Wednesday 2 April 2014

கலக்கல் காக்டெயில்-141

போடுங்கம்மா ஓட்டு

இந்த தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டி போடுவதனால், பிரசாரங்களில் காமெடி தோரணம் கட்டி ஆடுவதில் வியப்பில்லை. பிரதான கட்சிகளோ ஒருத்தர் சொத்து மதிப்பை மற்றொருவர் விமர்சித்து சேரை வாரி அடித்துக்கொள்கிறார்கள். மெகா கூட்டணியில் நிறைய காமெடி பேச்சாளர்கள். எல்லோரையும் சகட்டு மேனிக்கு நக்கலடித்து கூட்டம் சேர்க்கிறார்கள். சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி மக்கள் சில பிரச்சினைகளை மட்டுமே மனதில் கொண்டு தேர்தலை எதிர்கொல்கிறார்களாம்............அவற்றில் முதலில் விலைவாசி பிரச்சினை.  இரண்டாவதாக மின்வெட்டு. பின்னர் வேலையில்லா திண்டாட்டம், ஊழல் மற்றும் குடிநீர் பிரச்சினை.

இருந்தாலும்  வெற்றியை நிர்ணயிப்பதில் பணமும், சரக்கும் பெரும் பங்கு வகிக்கப்போவது என்பதை மறுப்பதற்கில்லை.

புதுமைப்பித்தன்

அண்மையில் நண்பரிடமிருந்து புதுமைப்பித்தனின் 103 சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு "புதுமைப்பித்தன் கதைகள்" என்ற புத்தகம் எடுத்து வந்தேன். எம். வேதசகாயகுமார் தொகுத்து அளித்திருக்கிறார். இதற்கு முன்பு புதுமைப்பித்தன் சிறுகதைகளில் விட்டுப்போனவை பலவற்றை இந்த தொகுப்பில் படிக்க முடிந்தது.

புதுமைப்பித்தனுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழில் சிறுகதை எழுதியவர்கள் உண்டு. எனினும் உலக இல்லைக்கியத்தின் தரத்துக்கு இணையாக உயர்ந்து நிற்கும் சிறுகதைகளை படைத்து அளித்தவர்  புதுமை பித்தனே ஆவார். என்று த. ஜெயகாந்தன்குறிப்பிடுகிறார்.

பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் போன்ற கதைகள் புதுமைப்பித்தன் என்றவுடன் நியாபகம் வருபவை.

கட்டில் பேசுகிறது, மோட்சம், நியாயம், செல்வம் போன்று இன்னும் நிறைய முத்துக்கள் இருக்கின்றன.

புதுமைப்பித்தன் "சிறுகதை" இலக்கியத்தின் முன்னோடி என்பதில் சிறிதளவும்  ஐய்யமில்லை.

ரசித்த கவிதை

 பாட்டும் தொடையும் அடியுமே

ஆசிரியப் பாவெண்பா கலிப்பா வஞ்சிப்பா
அவ்வண்ணமே பாவகை நான்குண்டு கொள்ளப்பா
யோசித்து நீகட்டப்பா எண்வகை தொடையப்பா
அப்பப்பா அப்புறம்காண் பாவேயொரு அழகப்பா!

பாவடிக்கும் இதுபோல் பல்வகை உண்டாம்
பகுத்துச் சொன்னாரே பஞ்சமென்று அதுவாமே
மேவுசீர் இரண்டிருப்பின் குறளடியாம் சிந்தடியே
முச்சீர் நாற்சீர் அளவடி ஐய்சீர்கள் நெடிலடி
முடிவாய் கழிநெடிலடிக் காம்அறுசீ ரும்மேலாம் !

 -------------------நன்றி: வ.க. கன்னியப்பன்

ஜொள்ளு











Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

Unknown said...

ஜொள்ளு படத்தில் முக்கோண வெயிலும் வெயில் சார்ந்த இடமும் அருமை !
த ம +2

கும்மாச்சி said...

பகவாஞ்சி வருகைக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... ரசித்தேன்..

கும்மாச்சி said...

சௌந்தர் வருகைக்கு நன்றி

”தளிர் சுரேஷ்” said...

துட்டுதான் ஓட்டை நிர்ணயிக்கிறது என்பது உண்மை! அதுவே கொடுமையாகவும் ஆகப்போகிறது! கவிதை சிறப்பு! நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

துட்டுதான் ஓட்டை நிர்ணயிக்கிறது என்பது உண்மை! அதுவே கொடுமையாகவும் ஆகப்போகிறது! கவிதை சிறப்பு! நன்றி!

அருணா செல்வம் said...

வெற்றியை நிர்ணயிப்பதில் பணமும், சரக்கும் பெரும் பங்கு வகிக்கப்போவது என்பதை மறுப்பதற்கில்லை.
மனிதர்களுக்கு எங்கே மதிப்பிருக்கிறது...?

அனைத்து்ம் கலக்கலாக இருக்கிறது கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதையும் நல்லா இருக்கு...!

Unknown said...

சோக்காக் கலக்கிக் கீறபா...!
அந்தக் கவுஜ மெய்யாலுமே சோக்கா கீதுபா...!
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

கும்மாச்சி said...

முட்டாநைனா நன்றிபா...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.