Thursday 2 October 2014

டீ வித் முனியம்மா பார்ட்-22

இன்னாடா ஊருல இம்மாம் நடந்துகினு கீது ஒன்னியம் சொல்லாம பேசாம குந்திகினு கீற லோகு.

இன்னா முனிம்மா நீ வேற பேஜார் பண்ணாத, நம்ம கவல நமக்கு, வியாவாரம் ஆவனுமில்ல, கடிய அடைக்க சொல்லி அடிக்கிறானுங்க பேமானிங்க இன்னாத்த செய்யுறது.

ஆமாண்டா உனுக்கு கஸ்டம்தான், பாவம் நீ இன்னா செய்வ.

அஹான் உனிக்கி இன்னா, பேமானிங்க வந்தாங்காட்டியம் பூக்கூடைய தூக்கிகினு ஓடியாந்துருவ.

அதானே செல்வம், உனுக்கு இன்னாடா ஆச்சி, பயத்த தூக்கிகினு பூட்டானுங்களா?

த ரௌசு செய்யாத? கல்லால கையவுட்டு அத்தினி துட்டையும் லவட்டிட்டாணுக.

கொண்டித்தோப்பாண்ட ஒருத்தனும் கடைய ரண்டு நாளா தொறக்கல.

அது சரிடா கட்சிக்காரன் ஆர்பாட்டம் செய்யுறான், இந்த சினிமாகாரனுவளும் குருட்டு கண்ணாடிய போட்டுகினு ஊயலுக்கு கொடி பிடிக்கிரானுக இந்நாத்த சொல்ல.

ஏன் முனிம்மா உள்ள போட்டுட்டானுங்க சரி. அம்மா ஊயல் செய்திருக்குன்னு சொல்லி ஜட்ஜி ஐயா புட்டு புட்டு வச்சிகிறாரே, இன்னா மேட்டரு.

பாய் , அந்தம்மா கணக்குல காட்டாம அறுபது கோடிக்கு சொத்து வாங்கிக்கீத்து, அப்பால வளர்ப்பு மவன் கண்ணாலத்துக்கு துட்டு நான் கொடுக்கலேன்னு சொல்லுது. அரசு வக்கீலு இன்னா பண்ணிக்கிறாரு அம்மா கைஎழுத்து போட்ட செக்க காட்டிகிறாங்க, இருவத்தேயு லச்சமாம். அது போல அவுங்க வூட்ல வேல செஞ்ச ஒரு ஆளு சசிகலா அப்பப்ப பணமூட்ட கொடுக்கும் அத்த நான்தான் பாங்கில போடுவேன்னு சொல்லிகிறாரு. அதான் மெயின் மேட்டராம்.

ஐயா தொ பாருடா, அப்பால இன்னா முனிம்மா.

லிங்கம் சாரு அந்தம்மாக்கு போன வக்கீலுங்க சரியா எந்த பாயிண்டும் சொல்லல, சொம்மா திராட்ச தோட்டத்துல வந்துதுன்னு சொன்னா எவன் நம்புவான், அல்லாம் பீலா உடுராங்கனு தெரிது.

அதானே முனிமா நமக்கே தெர்து, ஜட்ஜுக்கு தெரியாதா?

அஹான் நாடாரு. இந்த கட்சிகாரனுங்க பெங்களூரு போயி நல்லா உண்ட வாங்கிக்கிரானுங்க. சொம்மா கோர்ட்டாண்ட நின்னுகினு டென்சன் செஞ்சதுல, போலீஸ்காரனுங்க மெர்சல் ஆயி லத்திய உட்டு ஆட்டிகிரானுங்க, ஒரே டமாசு பா.

அம்மா பதவிய உருவ சொல்ல, அல்லா மாந்திரியும் அயுதுகினே பதவி ஏத்துகிரானுன்களே அது குத்தமாவாது.

ஆமாண்டா பயம் அந்த கன்றாவியதான் டீவில காட்னானுன்களே , அத்த இன்னா சொல்றது. இந்திய சட்டத்த மதிப்பேன்னு சொல்லி அயுவுறாங்க அதுக்கு அல்லாரையும் புடிச்சுகினு உள்ளார வக்கணும்.

முனிம்மா இந்த ஜனம் இந்தம்மா சுதந்திர போராட்டத்துல உள்ளிய போனாமாறி இந்தா கூவு கூவுதுங்க.

அதான பாய், நம்ம துட்டுல ஆட்டைய போட்டு உள்ள போயகீது, இன்னாவோ தர்ம தேவதைங்கறான், கடவுள்ங்கிறான். இன்னாத்த சொல்ல. இது போல ஊயல் செய்யுற அல்லா ஆளையும் புட்ச்சி  உள்ள வைக்கணும்.

முனிம்மா இந்த கட்சிகாரனுங்க ஏன் தி.மு.க பேருல காண்டாவரனுங்க, சூனா சாமி தானே கேசு போட்டாரு.

அந்தாள ஒன்நியம் செய்ய முடியாது, அதான் இவனுங்க பேருல காண்டாவரானுங்க.

சேப்பாக்கத்துல சினிமாகாரன் கூட்டம் போட்டானுங்களே..........அந்த பக்கம் சரக்கெடுத்துகினு வந்துகினேகீறேன் போலிசு அந்த பக்கம் போவாத உண்ணாவிரதம் இருக்காங்கனு வெரட்டி வுட்டுட்டான்.

ஆமாண்டா செல்வம், இவனுங்க சினிமாவுலதான் ஊயல் ஊயல்ன்னு ஊயளுக்கு எதிரா படம் எடுப்பான், ஆனா இவனுக எடுக்குற படமெல்லா கருப்பு பணத்துல. அட இன்னா அழுவு அழுவுரானுங்க, ஒரு பேமானி சொல்லுறான் அம்மாவ வெளில உடாங்காட்டியும் வெளிநாடுக்கு ஓட்டிடுவானாம். பேமானி இவன் இருந்தா இன்னா? இல்லாங்காட்டி இன்னா? சேட்டு பொம்பிளைங்கள தடுவுற பேமானிங்க.

நீ சொம்மா மெர்சலாவாத முனிம்மா.

இன்னாடா மெர்சலாவாத. நம்ம துட்டுல ஆச்சி செஞ்சுகின்னு ஆட்டைய போடுறானுங்க. பழக்கட, டீகட ஆளுங்க எல்லாம் அரசியலில் வந்துகினு ஊர் சொத்த கொள்ள அடிக்கிறானுங்க. நான் இருவது வருசமா பூ வித்துகினு கீறேன், நீ பழம் வித்துகினுக்கீறே.

அஹான் முனிம்மா, டெல்லில வேற ப்ரெசிடென்ட் வூட்ல முன்ன குந்திகினு கீரானுங்கலாம், அம்மாவ வெளிய வுடுன்னு சொல்லிகினு.

ஆமாண்டா மொத்த ஆளுங்களும் நம்ம தமியன நக்கல் செயுரானுங்க.
பதினெட்டு வருசமா நல்லா விசாரிச்சுதான் தீர்ப்ப சொல்லிகிறாங்க, அத்த மதிக்க மாட்டேன்னு கொரலு விடுறானுங்க.

சரி வுடு முனிம்மா நாலு நாளா இதேதான் பேச்சாகீது. புளிப்பூத்தி நம்ம பொயப்ப கெடுக்குது.

உன் பேச்சும் கரீக்டுதான் பாய்.

மோடி அமெரிகாவுலேந்து வந்துகினாரா?

அஹான் பாய் வந்துகினு தொடப்பம் எட்த்து தெருவ கூட்டிகினு கீறாரு. சரி பாய் வுடு நம்ம பொயப்ப பாத்துகினு போய்கினே இருப்போம்.








Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

Mahesh said...

இவனுங்க சினிமாவுலதான் ஊயல் ஊயளுக்கு எதிரா படம் எடுப்பான், ஆனா இவனுக எடுக்குற படமெல்லா கருப்பு பணத்துல.///


super
pathivai rasichen.

கும்மாச்சி said...

மகேஷ் வருகைக்கு நன்றி.

kingraj said...

பதிவு டக்கரா கீது வாத்தியாரே.

கும்மாச்சி said...

கிங்ராஜ் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

மசாலா டீ சூப்பர்! அம்மாவுக்கு குன்ஹா சூப்பர் ஆப்பு வைச்சிட்டார் போல!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

இன்றைய ஜொள்ளு ஹி ஹி ஹி

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

இன்னாபா முனிம்மா இம்மாம் கியி கியிக்கரா!!!!! ரசித்தோம்!

Yarlpavanan said...

சிறந்த பதிவு
தொடருங்கள்

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

காசிராஜலிங்கம் வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

சும்மா நச்சின்னு இருக்குங்க....

பதிவும் அம்மாவோட படமும்....

கலக்கல்....

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

Anonymous said...

Saettu ponna thadavura baemani kaarthi thaana?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.