Saturday 4 October 2014

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.............

படகோட்டி பட பாடல்--கொடுத்ததெல்லாம் கொடுத்தான் மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
குன்ஹா நாலு வருடம் கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார் - இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார்-இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்

அறுவது ரூபாய் வருமானமென்றால்
அறுபத்தியாறு கோடி சேர்ந்திடுமா?
சேர்த்ததெல்லாம் நியாயமென்றால்
கணக்கு எங்கே போனதம்மா?
உனக்காக ஒன்று
ஊருக்காக என்றும்
சட்டம் தனியாக கொடுப்பதில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
குன்ஹா நாலு வருடம் கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார் - இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார்-இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்

கொடுத்தவர்மேல் குறையுமில்லை
ஆர்ப்பாட்டங்களில் நியாயமில்லை
எடுத்தவர்கள் மாட்டிக்கொண்டார்
சிறையினிலே கலங்கி நின்றார்
சிலர் கொள்ளையடிக்க
பலர் வாடி நிற்க
ஒரு போதும் சட்டம்
விடுவதில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
குன்ஹா நாலு வருடம் கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார் - இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்
சும்மாவா கொடுத்தார்-இல்லை
செய்த ஊழலுக்காக கொடுத்தார்  

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

சூப்பர் கவிதை.

கும்மாச்சி said...

கார்த்திகேயன் வருகைக்கு நன்றி.

Mahesh said...

haaahaaahaaa... eppadi sir.. mudintha varai mettodu paada muyarchi eduthen. set achu. nice.

கும்மாச்சி said...

மகேஷ் நன்றி.

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் கவிஞரே....

கும்மாச்சி said...

கில்லர்ஜி நன்றி.

Nasar said...

யப்பா ....கலக்குரீங்க...
டைமிங் பாட்டு சூப்பர்...

கும்மாச்சி said...

நாசர் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

சூப்பர் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.