Thursday 31 July 2014

டீ வித் முனியம்மா--------பார்ட் 16

இன்னா முனியம்மா சூடா இருக்குது............டீ குடிக்குமோ இல்லே தனப்பாயிட்டு வேணுமோ.

எட மீச காலில பெஜாராக்காத ..............உங் கடியாண்ட டீயே தனப்பாதான் இருக்கும்......ஏதோ ஒன்னு போடுறா.........

இன்னா முனியம்மா கும்பகோணம் ஸ்கோலு வயக்குல தீப்பு வந்திச்சாமே

அத்த ஏன் கேக்குற பாய், துட்டு வாங்கிக்கின்னு நுப்பது புள்ளிங்க படிக்கிற இடத்துல ஆயிரம் புள்ளிங்க படிக்கவுட்டானுகளே பேமானிங்க அவனுகள எல்லாம் வுட்டுட்டானுங்க, ஸ்கோல நடத்துற கெயம் கெட்டைங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்துகிறாங்க. அந்த ஸ்கோலு நடத்தின புலவர் பயனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், 940 வருசம் ஜெயிலாம்......

மொதல்ல இருபத்தினாலு பேருங்க மேல கேசு போட்டாங்களே எத்தினி பேருக்கு தண்டன கொடுத்துகிறாங்க.......

அடப்போ நாடாறு, இந்த கேசு ஆரம்பிக்க சொல்லவே மூணு பேரு எஸ்கேப் ஆகிட்டானுங்க.........அவனுகளுக்கும் கொயந்தைங்க செத்ததுக்கும் சம்பந்தம் கெடியாதுன்னு அரசே கேஸ  வாபஸ் வாங்கிடுச்சு............

கச்சிகாரங்களா இருப்பானாங்காட்டியும்...........

அது நமக்கு தெரியாது லிங்கம் சார், கச்சிகாரனுங்களா?  இல்ல துட்டு கொடுத்தானுங்களா? இன்ன மேட்டரோ............

மீதி இருபத்தியொரு பேருல எத்தினி பேருக்கு தண்டனை கொடுத்துகிறாங்க, வெவரம் சொல்லு முனியமா............

டேய் பயம் இப்போதாண்டா நீ வெவரமா இந்த மாதிரி மேட்டருல கேள்வி கேக்குற? எப்பவும் சினிமா நூசு பிகருங்க பத்திதான் பேசுவ.........இன்னா அஞ்சலா மேட்டரு வேல செய்யுதா? பத்து பேருக்கு தண்டன கொடுத்துகிறாங்க, பதினொரு பேர இந்த தீவிபத்துக்கும் அவங்களுக்கு சம்பந்தம் கெடியாதுன்னு ஜட்சு சொல்லிகிறாரு.

ஆடி மாசம் சாமி கும்புட கொயந்திங்கள உள்ளார வச்சு பூட்டிட்டு போச்சே ஒரு டீச்சர் அத்த இன்னா செஞ்சாங்க..........

வாடா லோகு, அம்மன கும்புடறேன்னு அது வகுப்புல கீற கொயந்தைங்கள உள்ளார வச்சு வெளியே தாப்பா போட்டு கோயிலாண்ட போயுக்கீது.....தீ பிடிக்க சொல்ல கொயந்திங்க அல்லாம் வெளிய வரமுடியாம செத்துகீதுங்க.......அந்த டீச்சர வுட்டுட்டானுங்க.........

கோர்ட்டுல ஒரு அம்மா கண்ண துணிய வச்சி கட்டி கீறாங்களே அது இதுக்குதனா,

ஆமாண்டா பயம், இந்த தபா துட்டு வச்சி கட்டிகிறாங்க போல...........

இன்னா முனியம்மா திரியம் நம்ம ஊருல செயினு இஸ்குற பேமானிங்க வந்துட்டானுங்க போல, மோட்டார் பைக்குல வந்து தாலி உருவினு போறானுங்க......

ஆமா பாய், அம்மா ஆட்சிக்கு வந்த சொல்ல சொல்லிச்சு அல்லாம் வேற மாநிலத்துக்கு பூட்டானுங்கன்னு.......அவனுக எங்கியும் போல........இங்கதான் கீறானுங்க........போன வாரம் கூட அண்ணா நகரு, சாந்தி காலனிப்பக்கம் வேலைய காமிச்சிகிரானுங்க........

இவனுகள இன்னா செய்யுறது...........

பொம்பளைங்கதான் உசாரா இருக்கணும்............இப்படிதான் ஒரு நாலு மாசம் முன்னால நானு கோயிலாண்ட கடிய அடைச்சிட்டு பூக்கூடைய தூக்கிகினு நம்ம கொண்டித்தோப்பு பஸ் ஸ்டாண்டு போற சந்துல போய்கினு இருந்தன்.

அப்பால.............

இருடா லோகு, எனிக்கி முன்னாடி ஒரு பொம்பள சுடிதாரு போட்டு தோளுல பை மாட்டிகினு போயிருந்திச்சு. நான் ஒரு இருபதடி பின்னாடி நடந்து வாறன்....பின்னால ஒரு பைக்கு சத்தம் கேட்டுது........அவனுங்க எண்ணிய தாண்டி அந்த பொம்பளயாண்ட போனானுங்க........

அப்பால........

அப்பால அந்த பொண்ணு நவர சொல்ல இந்த பேமானிங்க கயுத்துல கைய வச்சானுங்க. அது டக்கரா அவனுகள வண்டியோடு சேத்து தள்ளி வுட்டுரிச்சு.......நா ஓடி போயி வண்டில கீற சாவிய  புடுங்கி குப்ப தொட்டியாண்ட வீசிட்டேன்..........ஒரே இருட்டா கீது.........

அப்பால

அப்பால நானும் அந்த பொம்பளையும் கொரலு வுட்டாம, அங்க பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருந்த ஜனம் ஓடியாந்து ரண்டு பேமானிங்களையும்  புட்ச்சி போலிஸ் டேஷனாண்ட இட்டுகினு போயி இனிஸ்பெக்டர்  கிட்ட வுட்டுட்டானுங்க......

அப்பால........இன்னா ஆச்சு?

தெரியாது பாய் அவனுங்க இன்னா ஆனானுங்கன்னு..........

அப்பால முனியம்மா நம்ம இந்தியாகாரனுங்க நொம்ப மெடலு வாங்கிக்கிறாங்க போல.....

அஹான் பாய், ஸ்காட்லாண்டுல நடக்குதே காமன் வெல்த், நம்ம ஊருல நடக்க சொல்லகூட ஆட்டைய போட்டானுங்களே அதே போட்டிதான், அதுல நம்மாளுங்க நல்ல கெலிச்சிகிரானுங்க.............நம்ம தமிழ் ஆளு சதீசு சிவலிங்கம்  கூட நல்ல பளு தூக்கி தங்க மெடலு வாங்கிக்கிராறு...........அம்மா கூட அவருக்கு அம்பது லட்சம் கொடுக்கபோவுது.........

சரி முனியம்மா நம்ப மேட்டருக்கு வா........

இன்னடா சினிமாகாரிங்க படமா.........

தோ இந்த பேப்பருல போட்டுக்கிறான்...................நீயே பாத்துக்கடா...........பயம்.









Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

Unknown said...

கொடுமை கொடுமை கொந்தளிச்ச என்னை கடைசியில் கூல் பண்ணிட்டீயே ,ஹிஹி !
த ம 2

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
உரையாடல் வடிவில் புன்னகை பூக்கும் வரிகள் கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

கும்மாச்சி said...

நன்றி ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

கும்பகோணம் தீர்ப்பு சரியில்லைதான்! கலக்கலான பதிவு! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

மாதேவி said...

தகவல்களுக்கு நன்றி.

கும்மாச்சி said...

மாதேவி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

டீ வித் முனியம்மா....டீ சூப்பர். முனியம்மாவும் கிளாமர் படமெல்லாம் ரசிக்கறாங்கோ.....

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

sarathy said...

Class of its own. Liked the way narated.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.