Thursday 3 September 2009

அனுஜாவின் காதல்-.உறவுகள் வேண்டாமடி பாப்பா


அண்ணா எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது, எவ்வளவு நல்லவன். அண்ணா நீ இல்லாத பொழுது ஒரு தடவை கூட அவன் இந்த அறையினுள் வந்ததில்லை. நீ இல்லை என்று சொன்னால் அவன் திரும்ப போய் விடுவான்.

யாரைச் சொல்கிறாய் அணு.

அதான் அண்ணா உன்னோடு, அடிக்கடி நம் வீட்டுக்கு வருகிறானே.

என்னோடு நிறையபேர் வருகிறார்கள் யாரைச் சொல்கிறாய் நீ.

சனிக்கிழமைகளில் அவன் கட்டாயம் வருவான் அண்ணா, அவன் தலை முடிகூட நன்றாக திருத்தப்பட்டு, கொஞ்சம் ஒல்லியாக இருப்பானே.

ஒ விநோதைச் சொல்கிறாயா. ஆமாம் அவன் நல்லவன். எனக்கும் நல்ல நண்பன்.

அண்ணா நீ அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறாயா?

ஒ அடிக்கடி சென்றிருக்கிறேன்.

அண்ணா அவனைப் பற்றி சொல்லேன்.

ஏன் எதற்கு கேட்கிறாய்?

ஒன்றுமில்லை தெரிஞ்சிக்கத்தான்.

அணு இதைச் சொல்லும் பொழுது உன் கண்கள் விசாலமாகிறது, ஏதோ நடக்குது.
போ அண்ணா....................

சரி அணு நாளை அவன் வருவான் அப்பொழுது அறிமுகப் படுத்துகிறேன். நீயே அவனிடம் பேசிக் கொள். ஆல் தி பெஸ்ட். ஒரு தங்கை கடலைப் போடுகிறாள்.
போ அண்ணா......

வினோத் நீ அனுஜாவைப் பார்த்திருக்கிறாயோ. அணு இங்கே வாயேன், இது தான் என் நண்பன் வினோத்.

ஹாய் வினோத்.

ஹாய் அனுஜா.

சரி வினோத், அணு பேசிக்கொண்டிருங்கள், நான் இதோ வருகிறேன்.

அனுஜா வினோத் இப்பொழுது காதலிக்கிறார்கள். இரண்டு வருடம் கழிகிறது. வீட்டில் கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கிறது.

அனுஜாவின் அம்மா அணுஜாவிடம், அவன் வீட்டில் யார் யார் உள்ளார்கள்.?

ஏன் கேட்கிறாய் அம்மா? யாரிருந்தால் என்ன? எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது.

கேட்பதற்கு பதில் சொல்.

அவனுக்கு மூன்று தங்கைகள், அம்மா இருக்கிறார்கள், அப்பா இறந்து விட்டார். இவன்தான் அந்த வீட்டில் சம்பாதிப்பவன். அண்ணா மாதிரியே இந்த வயதிலேயே நல்ல வேலையில் இருக்கிறான். மேலும் அவன் மிகவும் நல்லவன் அம்மா. அன்பு என்கிறாயே அந்த வீட்டில் வந்துப் பார் தெரியும். இந்த வீட்டில் அண்ணாவை தவிர யார் என்னைப் புரிந்திருக்கிறார்கள். அப்பாவும், நீயும் என்னோடு எப்பொழுதாவது பிரீயாகப் பேசியிருக்கிறீர்களா? அப்பாவிற்கு எப்பொழுதும் பிசினஸ் தான்.

சரி அவனை நீ கல்யாணம் செய்து கொள்ள நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். அப்பா கட்டாயம் சம்மதிக்க மாட்டார்.

ஏன் அம்மா?

அதெல்லாம் உனக்குத் தெரியாது. அக்கா தங்கை இல்லாதப் பையனாகப் பார்த்து காதலி, கட்டி வைக்கிறோம்.

அம்மா உனக்கும் அப்பாவிற்கும் இதெல்லாம் புரியாது. நீங்கள் பணத்திற்கும் வசதியான வாழ்க்கைக்கும் வேண்டி, உறவை எல்லாம் துறந்து விடுவீர்கள்.

நான் வாழ்ந்தால் அவனோடுதான்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

பித்தன் said...

appuram ennaachchi, is she free still, because..... i'm an eligible bachelor, can i......

VISA said...

avalavu thaana? kadhai mudivu varaliyea?

மன்மதக்குஞ்சு said...

நல்ல விஷயம் . தொடர்ந்து பணியாற்றவும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.