Tuesday 25 August 2009

இந்திய நரகம்


நம்மாளு ஒருத்தன் அபிட் ஆனவுடன், நரகத்துக்கு அனுப்பப்பட்டார். சொர்கத்திற்கு எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. சைடிலே கைடிலே வெட்டி போக முடியுமான்னு பாத்துகிறார், நடக்கலே.

நரகத்திற்கு போனவுடன்தான் தெரிஞ்சிகினார், அமெரிக்காகாரன், ரஷ்யாகாரன், இங்கிலாந்துக்காரன், இந்தியாகாரன் நரகம்னு தனி தனியா கீது.

நம்மாளு கீயே இருந்தபோது கொருக்குப்பேட்டையே தாண்டினது இல்லே, அதாலே நரகத்திலேயாவது இங்கிலாந்து நரகம் போலான்னு அங்கே போய் இந்த நரகத்திலே இன்னா செய்வாங்கன்னு கேட்டுகிறார். அங்கேகிற ஆபிசர் சொல்லிக்கிறான், “மொதல்லே ஒரு அரை மணி நேரம், எண்ணெய் கொப்பரையிலே போடுவோம், அப்பாலே தொ அங்கனே முள்படுக்கை கீது அதிலே ஒரு அரைமணிநேரம் படுக்கோணும், அப்பாலே ஒரு ஆள் வந்து ஒன்னயே நாள் முழுக்க சைக்கிள் சைன்லே அடிச்சிகினே இருப்பான். அவ்வளவுதான்பா”.

நம்ம கொருக்குபெட்டை மச்சான் இது வேலைக்கு ஆவாது அப்படின்னு அமெரிக்காகாரன் நரகத்திலே கேட்டுகிறார். அங்கேயும் அத்தையேதான் சொல்லிகிறாங்கோ. அப்பாலே ரஷ்யாகாரன் நரகம் போய்கிறார், அதேய்தான்பா, அப்படின்னு இந்திய நரகம் போய்கிறார். அங்கே போனா அல்லா மவனுங்களும் க்யுலே நின்னுகின்னு இருக்கானுங்கோ. நம்ம கொருக்குபெட்டை மச்சானுக்கு, கேரோவா போய்டுச்சு. இங்கே இன்னா "பெசல்லுன்னு" கேட்டுகிறார்.

இங்கேயும் அதே போலத்தான்னு சொல்லிகிரானுங்கோ. பின்னே ஏம்பா இங்கே இவ்வளவு கூட்டம்னு நம்மாளு க்யுலே நின்னுகிரே இன்னொரு ஆளாண்டே கேட்டுகிறார்.

அந்தாளு சொல்லிக்கிறான், "அது ஒன்னும் இல்லேபா இந்தியா நரகத்திலே, எண்ணெய் ஸ்டாக் இல்லையாம் நைனா, அப்பாலே அந்த முள்ளு படுக்கையிலேகீறே ஆணியெல்லாம் மவனே எவனோ லவுட்டிகின்னுகிறான். சைக்கிள் சைன்லே அடிக்கிறே ஆபிசரு அரசாங்க ஆளாம், தெனத்துக்கும் வந்து ரேஜிச்டர்லே ஸைன் பண்ணிகினு வூட்டுக்கு போயடுவாராம்பா".

அப்போ நம்மாளு கேட்டுகிறான், மச்சி இந்த க்யுவிலே நானும் பூந்துக்கலாமன்னு.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர் தலைவா!

கலையரசன் said...

மெயில் ஜோக்கை உங்க பாஷையில அழகா எழுதி சிரிக்க வைச்சிட்டீங்க பாஸ்!

ஓட்டு போட்டாச்சி!

பித்தன் said...

super thala.....

vasu balaji said...

கும்மாச்சி. திஸ் இச் டூ மச்:))

நிகழ்காலத்தில்... said...

கேள்விப்படாத அருமையான நகைச்சுவை

வாழ்த்துக்கள் கும்மாச்சி

geethappriyan said...

அருமையான சிரிப்பு வெடி
கலக்குங்க
ஒட்டு போட்டாச்சு

ஹேமா said...

கும்மாச்சி,மனம் கனக்கும் சில பதிவுகளுக்கு நடுவில் உங்கள் நகைச்சுவைப் பதிவுகள் அவசியம்.நல்லா இருக்கு.

வால்பையன் said...

ஏற்கனவே நாம நரகத்துல தான் இருக்கோம் போலருக்கே!
ஒருவேளையும் நடக்க மாட்டிங்குது!

Anonymous said...

நரகமா மீண்டுமா? அப்ப இப்ப இருக்கோமே அதுக்கு பேரு?

VISA said...

இந்தியா ஒரு நரகமுன்னு இனி யாராச்சும் சொல்ல முடியுமா?.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.