Monday 9 June 2014

டீ வித் முனியம்மா------பார்ட் 11

டேய் மீச இன்னாடா யாரும் கடையாண்ட வர்ல, ஊசிப்போன மசால்வடைய கொயப்பி வடகறின்னு  குத்துகினியா.

ஹே முனிம்மா சேச்சி எந்தா கள்ளம் பறயுன்னு................நானு அங்கன ஆளில்லா.

அடேய் மீச என் கண்ணு மெர்சல் ஆவாதே, சொம்மா டமாஸ்  டா, சரி ஒரு டீ போடு.

தோடா மீச அல்லா பார்டிங்களும் வருது பாரு, ஆறு டீ போடு..........டேய் தண்ணி நெறய ஊத்தாத............முல்லபெரியாருல தண்ணி வுடுங்கடான்னா, குடிக்கிற டீயில ஊத்தறீங்க........இன்னா செய்யுறது உங்கள.

இன்னா முனியம்மா இன்னிக்கி இம்மாம் முன்னால வந்து குந்திகினு கீற பூ வியாவாரம் இல்லையா. கோயில மூடிகினான்களா?

இன்னா லிங்கம் சாரு, அப்படி சொல்ற, கோயில இன்னா டாஸ்மாக் கடியா, எலிக்ஸனுக்கு, காந்தி ஜெயந்தினு மூடி வக்கோ. கடிய நம்ம ஆயா பாத்துக்குது.

செல்வம் நீ இன்னாடா பம்முற, எளிக்சணுல உங்க கட்சி புட்டுகிச்சுனு பேஜாராயி டாஸ்மாக்கான்டையே ரவுண்டு கட்டி அடிச்சிகினியா? அஞ்சல கடையாண்ட  வந்து அயுதுகினு இருந்துச்சு.

இன்னா முனியம்மா போன தபா செல்வம் அந்த கட்சி கெலிச்சபோதும்  கடையாண்ட ஃபுல் மப்புல இருந்து அஞ்சலயாண்ட வாங்கி கட்டிகினான்.

டேய் லோகு அவன கலாய்ச்சுனுகிறதே  உனுக்கு பொயப்பா போச்சி.

இன்னா முனியம்மா இந்த மாசத்துல இருந்து கரண்டு கட்டாவாதாம் அம்மா சொல்லிகீது.

அம்மா என்னிக்கி சொல்லிச்சோ அன்னிக்கு முயு நேரமும் எங்க ஏரியாவுல புடுங்கிட்டானுங்க பாய், ஆனா அம்மா எப்போ சொல்லிச்சோ சொம்மா காத்து காட்டு காட்டுன்னு காட்டுதான் இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு பிரச்சின இருக்காது, எங்க பூக்கடையாண்ட வர ஒரு அம்மாவோட புருசண் பேசிக்கினு இர்ந்துச்சு.

முனியம்மா இன்னா மோடி ஆட்சி எப்படிகீது?

லிங்கம் சாரே இப்போதானே சீட்டுல குந்திகினு கீறாரு, ஆனா இந்த அமைச்சர் பசங்களுக்கு நல்லா சொல்லிகீறாரு.........மாமன், மச்சான், மருமவனுங்க எல்லாம் ஆபீசுல வேலைக்கு வக்ககூடதுன்னு................

ஆமாம் முனிம்மா நம்ம வாஜ்பாய் அரசுல நம்ம அமைச்சருங்க ரண்டு பேரு மாமன் மச்சானோட அடிச்ச கொள்ளையில நல்லா வகையா சிக்கின்னானுங்களே.

அதே தான் நாடார்.....அந்த பெருசுகூட பேஜார் ஆயி, அவனுக பைலு எல்லாம் என் மூலமாதான் போவனுன்னு கண்டிசன் போட்டாரு.

முனியம்மா மோடி ராஜபக்ஷேவாண்ட கண்டிசனா சொல்லிட்டாருன்னு உதாரு விட்டானுங்க, அந்தாளு போயி இன்னது பதிமூனா, சட்டமா, போடாங்கொய்யாலன்னு அங்க போயி கொரலு விடுறான்.

அதில்லடா செல்வம் அந்த சிங்களனுங்க இப்போ நம்ம நாட்டையே ஒரு காமெடி பீசா பாக்குறானுங்க. அல்லாம் சீன காரனுங்க  உசுப்பி வுட்டு  வேடிக்க பாக்குறானுங்க.

ஏன்முனிம்மா இந்த அம்மாவும் சின்ன அம்மாவும் கோர்ட்டுக்கு போவாம இன்னா டகிலு பாச்சா வேல காமிக்குறாங்க, ஆனா கோர்ட்டு ஒன்நியம் செய்ய மாட்டேங்குது...

அவியிங்க செய்யலாம் பாய், ஆனா நாம கண்டி கோர்ட்டுக்கு போவலைன்னு வையி, போலிச வுட்டு நம்மள நாய் கணுக்கா இஸ்துகினு போவானுங்க.

அதான் அவனவன் அரசியாவாதி ஆவனுன்னு துடிக்கிரானுங்க.............

அஹான் நாடார், நம்ம செல்வம்கூட சினிமாவுல சேர்ந்து பெரிய அரசியல்வாதியா ஆவனுன்னு பாக்குறான், அதான் பயககடைய அஞ்சலையாண்ட வுட்டுட்டு சரக்கடிச்சு கம்பு சுத்துறான்...........டேய் செல்வம் நீ கண்டி சி.எம் ஆன நான்தான் உன் உ.பி.ச இன்னா புரியுதாடா..........

அடப்போ முனிம்மா சொம்மா புளிப்பூத்தாத........

நம்ம மேட்டரு ஏதாவது இருந்தா போடு இல்லின்னா நான் அபீட் ஆவுறேன்.

இருடா செல்வம் மேட்டர் இல்லின்ன சரக்கு போனியாவது........

இன்னாடா செல்வம்.......ஹேப்பியா?

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

ராஜி said...

கலக்கலாய்தான் ஆரம்பித்திருக்கிறார் மோடி. கலங்க வைக்காம இருந்தா சரிதான்.

கும்மாச்சி said...

உண்மை ராஜி, பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.