Wednesday 1 January 2014

புத்தாண்டு கவிதை





நடந்தவை நடந்தாக இருக்க
நடப்பவை நல்லதாக அமைய
கொடுப்பதை சிறப்பாக செய்வோம்
கெடுப்பதை அறவே ஒழிப்போம்

அல்லவை தேய்ந்து அழியவும்
நல்லவை  நாளும் பெருகவும்
அன்பில் உலகம் விழிக்கவும்
பண்பில் சிறந்தே விளங்கவும்

மடமை நீங்க உழைப்போம்
கடமை சிறப்பே புரிவோம்
கனிந்து வரும் வருடம்
இனிதே இருக்க விழைவோம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

தங்களுக்கும் தங்களது சொந்தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

SNR.தேவதாஸ் said...

அன்புடையீர்.
தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

கும்மாச்சி said...

கொச்சின் தேவதாஸ் வருகைக்கு வாழ்த்திற்கும் நன்றி.

தங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கவிதைப் பதிவு!!

த.ம.+

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.