Wednesday 16 May 2018

"ஆச்சி"யைப் பிடிப்பது யார் ?

கர்நாடகாவில் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த முடிவுகள் இப்படித்தான் இருக்குமென்று ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் "இந்தியா டுடே" வைத்தவிர கூவிக்கொண்டு இருந்தன.

ஆனால் சமூக வலைதளங்களில் உபீசுகள், பாவாடை சித்தர்கள், நடுநிலை நக்கிகள், சங்கீஸ், மங்கீஸ் மற்றும் வீரம் சொரிந்தவர்கள் கணிப்பும் மற்றும் முடிவுகள் அறிவிக்க ஆரம்பித்தவுடன் புலம்பிய புலம்பல்களும் கர்நாடகா முடிவுகளைவிட பரபரப்பாக இருந்தன.

காலையில் ஒரு பாவாடை சித்தரின் கணிப்பு.

ஒன்பது மணி நிலைமை...............காங்கிரஸ் முன்னிலை.
பத்து மணி நிலைமை.....................காங்கிரஸ், பி.ஜே.பி இழுபறி
பன்னிரண்டு மணிக்கு மேல்............பி.ஜே.பி அபார வெற்றிபெற்று ஆச்சியைப்பிடித்தது.   இதுதான் டிசைன். ஏனென்றால் தேர்தல் வாரியம் அமீட்ஷா கையில்.

இதை ஆமோதித்த ஒரு நடுநிலை நக்கி, இப்படியே போனா தமிழ் நாட்டுல தேர்தலில் யாரும் ஒட்டுபோடவில்லை என்றாலும், பி.ஜே. பி அத்தனை தொகுதிகளிலும் வெற்றி என்று அறிவுத்துவிடுவார்கள், உச்சா நீதிமன்றம் போனாலும் அவனுங்க ஆளுக தான்.........நாடு நாசமா போகட்டும் என்று சபித்துவிட்டு அடங்கிவிட்டார்.

இதற்கு பின்னூட்டமாக உபிஸ் வந்து இதை ஆமோதித்து தமிழ் நாட்டுல இவங்க பப்பு வேகாது, முதலில் நோட்டாவை தோற்கடிக்கட்டும், ஏனென்றால் இது வீரம் நெறைஞ்ச மண்ணு........(மண்ணை கொள்ளையடித்துவிட்டார்கள் எனபது வேறு விஷயம்) என்று கொதித்துவிட்டுப்போனார். ஓஹ்ஹோ அப்படி என்றால் பி.ஜே.பி வாக்குப்பதிவு எந்திரத்தில் சூடு வைக்கிறார்கள் என்பதை நம்பவில்லை போலும்.

இது இப்படி இருக்க 56 க்கு மேல் வந்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றவர் அம்பேல் ஆகிவிட்டார்.

முடிவுகள் வர ஆரம்பித்தவுடனே நமது நிரந்தர அடிமைகள் பிரதமருக்கும்,அமீத் ஷாவிற்கும் தென்னகத்தில் அபாரமாக கால்பதித்தற்கு வாழழ்த்துகள் என்று கடிதம் அனுப்பி மகிழ்ந்த்தார்கள்.

செயலும் அடுத்த தேர்தலுக்கு அச்சாரமாக துண்டு போட தன் பங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

கர்நாடகா முடிவுகள் சில விஷயங்களை தெளிவாக சொல்லிவிட்டன.

பிரிவினைவாதம் வைத்து பிழைப்பு நடத்தும் வாட்டாள்களை மக்கள் மனிதனாக மதிப்பதில்லை.

என்னதான் ஊடகங்கள் பி.ஜே.பி வெற்றி என்று நடுநிலை வாக்குகளை திசை திருப்ப முயன்றாலும், வேலைக்கு ஆவதில்லை.

ஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி தெளிவாக தெரிகிறது, முக்கால் வாசி அமைச்சர்கள் தோற்றுவிட்டனர்.

அதே சமயத்தில் பி.ஜே.பிக்கும் பெரும்பான்மை கிடையாது. ம.ஜ.த விற்கு கொஞ்சம் சீட்டுகளை கொடுத்து குதிரை பேரத்திற்கு வழி வகுத்துவிட்டார்கள்.

என்னதான் காங்கிரஸ் லிங்காயத்துகளிடம் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். கிட்டத்தட்ட இது ஜாதி அரசியலுக்கு சமாதி நிலை.

இங்கு தமிழ்நாடு போல் பணநாயகம் விளையாடியதாக தகவல்கள் இல்லை. இருந்திருக்கலாம் ஆனால் ஊடகங்கள் அதை மறைத்தனவா? என்று தெரியாது?

இப்போது இருக்கும் முக்கியமான கேள்வி?

"ஆச்சி"யை பிடிப்பது யார்?




Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

KILLERGEE Devakottai said...

ஆச்சி"யை பிடிப்பது யார் ?
அப்பச்சிதான்

கும்மாச்சி said...

ஹா..ஹா..

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் என்னென்ன தில்லுமுல்லுகள் நடக்கப்போகிறதோ...!

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.... நல்ல பதில் கில்லர்ஜி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.