கார்ந்துவிட்டார்.  இந்தம்மா ஸ்ரீ லீக்ஸ்  என்று  அப்பப்போ கில்மா படங்களை லீக்கிக்கொண்டு, ஆந்திர திரைத்துறையை ஆட்டிப்படைக்கும் மூன்று குடும்ப லீலைகளை துகிலுரிக்கிறேன் என்று  நாளுக்கு நாள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. அது சரி அங்கேயும் வாய்க்கா வரப்பு பிரச்சினை போல.............
 சீக்கிரம் அந்த மூன்று குடும்பங்களை அவிழ்த்துவிடுங்க சட்டுபுட்டுன்னு பார்த்துட்டு நாங்க போகணும், நெறைய வேலை இருக்கில்ல!!!

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

ராஜி said...

சினிமாக்காரர்கள் கோமாளியாகி ரொம்ப நாள் ஆச்சு. கேப்டன் சங்கத்தலைவரா இருந்தவரை ஓரளவுக்கு நல்லா இருந்துச்சு. இப்ப விசால் வந்தபின்!! ஒன்னும் சொல்லுறதுக்கில்ல

கும்மாச்சி said...

உண்மைதான். இதில் கொடுமை என்னவென்றால் முன்பு ஒன்று இரண்டு கோமாளிதான் இருந்தார்கள் இப்பொழுது அவனுங்க எல்லாமே கோமாளிதான்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.