Thursday 26 November 2015

டீ வித் முனியம்மா பார்ட் 37

டேய் இன்னாடா மீச வியாவாரம் எப்படி போய்கீது.....

அடே என்ன வியாவராம் முனிம்மா, மழையில யாரும் வந்திட்டில்லா

டேய் சொம்மா இன்னாடா ரீல் விடுற........மவனே அடிச்ச மயல நீதான் துட்டு அள்ளிகினன்னே ஊரே பேச்சா கீது.......ஊசுன வடையெல்லாம் மார்க்கெட்ல வுட்டுருப்பயே. டீ இன்னா இருவது ரூவாக்கு கொடுத்ததா சொல்றாங்க.

அதெல்லாம் கள்ளம் பரயுது........

சரி அத்த வுடு தோ செல்வமும் லோகுவும் வரானுங்க பாரு சூடா டீ போடு.

இன்னாடா செல்வம் பயம் வியாவாரம் எப்படி போச்சு மயல........

இன்னா முனிம்மா அவனவன் கஞ்சிக்கே வயியில்லாம கீறான் இதுல மயல பயம் எங்கே போவுது. அத்த வுடு நான் வூட்ட வுட்டு நவுரவே இல்ல....வூடு புல்லா தண்ணி வந்திடிச்சு. சரி முனிம்மா உன் வூட்டாண்ட எப்படி.

அதே தாண்டா மயத்தன்னி வூட்டுக்குள்ள வந்து பூ வியாவாரத்த ஊத்தி முடிகினு தண்ணிய பக்கிட்டுல அள்ளி தெருவுல வுட்டுகினி இருந்தேன்.

இன்னா முனிமா அலட்டிகினு கீற.

வா பாய் உனுக்கு இன்னா மச்சு வூட்டுல கீற.

மச்சு வூடா நீ வேற.......பேஜார் பண்ணாத எங்க வூட்டுல மச்சுல கூட மொயங்காலு அளவு தண்ணி வந்துகிச்சு.

ஆமாம் பாய் நம்ம கொண்டிதொப்புல எல்லா எடத்துலேயும் தண்ணி உள்ளார பூந்திடுச்சு.

வா லிங்கம் சாரு............ஆனா மயன்னு கூட பாக்காத காப்ரேஷன் காரனுங்க பம்பு அடிச்சி தண்ணி எடுத்தானுங்க......அவனுங்கள பத்தி ஒன்னியும் சொல்ல மாட்றானுங்க இந்த டீ.வீ காரனுங்க.

ஆமாம் முனிம்மா மெய்யாலுமே ஈ பி காரனுங்க கூட மயல ட்ரான்ஸ் பார்மார்ல ஏறி வேல பாத்தானுங்க.

அதானே நாடார் ஆனா எல்லா டீ.வி காரனும் அவனுகள செஞ்ச வேலைய ஒன்னும் சொல்லல.இதுல தமாசு பாரு லோகு  பழைய மேயரும், கண்ணடிச்சிகினே அம்மாவுக்கு சொமபடிப்பரே ஒரு ஆளு டேய் செல்வம் அவரு பேரு இன்னாடா.

யாரு முனிமா அம்மாகிட்ட காரு வாங்கிக்கினாரே அவுரா.....

அஹாண்டா அவரேத்தான்.........

இன்னாவோ சம்பத்து இல்ல இன்னோவா சம்பத்து.

ஆமா அவரும் டீவில குந்திகினு இந்த நெலமைக்கு யாரு காரணமுன்னு அடிச்சிகினானுங்க.இவன கேட்டா அவுங்க ஆட்சிதான்ரான் அவன கேட்டா இவனுகதான்றான்.

முனிம்மா முப்பது வருசம்மா இதே தான் அடிச்சிகினு கீறாங்க.

எதிர்கட்சிகாரன் சொல்றான் மயல தண்ணி தேங்கி ஜனம் அல்லாம் கஷ்டப்படுதுங்குறான்..........அவங்க டீ வில புரட்சி இதய தெய்வம் அம்மா ஆணைப்படி மய பெஞ்சுது அல்லாரும் சரியா வேல செஞ்சாங்க தண்ணியே எங்கேயும் இல்லன்றாங்க. ஜனம் எல்லாம் குஜாலாகீது அப்படிங்கிறாங்க.

இன்னா அவங்க சொல்லட்டும் முனிம்மா இந்த மயல சென்னை நாரிகினுதான் போச்சு.

ஆமா லிங்கம் சார், இன்ன பேய்ஞ்சு இன்னா புரோஜனம் வெயிலு வந்திச்சினா நாம கொடத்த தூக்கிகினு லாரி பின்னாடி ஓட வேண்டியதுதான். அதுக்கு ஒரு  வழி செய்யமாற்றானுங்க.

அது சரி முனிம்மா ஊருலகீற ஏரி எல்லாம் பிளாட் போட்டு கூவி வித்துகினானுங்க அப்பால எங்க மய தண்ணிய  விடுறது. அல்லா தண்ணியும் எல்லா குப்பையும் வாரிகினு மெரினா பக்கமா போயிடிச்சி.

ஆமாம் பாய் பல்லாவரத்தாண்ட எம்மாம் பெரிய ஏரி இருந்திச்சு இப்போ அது தாராந்து போச்சு. அப்பால சிட்லபாக்கம் ஏரி மேலயும் வூடு கட்டிகினானுங்க அப்பால வூட்டுக்குள்ள தண்ணி வந்திச்சின்னு கூவுரானுங்க. எங்க ஆயா சொல்லும் மதராசுல மொதோல நெறைய ஏரி இருந்துகீதாம், நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம் அல்லாம் ஏரி இருந்த எடம் தானாம்.

முனிம்மா வெள்ள நிவராணம் நாலாயிரம் கோடி மோடியாண்ட அம்மா கேட்டாங்களாமே.

ஆமாண்டா லோகு இந்தம்மா மோடிக்கு லெட்டர் எயுதிச்சாம் அந்தாளு பத்து நிமிட்ல 960 கோடி துட்ட தூக்கி கொடுத்துட்டாராம் சொல்லிகிறானுங்க ரத்தங்க.

அது சரி முனிமா அந்தாளு எப்பவும் பாக்கிட்லையே அம்மாம் துட்ட வச்சிகினு சுத்துகினாறு போல.

அது சரி முனிமா அதால நமக்கு இன்னா.

இல்ல பாய் அல்லாருக்கும் ரெண்டாயிரம் ரூவா குடுக்கப் போறாங்களாம்.

அப்ப மீதி துட்டு....

டேய் போடா டோமரு செல்வம் அத்த எலிக்சன் டயத்துல அவுத்து வுடுவாங்கடா.

கலீனறு கூட ஒரு கோடி குடுத்துகிறாராமே.

ஆமாண்டா செல்வம் அத்த வச்சிகினு கவுண்டமணி கணுக்கா மக்கள் நக்கல் விடுறானுங்க.........ஒரு கோடி இங்க கீது, மீதி ஒரு லட்சத்தி எழுபத்தாயிரத்தி தொளாயிரத்தி தொன்னூத்தி ஒம்பது கோடி எங்கேன்னு கேக்குறானுங்க. பொல்லாதவனுங்க குனிஞ்சா ----------யடிச்சிடுவானுங்க.

முனிம்மா விகடன் மேல அம்மா கேசு போட்டுகிறாங்களாமே அத்த பத்தி பேப்பர்ல இன்னா போட்டுக்கிறான்.

லிங்கம் சார் விகடணுல அம்மா ஆட்சிய புட்டு புட்டு வச்சிகிறான். மந்திரி தந்திரின்னு முப்பது வாரமா ஓட்டிகினு கீறானுங்க. அது சொல்ல அம்மா காண்டாகி கேசு போட்டுகீது, அது கண்டியும் அல்ல அல்லா பொட்டிக்கடைலயும் போலீசு உட்டு மெரட்டிகிரானுங்க. விகடனா வித்தா கடை அம்பேலாம்.

அது சரி முனிம்மா வடநாட்டு நாட்டு நடப்பு என்ன?

பீகாருல லாலு பிள்ளைங்க மந்திரி ஆகிக்கிறானுங்க. ஒருத்தன் பத்தாங்கிளாசு பாஸாம், இன்னொரு புள்ள எட்டாங்கிளாசு பாஸாம்.

முனிம்மா இன்னா சினிமா நூசு........

போடா அவனவன் மயல டப்பா டான்சு ஆடி பெஜாரகிட்டானுங்க இதுல சினிமா நூசு, இந்த பேப்பர பிடி படம் பாத்துகினு போய்கினே இரு.









Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

ராஜி said...

பதிவு ஷோக்கா கீதும்மா

நிஷா said...

நிவாரணம் எனும் பெயரில் கோடிகோடியாக கொடுத்து விட்டு இந்தப்பக்கம் எதெதுக்கு விலை ஏற்றமும் வரி விதிப்பும் இருக்க போகின்றதோ தெரியவில்லை. எல்லாம் கடவுளுக்கு தான் தெரியும்.
நல்ல ஆதங்கமும் பதிவும்.

மீரா செல்வக்குமார் said...

அருமை...ரசித்தோம்...

KILLERGEE Devakottai said...

மீசையை ரசித்தேன் நண்பரே ஸூப்பர்
தமிழ் மணம் 2

'பரிவை' சே.குமார் said...

உண்மையை அப்பட்டமாய் பேசும் பகிர்வு...
அருமை... வாழ்த்துக்கள்...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.