ரஜினியின் உடல்நலத்தில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் மருத்துவமனை செய்திக்குறிப்பு அவரது ரசிகர்களுக்கு நிம்மதி தந்திருக்கிறது.
கடந்த ஒருவாரமாக என்.டி.டி.வி, ஹெட்லைன்ஸ் டுடே என்று எந்த சேனலை பார்த்தாலும் ரஜினி உடல் நலம் பெற்று திரும்ப வரவேண்டும் என்ற ஸ்க்ரோல் மெசெஜ் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவரது எண்ணற்ற ரசிகர்கள் விதவிதமான யாகங்கள், தங்கத்தேர் இழுத்தல், அலகு குத்துவது, மண்சோறு உண்பது என்று நேர்த்திக்கடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஜூன் 1 இந்தியா டுடே இதழ் கவர் ஸ்டோரியாக “ரஜினி எனும் மந்திரம்” என்று ஒரு கட்டுரை வெளியிருக்கிறது. “தலைவா உன் உடம்பு சரியாகிவிடும் ஐஸ்வர்யா ராய் மகளுடன் ஹீரோவாக நீ நடிக்கப் போறே” என்று அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் ட்வீட்டுகிறார் என்ற வாக்கியங்களுடன் கட்டுரை தொடங்குகிறது.
சிகிச்சை பெற்று வரும் தலைவரின் தரிசனம் கிடைக்காதா என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
ரஜினி ஐ.சி.யூவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்று செய்திக் கேட்டவுடன் போரூர் பிரதான சாலையே போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவிற்கு கூட்டம் கூடியிருக்கிறது.
தமிழ் திரைப்படத்திற்கு அவர் தங்கச்சுரங்கம். இவரால் வாழ்வு பெற்ற தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மிக அதிகம். இவரது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையே வந்தாலும் அவர் ரசிகர்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல் எல்லாம். ஐநூறு கோடி வரை பணம் புரளும் தமிழ் சினிமா ரஜனியை சுற்றித்தான் இயங்குகிறது என்றால் அது மிகையாகாது. திரையுலகின் மீது இவர் போல செல்வாக்கு செலுத்துபவர்கள் யாரும் கிடையாது என்கிறார் சன் பிக்சர்ஸின் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.
இவருக்கு திரைப்படத்துறை, அரசியல்தாண்டி நண்பர்கள் பல. இவருக்கு சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உள்ள ரசிகர் கூட்டம் ஏராளம்.
அவர் எஜமான் படத்தில் சொல்வது போல் “இது அவராக சேர்த்தக் கூட்டம் அல்ல தானாக சேர்ந்தக்கூட்டம்”. இவையெல்லாம் அவர் திரையில் செய்யும் சாகசங்களையும் தாண்டி நல்ல மனிதராக அடையாளம் காட்டிக்கொண்டதால் தான் என்பது உண்மை.
ரஜினி, நீவிர் விரைவில் நலம் பெற வேண்டுகிறோம்.
தலைவா “ராணா” வாக விரைவில் எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஒருவாரமாக என்.டி.டி.வி, ஹெட்லைன்ஸ் டுடே என்று எந்த சேனலை பார்த்தாலும் ரஜினி உடல் நலம் பெற்று திரும்ப வரவேண்டும் என்ற ஸ்க்ரோல் மெசெஜ் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவரது எண்ணற்ற ரசிகர்கள் விதவிதமான யாகங்கள், தங்கத்தேர் இழுத்தல், அலகு குத்துவது, மண்சோறு உண்பது என்று நேர்த்திக்கடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஜூன் 1 இந்தியா டுடே இதழ் கவர் ஸ்டோரியாக “ரஜினி எனும் மந்திரம்” என்று ஒரு கட்டுரை வெளியிருக்கிறது. “தலைவா உன் உடம்பு சரியாகிவிடும் ஐஸ்வர்யா ராய் மகளுடன் ஹீரோவாக நீ நடிக்கப் போறே” என்று அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் ட்வீட்டுகிறார் என்ற வாக்கியங்களுடன் கட்டுரை தொடங்குகிறது.
சிகிச்சை பெற்று வரும் தலைவரின் தரிசனம் கிடைக்காதா என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
ரஜினி ஐ.சி.யூவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்று செய்திக் கேட்டவுடன் போரூர் பிரதான சாலையே போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவிற்கு கூட்டம் கூடியிருக்கிறது.
தமிழ் திரைப்படத்திற்கு அவர் தங்கச்சுரங்கம். இவரால் வாழ்வு பெற்ற தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மிக அதிகம். இவரது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையே வந்தாலும் அவர் ரசிகர்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல் எல்லாம். ஐநூறு கோடி வரை பணம் புரளும் தமிழ் சினிமா ரஜனியை சுற்றித்தான் இயங்குகிறது என்றால் அது மிகையாகாது. திரையுலகின் மீது இவர் போல செல்வாக்கு செலுத்துபவர்கள் யாரும் கிடையாது என்கிறார் சன் பிக்சர்ஸின் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.
இவருக்கு திரைப்படத்துறை, அரசியல்தாண்டி நண்பர்கள் பல. இவருக்கு சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உள்ள ரசிகர் கூட்டம் ஏராளம்.
அவர் எஜமான் படத்தில் சொல்வது போல் “இது அவராக சேர்த்தக் கூட்டம் அல்ல தானாக சேர்ந்தக்கூட்டம்”. இவையெல்லாம் அவர் திரையில் செய்யும் சாகசங்களையும் தாண்டி நல்ல மனிதராக அடையாளம் காட்டிக்கொண்டதால் தான் என்பது உண்மை.
ரஜினி, நீவிர் விரைவில் நலம் பெற வேண்டுகிறோம்.
தலைவா “ராணா” வாக விரைவில் எதிர்பார்க்கிறோம்.
![Follow kummachi on Twitter](http://twitter-badges.s3.amazonaws.com/t_logo-a.png)
No comments:
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.