Tuesday 1 October 2013

வட போச்சே

வைகைப்புயல் வாயைக்கட்டாத காரணத்தால் திரையுலகிலிருந்து புறக்கணிக்கப்பட்டாலும் அவரது வசனங்கள் இன்றும் எல்லோராலும் பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இணையத்தில் படித்தது மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.

கல்லூரியில் மாணவர்கள் வைகைப்புயலின் வசனங்களை எங்கே எல்லாம் உபயோகிக்கிறார்கள்.

Class Test: சொல்லவே இல்லை

Teaching: முடியல

Exam: உக்காந்து யோசிப்பாய்ங்களோ

Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாபிடற மாதிரி

Bit: எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்

Result: மாப்பு வச்சிட்டாண்டாஆப்பு

Degree: வரும்  ஆனா வராது

Assignment: ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே

Class Attendance: அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்

Professors: ஒரு க்ரூப்பாதான் அலையுறாய்ங்க

Lecture: இப்பவே கண்ணை கட்டுதே

student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரப்படாது பேச்சு  பேச்சாத்தான் இருக்கணும்

 mark sheet:  நீ புடுங்குனது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்


கடைசியாக ஜொள்ளு விட்ட பிகரு கழட்டி விட்டால்..............வட போச்சே 

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யதார்த்தமான இயல்பான பேச்சு என்பதால்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடிவேலுவில் வசங்கள் இன்றி... பதிவுலகமும் பேஸ்புக்கு கலையிழந்து விடும் போல....

நடைமுறையில் கூட பார்க்கிறேன் சமுகத்தில் அதிகம் வடிவேலுவின் வசனங்களை பேசிக்கொள்வதை பார்க்கிறோம்....

ஒரு உன்னத கலைஞன்... மீண்டும் அவர் வரவை எதிர்பார்க்கிறது தமிழகம்

Unknown said...

இதைப் படிக்கும் போதே வடிவேலு கண்ணில் தெரிகிறார் ...அவர் திறமைக்கு இன்னொரு முறை வலம் வருவார் !வடபோச்சேன்னு வருந்த வேண்டியது இல்லை !

Anonymous said...

வடிவேலு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதில் ஐயமே இல்லை. அவருடைய போறாத நேரம். நுணலும் தன வாயால் கெடும் என்பது போல தன வாயாலேயே கெடுத்துக்கொண்டார். தேர்தல் பிரசாரத்திற்கு போனோமா ஆதரித்து பிரசாரம் பண்ணினோமா என்றில்லாமல், தனனுடைய தனிப்பட்ட வெறுப்பை பேசி தன தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்டார்.

Ramarao said...

இன்னும் கொஞ்சம் வைகைப்புயலின் மறக்க முடியாத அடிக்கடி எல்லோரும் உபயோகிக்கும் வசனங்கள்:



வந்துட்டான்யா வந்துட்டான்யா

என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு

ஆஹா! அவனா நீ?

அருணா செல்வம் said...

அவரு ரொம்ம்ம்ப நல்லவரு....

MANO நாஞ்சில் மனோ said...

வடிவேலின் இடம் இப்பவும் காலியாகவே இருக்கிறது என்பதே உண்மை....!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.