பிரஸ்ஸல்ஸ் அன்ட்வேர்ப் நகரை விட்டு பெட்டி படுக்கைகளை எடுத்துகொண்டு அடுத்த
நாள் காலை ஃபிரான்ஸ்
நாட்டை நோக்கி பயணமானோம். காலை பத்துமணியளவில் பாரிசின் வடக்குப் பகுதியில்
நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள “சேண்டிலி” என்ற நகரத்தில் முதலில் இறங்கினோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWsC8WJBn758zdRKNdEFfrAObOvp0tKiKSdjX18UtsN88z7x41KsrUet0CbE6mwwOG9W01DJKzI3LQgE10jbKAS-FksY2FqLeURm6Ojt9cMjWho4S6qYyXQM0SJgBHXYFQjYGm8K1iYIU/s640/SAM_1496.JPG) |
சேன்டிலி கோட்டை |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEutAo-plMS-hEYaH0Y5KbLyzsdg9Zz6aD81kfFOz6cjGsuDlDoCpj8SJljQNQKXaCKCgy143t68Ro8OzCdC4FEpAwuod4A_QM618l1kmtWEv-Rpn8kf5FxiiBZljPNx8j5DF5Bl8au-g/s640/SAM_1504.JPG) |
அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு கண்ணாடி ஓவியம் |
இங்கு ஒரு பழங்கால
கோட்டை உள்ளது. அங்கு வந்த உள்ளூர் வழிகாட்டி கோட்டையின் பெருமையையும் அங்குள்ள
அருங்காட்சியகத்தின் பெருமையும் பிரெஞ்சு
கலந்த ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் பேச்சை பாரிஸ்
நகரக்கனவில் கேட்டுக்கொண்டிருந்தோம். எங்களை அழைத்து சென்ற சுற்றுலா இயக்கி அந்தக்
கோட்டையிலேயே மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவிற்கு பின் பாரிஸ்
நகரை நோக்கி பயணமானோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh64jwlhD8fTaChndkhzeOqkz95mGOx0G-MnImXp57eru4cCMzT-3KFdZZvjKqhNt5Etjxpwa5Z8emjUmJX-SmLXZPmVwmKipD3yg_1T2hpb5RNagOkzqyDkHF-OEqZ1KuDEoMV0Io0-Ho/s640/SAM_1557.JPG) |
ஐபில் டவர் |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFEl5hQVkT4b07L4DfI3RifRqH2Y6onOtj-_PsipY-4WLf3kri0eKVZ_9swcPVKFiZZk5rm09Kb1CC-ux5ugugsvrvTDGqlJd4N4wj36cRDvADlBXlHANwVgXy5AfAYL1Ju-IMqO5scuU/s640/SAM_1562.JPG) |
கழுகு பார்வையில் பாரிசின் ஒரு பகுதி |
பாரிஸ் நகரம்
வந்தவுடன் நேராக உலகப் புகழ்பெற்ற “ஐபில்” டவர் சென்றோம். அங்கு நான்கு
மின்தூக்கிகளில் மூன்று பழுது அடைந்திருக்கிறது ஆதலால் மேலே செல்வது கடினம் என்று
சொல்லிக்கொண்டிருந்தார் வழிகாட்டி. ஆனால் நாங்கள் சென்ற வேளை இரண்டு வேலை
செய்துகொண்டிருந்தது. ஆதலால் டவரின் உச்சி வரை சென்று பாரிஸ் நகரின் அழகை
ரசித்தோம். பின்னர் "செயேன்" ஆற்றில் படகு
சவாரி. மாலை பாரிஸ் நகரின் விடுதி ஒன்றில் சற்று இளைப்பாறி இரவு உணவை
முடித்த பின் பிரசித்த பெற்ற “லிடோ” காட்சிக்கு சென்றோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7OtyW0D7y_2cQtc19UejjRMNFEu0KkYUWH-sLcOfajb2HhltH2AYrZ-bpiGVANz3KjKjT1L9etPMWSC9UEk6RicmdFEa8jEAdlze4NAJ-2LkUkXa-NGpVVYUYj_QZdnu21kqrhv_5xJA/s640/SAM_1664.JPG) |
செயேன் ஆற்றில் படகு சவாரி |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdsEdahGaPN-ZvA0r1UJNDFFZ6o4tdBb6tB6Jw57BzLYg_v-L0T0wQirLUCFUOri0GxNRIQxubOHSfFflJfBEy7h9On89p0eW-8f0nVw3Q3VVZD2mZrUqEqCNnDGNSLxx9iFIsmuDpebs/s640/SAM_1570.JPG) |
பாரிஸ் நகரின் ஊடே ஓடும் அழகிய ஆறு |
இந்த
காட்சியில் வரும் நடனப் பெண்கள் மேலாடை இல்லாது வருவார்கள் என்று
கேள்விபட்டபடியால் மனைவிக்கு முதலில் தயக்கம். ஆனாலும் பார்த்துதான் வருவோமே என்று
சென்றோம். காட்சி இரவு பதினோரு மணிக்கு தொடங்கி இரண்டு மணிக்கு முடிந்தது. நாங்கள்
நினைத்தது போல் இதில் கேபரே வகை ஆபாச நடனங்கள் இல்லை. அவர்களின் கலாசார நடனம்.
மேலாடை இல்லை என்றாலும் துளியும் ஆபாசம் இல்லாத நடனம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6vffnQw43usvV2m_t0qP58WttMaevsukBhguc9rBJWKBBEUgGeHzn7kk7w5LC3DIL7DXFoxWeQvL5VWvIB2nPqmXLsyTniR7yjoNOtRxr5BkwVFw4VUGcZ9DxPpB4te5kPc-_c4b7NOk/s640/SAM_1700.JPG) |
யூரோ டிஸ்னி |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXHJDid16f7c3FmvQgQAmwGdpiAIeXRkSGIytmdP1-Ygpsk5T-SyXzIEgZVxH2Nae4xw18kwrXRzUcGdTpI4mTh6c7JCXFROfr7L80QD8OSko5JvvZP4XSBw8as-5vHiZNNhpSKlVwGZw/s640/SAM_1734.JPG) |
கடை கன்னிகளை நோக்கி |
அடுத்த நாள்
காலை யூரோ டிஸ்னி சென்றோம். இது உலகத்திலேயே பெரிய டிஸ்னிலாண்ட். பிள்ளைகள்
எங்களுடன் வாராததால் டிஸ்னிலாந்தில் எங்களுக்கு ஏனோ நாட்டம் ஏற்படவில்லை. மேலும்
ஹாங்காங்கில் நாங்கள் ஏற்கனவே இதை முழு நாள் இருந்து அனுபவித்து விட்டோம். ஆதலால்
குழுவில் இருந்த ஒரு சில பேர்
சேர்ந்துகொண்டு மெட்ரோ ரயில் பிடித்து அருகில் உள்ள ஷாப்பிங்மால் சென்று,
கொண்டு வந்த பணத்தை காலி செய்தோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ09pT_NehMbUn4ygAwSIYnlQUpqXkFowUn8S81YAgcMlE06vjaPyUjqdS8P-_VOmmlViR_JLFLy3tq34J0WPhjO7qqungE6p70FdhYDujHSYegAzhAfo_mo1RvgL1MtyOjcdPQ-3yoV8/s640/SAM_1712.JPG) |
யூரோ டிஸ்னி |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKsA1yjDGmjDI0UeXQrxeMGt-ZeOZHaB6OjB-kxM4iu5jYPJx-434FfnU7_b2UOtmr8_fGYy2ecu7UFc55W2O0BX7UC5_SH_OlAsPF5wFsxQoY-Bkup6-fNhoFvIWk3QQQEMJFkAStCgI/s640/SAM_1847.JPG) |
லூவர் அருங்காட்சியகம் |
அடுத்த நாள் காலை
யூரோஸ்டார் ட்ரெயினில் லண்டன் நோக்கிப் பயணித்தோம்.
லண்டன்----------------------------பயணம் தொடரும்.
Post Comment
8 comments:
படங்களும் பதிவும் அருமை...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)
கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!
தனபாலன் வருகைக்கு நன்றி.
அருமையான அனுபவங்கள்! நன்றி!
இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html
சுரேஷ் வருகைக்கு நன்றி. உங்கள் தளத்தில் அஷ்டமி நாயகன் படித்துவிட்டேன்.
அழகு .அருமை.
எஸ். ரா. வருகைக்கு நன்றி.
suma oasilaiye engalai kondupoiteenga alla edathukum. arumai arumai. thodarungal thodarungal ungal katturaiyai
மகே வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.