Saturday 17 October 2015

பிரபலங்கள் வீட்டில் கொலு-தொடர்கிறது


கைலாபுரம் தோட்ட  கொலு


"வாமபாஸ்" கம்புமணியுடன் கைலாபுரம் தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார். வீடே அமளி துமளியாய் இருக்கிறது.

வாமபாஸ் யாரது கொலுப்படியில் என் பொம்மையும் கம்புமணி பொம்மையும் வைப்பது, என் குடும்பத்தில் இருப்பவர் ஒரு பொம்மை அங்கு வைத்தாலும் யார் வேண்டுமானாலும் வந்து எங்கள் அன்றாயரை உறுவி நடுத்தெருவில் வைத்து செருப்பால அடிக்கலாம்.

டேய் கம்பு இது என்ன பொம்மை, உங்க பொம்மைதான்.

அப்போ அத மேல்படில வையி.

அடுத்து இது இன்னா பொம்ம.

என்னுடையது ஐயா.

நமது கொலுவில் மாற்றம் முன்னேற்றம் வேண்டும், அப்போ அந்த பொம்மையை அடுத்து வை. 

இதெல்லாம் கழக பொம்மைகள் ஐயா.

இத்தனை வருஷமா அந்த பொம்மைகள் வைத்துதான், நம் வீட்டு சுண்டலெல்லாம்  ஊசிப்போய் தமிழ் நாடே நாறுகிறது. அந்த பொம்மைகளுடன் கூட்டும் வேண்டாம் பொரியலும் வேண்டாம். இனி இந்த இரண்டு பொம்மைகள்தான் நமது கொலுவில், தனித்தே கொலுவை சிந்திப்போம்.

யாரு வந்திருக்காங்க பாரு கம்பு. ஆடு வெட்டியா இருக்கப்போறான்......அவன் வேறே லொள்ளு பிடிச்சவன்........

சி.பி.ஐ தான் என்னை தேடி வந்திருக்காங்க........

கோயம்பேடு கொலு

"விஸ்கிவாந்து" டேய்.........யாருடா அது கொலு வீட்டில் இல்லடா........அஆங்.....கட்சி ஆப்பீசில்டா ஆங்...... நான் வந்தேன்னா தமிழ்நாட்டில் இருக்கிற முப்பத்திமூனு லட்சத்து அம்பாத்தினாலாயிரத்து நானூற்றி நாற்பத்தி எட்டு பொம்மைகளும் மூவயிரத்தி முன்னூறு  படில ஒக்கந்துக்கும்.அஆங்..........

சரி பேக்டன் எந்த பொம்மை வைக்கிறது அத சொல்லு மாமா..........

அடியே ட்ரேமா இருக்கிறதே மூணு பொம்மைதான் எங்க வேணா வையி புள்ள.....

இன்ன சொல்லறீங்க எப்படி மூணு பொம்மைதான்.....

ஆமாம் நானு,நீயி அப்புறம் உன் தொம்பி..........

என்ன பேக்டன் சொல்றீங்கா.

சரி சம்மு, பிரபு பொம்மைகளையும் வையி......

மாமா மாமா வெளியே யாரோ நெறைய ஆளுங்க வந்திருக்காங்க. வாங்க வாங்க.....

ஏன் மச்சான் என் டென்சன் ஆவுற? ரெண்டு கட்டிங் வுட்டு கட் பண்ணு.........மொறைக்காத மச்சான் டெண்சன சொன்னேன்........யாரு இந்த டீ.வீ காரனுங்களாதான் இருக்கோணும்.........ஏய் நீ யாருப்பா எந்த டீ.வீ என்ன கேட்கணும் கேளு?

பேக்டன் பிராந்தி கட்டிங் வுட்டா பட்டாணி சுண்டல் சைடு டிஷ் செட்டாவுமா?

டேய் நீ எந்த கட்சி டீ.வீ  என்ன கேள்வி கேக்கிற.........தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க...............பாருங்க மக்கழே..........நீங்களே வையுங்க நான் போறேன்.......

தென்னிந்திய நடிகர் சங்க கொலு 

சித்தி, சித்தப்பா, மச்சான்  ஒரு புறமிருக்க குஷால் ஷெட்டி, காசர், வெள்ளி வண்ணன் எதிர்புறம் அமர்ந்திருக்கிறார்கள். ஒரே கூச்சல் குழப்பமாக இருக்கிறது அபிபுல்லா ரோட்டிலே....

எங்கே அந்த பரதேசி நாயி..........குஷால் ஷெட்டி.......நன்றி கெட்டவன்........டேய் தம்பி நீ சின்ன பிள்ள.........நேத்து பெஞ்ச மழையில் முளைச்ச காளான் நாங்க இருக்கோம் அடையார் ஆலமரம் கணக்கா.........என்று சித்தி மைக்கு பிடிக்கிறாரு.

சித்தப்பா நான் சி.எம். க்கு சொம்பு பிடிக்கிறன்வண்டா.........நாந்தாண்டா தலைவரு. டேய் யார்ராவன் சொரலட்சுமின்னு.........கத்தினவன் 

விறுவென்று வந்து கிம்பு வந்து கம்பு சுத்துகிறார்.......

டேய் நீ நாய் இல்லடா நரி..........நீ கட்டிங்கு வுட்டு கனெக்ட் பண்ணது எனக்கு தெரியாதா..........நான் எல்லாம் சூப்பர் ஸ்டார்டா என் லெவெலுக்கு ஒன்னோட நான் பேசவே கூடாது..............நான் பஸ்ஸில் ஏறும் பொழுது நீ பின்னாடி நின்னையே அதுக்கு பேரு லவ்வுதானே ஜெஸ்சி..........டும்மிலே டும்மிலே டும்மா டும்மா ங்கொய்யா........இன்னாமா பண்ணலாம்........டும்மா டும்மா ங்கொய்யா..

சாதா ரவி மைக்கு பிடிக்கிறாரு..........டேய் பரதேசி .......ஒரு பூச்சி பேன்ட்டுல போயிடுச்சி.......இரு அண்ட்ராயர உருவி நசுக்குறேன்.......நான் இங்கே எல்லாம் அவுக்க மாட்டேன்.......யாரவன் சமலு.........அவன் என்ன அல்டிமேட்டா.......நாங்க கோவணம் கட்டாத காலத்திலேயே நண்பன்டா........நான் அவன  கேவலமா பச்சை பச்சையா திட்டுவேன்........அவன் என்ன அத விட கேவலமா இன்னும் பச்சையா திட்டுவான்........பேமானி........பரதேசி நாயி.........நாற.........பயலே ...........மச்சான்  தாண்டா தலைவரு..........அவரு வாழும் அப்துல் கலாம்டா..............

சரிபா சண்டைய அப்புறம் வச்சிக்கங்க கொலு வையுங்கப்பா.........

யோவ் நீ அப்பால போயி நில்லு எங்க கொலூவே இதாண்டா..........இன்னும் பொம்மையே யாருன்னே தெரில.......வந்துட்டான்............போடா அப்பால .........என்று சித்தி சித்தப்பாவை தள்ளிவிட்டு கத்துகிறார்...........டேய் குஷால் ஷெட்டி............வரேண்டா........நான் யாருடா மூணு பேரு பார்த்தவடா...........சமலு நன்றி கெட்டவன்.........எல்லோரையும் நோண்டி விடுறியா.....நான் மூணு பேரு பாத்தவடா.........


Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.