Wednesday 25 May 2011

கலக்கல் காக்டெயில்-30

கிளம்பிட்டாங்கையா..........................


அம்மா ஆட்சிக்கு வந்தவுடனேயே புனித ஜார்ஜ் கோட்டையை புதுப்பிக்க அறுபத்தைந்து கோடி தண்ட செலவு, வீண் பிடிவாதத்தில் புதியதாக கட்டிய தலைமைச்செயலகம் ஆயிரம் கோடி ருபாய் அனாமத்தாகிறது.

அடுத்ததாக சமச்சீர் கல்விக்கு புத்தகங்கள் எல்லாம் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு பட்டுவாடா செய்த பின் ரத்து செய்யப்பட்டு அதற்கு ஒரு இருநூறு கோடி தண்டம். இதனால் பள்ளிகள் வேறு காலதாமதமாக திறக்கப்படுகிறது. பெற்றோர்களுக்கு பெரிய தலைவலி.

அடுத்த படியாக பேருந்துகளில் பொன்மொழிகள் அழிப்பு, முகபேர் ஜே.ஜே நகராக பெயர் மாற்றம். இன்னும் இன்னும் என்ன என்ன காத்திருக்கிறதோ ஓட்டுப் போட்ட பொது மக்களுக்கே வெளிச்சம்.

அவசர சிகிச்சை ஆம்புலன்சின் கதி தெரியவில்லை. இப்பொழுதிருக்கும் மற்றொரு கவலை மெட்ரோ ரயில் திட்டம் என்ன ஆகும்? என்பதே.

மரியம் பிச்சை

முதன் முதலில் அம்மா கடாட்சம் பெற்று அமைச்சராகி சட்டசபைக்கு செல்ல திருச்சியிலிருந்து கிளம்பி பெரம்பலூர் வருமுன்னே கோர விபத்தில் மரணம். இதில் ஏதோ மர்மம் இருப்பதாக கட்சி ஆட்கள் அம்மாவிடம் சொல்ல அம்மா சி.பி.சி.ஐ.டி போலிஸ் விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறார்கள். திருச்சியில் யார் தலை உருளப் போகிறதோ?.

மஞ்சள் துண்டிலிருந்து வெள்ளை துண்டிற்கு மாற்றம்.

ஆட்சி போன கவலை ஒரு புறம் வாட்ட, தொங்கிப் போயிருக்கும் உடன் பிறப்புகளை உசுப்ப யோசிக்குமுன், மகள் கைது ஐயாவை ரொம்பவே கலங்கடித்திருக்கிறது. குடும்பமே டில்லியில் முகாமிட்டிருக்கிறது. இப்பொழுது நேரம் சரியில்லை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளை நிறத்திற்கு மாறவேண்டும் என்று ஏதோ ஒரு புடலங்காய் ஜோசியர் சொன்னதால் ஐயா தோளில் தொங்கும் மஞ்சள் வெண்மைக்கு மாறியிருக்கிறது, என்னே பகுத்தறிவு. அடிக்கடி துவைத்ததால் சாயம் போயிற்று என்று உடன் பிறப்புகளுக்கு சமாதானம் சொன்னாலும் சொல்லுவார்.

நகைச்சுவை 18++

அந்த ஒயின் கம்பெனிக்கு ஒயின் சுவைத்து பார்பதற்கு (Wine taster) ஆள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். தேர்விற்கு அந்த ஆளை முதலில் இருந்தே முதலாளிக்கு ஏனோ பிடிக்கவில்லை. எப்படியாவது கழித்து விடவேண்டும் என்று பார்த்தார்.


முதலில் ஒரு கிளாஸ் ஏதோ ஒரு தயாரிப்பை கொடுத்தார்கள். அவன் சுவைத்துப் பார்த்து எந்த தயாரிப்பு, எத்தனை ஆண்டுகள் காஸ்கில் வைக்கப் பட்டது என்றதை மிகவும் துல்லியமாக சொல்லிவிட்டான்.


முதலாளி தன் செக்ரடரியிடம் வேறு ஒரு தயாரிப்பை கொண்டு வர சொன்னார், அவளும் கொடுக்க வேலைக்கு வந்தவன் அதையும் சரியாக சொல்லிவிட்டான்.


முதலாளி கடுப்பாகி செக்ரடரியிடம் ஏதோ சமிக்ஞை செய்ய அவள் வேறு ஒரு கிளாஸ் கொண்டு வந்தாள். வேலைக்கு வந்தவன் அதை குடித்து, இருபத்தைந்து வயதுப் பெண், நாலு மாத கர்ப்பம், மவனே வேலையை கண்டி எனக்கு தரவில்லை என்றால் குழந்தைக்கு அப்பன் பேரை சொல்லிவிடுவேன் என்றானாம்.



சைடு டிஷ் (ஊறுகா)


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

senthil velayuthan said...

எல்லாம் நல்லாயிருக்கு

Unknown said...

ரைட்டு!

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

நல்லா இருக்கு பாஷு

N.H. Narasimma Prasad said...

பிகர் போட்டோ சூப்பர்.

அருண் இராமசாமி said...

boss yenaku vachiruchu ....

RayJaguar said...

figure soopar

V.S.Raja said...

just i in the side. each and every think is very fine

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.