Tuesday 29 May 2018

டீ வித் முனியம்மா-சீசன்-2(3)

இன்னா முனியம்மா நாட்டு நடப்பு ஒன்னும் ஓயுங்காவே இல்ல.........

ஏன் நாடார் இன்னாமோ புச்சா நடக்குறா மாதிரி பொலம்புற.

டேய் மீச நாடார்க்கு ஒரு டீயும் பொறையும் குடுறா..




இன்னா நாடார் இன்னா மேட்டரு.............தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறானுங்க...அத்த தானே  சொல்ல வர..

அதான்  செல்வம், தூத்துக்குடில போராட்டம் நடக்க சொல்ல துப்பாக்கி சூடு, பதிமூணு பேர சுட்டானுங்க.............அது பீகுல இருக்க சொல்ல இங்க மாவீரன் புட்டுகினாருன்னு பஸ் கண்ணாடிய ஓடைக்கிரானுங்க.

இதுல்லேந்து இன்னா தெரிது............லிங்கம் சார்.

பாய் நாட்டுல ரொம்ப பேரு வேலை இல்லாம இருக்கிறானுங்க............காலைலேயே டாஸ்மாக் தொறந்ததும் க்வாட்டர் உட்டுக்கினு போராட்டம் கூட்டத்துல கலந்துகின்னு இதுமாரி செய்யசொல்ல மெய்யாலுமே போராட்டம் பண்றவனுங்க மாட்டிகிரானுங்க.....இன்னாத்த  சொல்ல.

முனிம்மா வாட்சப்பு, பெசுபுக்கு அல்லாம் பாக்கிறியா?

அந்த கசுமாலங்கள  பாக்காம எங்க வண்டி ஓடுது? நாட்டுல எப்படா இன்னா நடக்குதுன்னு பாத்துகினே ஒரு கூட்டம் இருக்குது............கொஞ்சம் மேட்டரு கெடைச்சா போதும் அல்லாரையும் வச்சி செயுரானுங்க.

இன்னாத்த சொல்ற முனிமா.............

டேய் லோகு இந்த இணைய போராளின்னு சொல்லிகிடுட்டு ஒரு கூட்டம் அங்க கீதுடா..............ஏதோ இவருதான் அப்படியே நேர்மைக்கு பொறந்தா மாதிரியும் மத்தவன் செய்யறதெல்லாம் அநியாயமுன்னு தெனிக்கும் போஸ்ட் போடுவானுங்க.

அப்பால................

ஐய இங்க இன்னா கதையா சொல்றாங்க அப்பாலன்னுகினு...........கோயில்ல உண்ட கட்டி கொடுக்க சொல்ல பூசாரி அவன் ஜாதிகாரனுக்கு அரகயு ஜாஸ்தி கொடுத்தான்...........இதெல்லாம் இன்னா நியாயம்னு மொதல்ல ஆரம்பிப்பானுங்க...............அப்பால இன்னா கலவரம்ன்னு வந்தா ஏதோ இவருதான் கூட இருந்து பார்த்தா மாறிக்கி ஏதாவது பழைய போட்டோவ போட்டு காப்ரா செய்வானுங்க.

ரொம்ப கரீட்டு முனிமா?

அஹான் நாடார்...........இதுல எவனாவது வந்து இவன் உள் பெட்டில துப்பி வச்சா.........தோடா வந்துட்டாருடா...........சங்கி, மங்கி, பொங்கின்னு.......போடுவானுங்க........கலாய்க்கிரானுங்களாம்...........

மெய்தான் முனிம்மா...

ஆனா தெனிக்கும் வந்து.........த்தா காவிரில தண்ணி இல்ல நம்ம போராட்டம் பண்ணிக்கினு கீறோம்..........அந்த ஜாதிக்காரன பாரு வாய தொறக்காம சோத்த துன்னுகினு கீறான்.............ன்னு போஸ்டு போடுவான்........

அப்பால..

இதுக்கு கமிண்டு போடவே ஒரு பத்துபேரு குத்த வச்சி குந்திகினு இருப்பானுங்க...........அவன் வந்து ஆமா தலிவரே இந்த மென்டலான் கம்முன்னுகிறான் பா..............ன்னு கமிண்டு போடுவான்.......இன்னொரு ஆளு வந்து மய்யம் பாடு இன்னா சொல்றானுவான்............அந்த கட்சிக்காரன் ஆச்சில இருக்க சொல்லத்தான்........காவிரி மேட்டர கை வுட்டானுங்கன்னு, அம்மா கச்சி, ஐயா கச்சின்னு அல்லாரையும் வச்சி செய்வானுங்க........அப்பால கட்சீல கொண்டு போயி டீக்கடையில கொணாந்து நிப்பாட்டுவானுங்க.

அப்பால............

லோகு கடுப்பபேத்தாத..................கம்முனு இருந்த என்ன உசுப்பிவுட்டு வேடிக்க பாக்குறியா?

சரி முனிம்மா மேட்டருக்கு வா? தூத்துக்குடில சுட ஆர்டரு கொடுத்தது யாராம்?

எப்.ஐ.ஆருல வட்டாட்சியரு, சதுராச்சியருன்னு போட்டு கத உட்டுகினு இருக்கானுங்க.

அப்பால இன்னா நடக்கும்........

விசாரண கமிசன், சி.பி.சி.ஐ.டி அப்படி இப்படின்னு போட்டு கொயப்புவானுங்க........அதுக்குள்ளே அடுத்த போராட்டம் வரும், அவளவுதான் நம்ம பெசுபுக்கு கூட்டம் இத மறந்து அத்த பிடிச்சிப்பானுங்க.

அடுத்த வாரம் கூட ஒரு போராட்டம் வருதாமே.........ஆமா இனயம்  துறைமுகமாம்.........ஏற்கனவே ஒரு கூட்டம் போராட்டம் செஞ்சிகினு கீறானுங்க...28000 கோடி திட்டமாம்......இத்த வச்சி செஞ்சு அல்லாம் காசு தேத்துவானுங்க...........

சரி அல்லாருக்கும் மேட்டர் இருக்குது...........சர்தான் பொறி உருண்ட ஏரியாவா?

சரி முனிம்மா சினிமா மேட்டரு இனா............

டேய் செல்வம் உனுக்கு தெரியாது,.........என்ன கேக்குற...........ஏன் நேத்திக்கி இன்னா மப்பா...................சூனு ஏயாந்தேதிடா ..........








Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

KILLERGEE Devakottai said...

ஸூப்பரா கீதுபா...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ரைட்டு...!

Anonymous said...

தரமான இந்த நடுநிலை பதிவுகள் என்றும்
எக்காரணத்தைக் கொண்டும் மாறாமல் தொடர வேண்டுகிறேன்

Anonymous said...

பதிவுகள் அனைத்துமே அருமை நண்பா..
என்றுமே இதே நடுநிலையுடன் தொடர்ந்திட விரும்புகிறேன்.

Yarlpavanan said...

அருமை

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.