Tuesday 6 October 2015

மீண்டும் கும்மாச்சி

வலைப்பூவிற்கு நீண்ட இடைவெளி. இணையம் பக்கம் வரமுடியாத நிலை. காரணம் வேறொன்றுமில்லை.

கடந்த சிலமாதங்களாகவே ஓயாத வேலை. தந்தையின் உடல் நிலை வேறு மோசமடைந்ததால் அடிக்கடி நாட்டிற்கு பயணம் என்று போய்கொண்டிருந்தது.

மேலும் தந்தையின் உடல் நிலை மேலும் மோசமடைந்து கடந்தமாதம் இறைவனடி சேர்ந்தார்.

மறுபடியும் தாய்நாடு பயணம். தந்தையின் இறுதி சடங்குகளுக்காக.

ஒக்கமடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆனதடி

தனது இறுதி மூச்சு வரை தனது சுற்றங்களின் நலனுக்காக வாழ்ந்தவர் ஒரு பானை சாம்பலில் முடிந்தது மனதை உலுக்கும்  நிகழ்வு.

எல்லாம் முடிந்து பயையபடி வேலைக்கு வந்தாகிவிட்டது. இனி சோகங்களை மறந்து இயல்பான பணிகளை தொடரவேண்டும்.

வாழ்க்கை..................


Follow kummachi on Twitter

Post Comment

19 comments:

Unknown said...

RIP சேகர்..நான் சென்னையில்தான் இருக்கிறேன் சொல்லியிருக்கலாமே...இரண்டு நாட்கள் முன்தான் என் மனைவியும் விசாரிக்க சொன்னார்.

கும்மாச்சி said...

நன்றி அசோக்ராஜ்........நான் மறுபடி தோஹா வந்துவிட்டேன்.

KILLERGEE Devakottai said...

தங்களின் தந்தையின் மறைவுச்செய்தி அறிந்து மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது எல்லாம் இறைவன் செயல் மனதை திடப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள் நண்பரே...

கும்மாச்சி said...

தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி கில்லர்ஜி.

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

கும்மாச்சி said...

நன்றி சுரேஷ்

VANDHIYAN said...

Yellam valla iraivan saantgiyum samathaanamum arulattaam

'பரிவை' சே.குமார் said...

அப்பாவின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...
மனதை திடப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பப் பாருங்கள்...

விசு said...

தந்தை இறப்பிற்கு வருத்தங்கள். திடமாக இருங்கள். மீண்டுள் எழுதுங்கள். தங்கள் மனதை வருத்தத்தில் இருந்து திருப்ப எழுத்துக்கள் உதவும்.

விசு said...

சபாஷ்.. என்னே ஒரு வாக்கியம்.. அருமை .. அருமை...

Unknown said...

அருமை

தனிமரம் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் தந்தையின் இழப்புக்கு.மனதை தேற்றுங்கள்.

Unknown said...

ஆழ்ந்த இரங்கல்கள், அண்ணாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

Unknown said...

தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்! காலம் உங்கள் மனதைத் தேற்றும்

SNR.தேவதாஸ் said...

தங்களது தந்தையாரின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
தங்களது மன வருத்தத்துக்கு மிகுந்த ஆறுதல் தர இறைவனை யாசிக்கிறேன்.

வருண் said...

Sorry to know about your dad! :( I am sure he has already given enough strength and directions to you to survive in this world esp when he 's away! Take care!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//சோகங்களை மறந்து இயல்பான பணிகளை தொடர// வேண்டுகிறேன் .

Unknown said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

Unknown said...

//சோகங்களை மறந்து இயல்பான பணிகளை தொடர// வேண்டுகிறேன்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.