Monday 26 October 2015

டீ வித் முனியம்மா -பார்ட் 35

பாய் இன்னு எந்த நேரத்தே வன்னு சாய் வேணு,,,,,

மீச ஒரு பெசல் டீ போடு......

அடே மூணு டீ போடு, நாடாரும், லிங்கம் சாரும் வருது பாரு.......

இன்னா முனிம்மா இத்தினி வேகமா வந்துகினு கீற.....

டேய் பயம் இன்னாடா கடில வேல இல்லியா........


இன்னா வேல முனிம்மா கடியே ஆடிகிச்சு......உனுக்கு தெரியாது........பூகம்பம் வந்திச்சாமே..........நூசுல சொல்லிக்கிறான்.

ஆமாண்டா லோகு பாகிஸ்தானு, ஆப்கானிஸ்தானுகிட்ட பூகம்பமாம்........

ஆம்மாம் முனிமா நெம்ப ஜனம் செத்துகிச்சாம்.......நூறு இருநூறுன்னு சொல்லிக்கிட்டு இருக்கானுக......நேரம் ஆவ ஆவத்தான் தெரியும் எத்தினி பேரு மாட்டிகிரானுன்களோ.

கொண்டித்தோப்புலேயே நெரிய ஜனம் பேசிக்கிச்சு..........வடபயநியாண்ட கட்டிடம் எல்லாம் ஆடிச்சாமே...........

இன்னா முனியம்மா அடுத்த வருசம் தேர்தல் வருது,,,,,,,,இன்னும் கூட்டணி நூசு வரலியே......

கேப்டன் இன்னா செய்வாரு.........தெர்லயே.....

நாடாரு பொறுமையா இரு.........கிட்டக்க வரசொல்ல அல்லாம் தெரியும்......கேப்டனு கம்முன்னு பாத்துகினு கீறாரு.  ராமதாசு அன்புமணி முதலமைச்சருன்னா இந்த சைடா வாங்கங்கிராறு....எவன் போவானுன்னு தெரில?.

கேப்டன் கலிஞறு பக்கம் போவாராங்காட்டியும்.

அல்லாம் துட்டுடா செல்வம் ............அத்த வச்சிதான் எது எதொடா சேருமுன்னு தெரியும். கொஞ்சம் துட்டு அப்பால வாரியம் பேரியமுன்னு துண்டு போடுவானுங்க.

அம்மா இன்னா செய்யும்..........முனிம்மா.

அம்மா கொடனாட்டுல குந்திகின்னு தொண்டருங்க எல்லோரையும் வுசுப்பி வுட்டுகினு கீது. ஆனா ஒரு முடிவோடதான் கீது.

அது சரி முனிம்மா கடேசில நம்ம ஜனமும் துட்டு.....துட்டு  வச்சிதான் குத்துங்க.

கரீட்டா சொன்ன லிங்கம் சாரு.......க்வாட்டரும், கோயி பிரியாணியும்தான் முடிவு செய்யும் போல...

முனிம்மா மோடி நூசு இன்னா ஒன்னியும் இல்லையா........

அவரு இன்னாடா ஒலகம் புல்லா சுத்திகினு கீறாரு.........பறந்து பறந்து வெளிநாட்டு துட்ட உள்ள கொண்டுவராருன்னு சொல்றாரு........நமக்கு இன்னா லாபம்........தொ விலைவாசி எல்லாம் எகிறிகீது, பருப்பு வேல இருநூறு ரூவா சொல்றானுங்க பேமானிங்க.

அதெல்லாம் சொம்மா முனிம்மா இவனுக இன்னா செஞ்சாலும் நம்ம பொயப்பு நாறிகினுதான் கீது.

இன்னா முனிம்மா போனவாரம் நடிகர் சங்கம் தேர்தலுன்னு டீவிகாரனேல்லாம் அந்தப் பக்கம் ஓடிகினானுங்க......

அதான் பாய் இன்ன கொரலு வுட்டானுங்க........தமியந்தான் தலைவனா வரணுன்கிறான் ஒத்தன்.

அது சர்தானே முனிம்மா.......

டேய் பயம் அத்த நீ சொல்லாதடா...........தமியன் தமியன்னு பூ சுத்துவானுங்க.....படத்துல நடிக்க ஹீரோயினி மட்டும் சும்மா தளதளன்னு சேட்டு பொண்ணா தேடுவானுங்க.

கரீட்டா சொன்ன முனிமா.......

பின்ன இன்னாடா லோகு.........அங்கனயும் ஏதோ ஊயல் நடந்துகீது போல...முப்பது வர்சமா ஒரே கூட்டம் ஆட்டயப் போட்டுகீது போல.அது சரி நமக்கின்னா வந்துது........நாம போயி பொயப்ப பாப்போம்.







Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

எல்லாம் துட்டுத்தான்! உண்மை!

Unknown said...

தலிவனும் துட்டுக்குத் தான் வேஷம் போடறான் ,ஒட்டு போடுறவனும் அதுக்குதான் நாக்கை தொங்கப் போட்டு அலையுறான் :)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.