Thursday 8 October 2015

நடிகர் சங்கம்- அடிதடி சங்கம்

சமீபகாலமாக தமிழ் செய்திகளில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பது இந்த சங்கம் விவகாரம்.

இத்தனை நாட்களாக சங்கத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டிருப்பவர்கள் ராதா ரவுடியும், நமது சொம்படி சொறிகுமாரும்தான். அவர்கள் தான் சங்கத்தை தூக்கி நிறுந்தியவர்கள் என்று ஒரு கூட்டம் உரியடித்துக்கொண்டிருக்க, ஐவர் அணியோ இன்னாத்த நிறுத்தினாங்க, நெலத்த தூக்கி கொடுத்துட்டானுங்கபா இந்த தபா நாங்கதான் தலீவரு ஒரு கை பார்ப்போம் என்று  போர்க்கொடி தூக்க இப்பொழுது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில்... இல்லபா ...........மேற்பார்வையில்  சங்கத்திற்கு தேர்தலாம்.

நம்ம ஊரில மூணு கோடி வேட்பாளர்களை வைத்து தேர்தல் நடத்தினாலே ஊரு நாறும், கேவலம் மூவாயிரம் வாக்காளர்களைக் கொண்ட சங்கத்திற்கு நாங்களும் நாறடிப்பதில் குறைந்தவர்கள் அல்ல என்று இப்பொழுது அடிதடி செய்துகொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் தலைவரோ இப்பொழுது போட்டிபோடும் புதிய வருகையை "நாயே பேயே" என்று கொஞ்சி அகமகிழ்கிறார்.   அவரது சகோதரி சித்தியோ ரெட்டி, நாயுடு என்று ஜாதியை துணைக்கு அழைக்கிறார்.

இது எல்லாம் பத்தாது என்று "வாலு" வேறு மைக்கை பிடித்து டேய் நீ எதுக்கு நிக்குறேன்னு தெரியாது, டும்மிலே டும்மில் டும்மா தும்மா ங்கொய்யா.......என்று கொச்சையான கொக்கோக கலிப்பா படிக்கிறார்.

இதில் ஒன்று நிச்சயம், அரசியல் ஏகத்திற்கும் இதில் கலந்து மணக்கிறது. ஆளுங்கட்சியோ யாரும் தேர்தலில் கலந்து கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துவிட்டது. எதிர்கட்சிதான் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கிறது என்று சித்தப்பு............ ஆளுங்கட்சிக்கு சொரிந்துவிடுகிறார்.

நட்டத்துங்கப்பு...............இதெல்லாம் பத்தாது..........சொம்மா ஹபிபுல்லா ரோடுல டப்பா.........டேன்ஸ் ஆடனும், சினிமால ஆடறது எல்லாம் பத்தாது........தேர்தலுக்கு முன்னாடி அல்லார் துணியையும் உருவி வுட்டு ஆடனும்.......சித்தப்பா சொம்மா கலக்கு..............குஜாலா இருக்கும்பா......


Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

Unknown said...

I have done all kinds of corruption in Nadigar Sangam - Radha Ravi : https://www.youtube.com/watch?v=T6wQCZ8o6GA

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இவர்கள் மக்களை நம்பிவாழ்பவர்கள். நாம சொந்த முயற்சியில் வாழ்பவர்கள்... இதுதான் வித்தியாசம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நெல்லைத் தமிழன் said...

அவுகளை எதிர்பார்த்து, நீ இன்னா நைனா படத்தை மறந்துனுகீற... அவுக ஆடுனாகன்ன, அதை அப்பால பாத்துக்குறோம். நீ இப்போ படம் போடு நைனா..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.