Tuesday 14 August 2018

கலக்கல் காக்டெயில்-188

சந்து (ட்விட்டர்)

நீங்கள் சந்து வாழ் மனிதரா, நகைச்சுவை உள்ளம் உள்ளவரா? நாயே பேயே என்று திட்டினாலும் மற்றும் சாதிரீதியாக உம்மை வசை பாடினாலும் உணர்ச்சி வசப்படாதவரா? அப்ப சந்தில் வரும் கீச்சுகளை படித்தால் உங்கள் கவலை மறந்து சிரிக்கலாம். அதுவம் சமீபத்திய ட்விட்டரில் வரும் அரசியல் சார்ந்த கீச்சுகள் நகைக்க வைக்கின்றன...........சில அல்சர் ரகம்.

சீமான் கலைஞரிடம் கொண்ட பழக்கத்தை "அவர் சட்டை பையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதிவிட்டு வைக்கும் அளவு பழக்கம் இருந்தது என்று சொல்லப் போக..........ஒரு கீச்சர்........

சீமான் சொல்வது போல............."எனக்கும் தலைவருக்கும் பிரபாகரனுக்கும் உள்ள பழக்கம் எப்படி என்றால் அவர் கழுத்தில் வைத்திருக்கும் சயனைட் குப்பியை எடுத்து இரண்டு சப்பு சப்பிவிட்டு வைக்கும் அளவுக்கு நெருக்கம்  இருந்தது".

அடுத்தது கலைஞர் கல்லறையிலிருந்து மகன் ஸ்டாலினுக்கு எழுதும் மடல்.

மகனே இந்த வைரமுத்து எதையோ கிறுக்கி எடுத்து வந்து கவிதை என்று பாடி தலையை சொறிவான்.

பத்து ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாம்.......அப்பா அதைத்தான் கொடுப்பேன்.

பின் குறிப்பு: அதையும் அருகிலிருப்பவரிடம் இருந்து எடுத்து கொடுத்தால் நலம்.

போடு தகிட தகிட...

இது தர்ம யுத்தம் காலம் போல.....இன்று மெரீனாவில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கியது என்பதுதான் இன்றைய ஊடகங்களின் ஸ்கூப்.......

அஞ்சா நெஞ்சன் இன்று கலைஞர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னுடைய ஆதங்கங்களை கலைஞரிடம் சொன்னதாகவும், மேலும் தி.மு.கவின் தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாகவும் கூறி இன்று  நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் குண்டை வைத்து விட்டார்.

ஏற்கனவே ஒரு தலை மறைந்தவுடன் ஒரு கட்சி சின்னா பின்னப்படுத்தப்பட்டது. இப்பொழுது இன்னும் ஒரு பெருந்தலை மறைந்தவுடன் அடுத்த வேலை ஆரம்பம்.

யாரந்த சூத்திரதாரி? காலம் பதில் சொல்லும்.

போடு தகிட தகிட...........ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ? பதவி ஆசை எனும் தொட்டிலிலே..........ஆடாதாரோ?

ரசித்த கவிதை 

இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால் பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ.. 
கல்லை தூக்கி எறிந்தோ.. 
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு.., 

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..! 

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை; 
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!


நன்றி: மதுரை மைந்தன்

சினிமா

கஜினிகாந்த்...................

ஆர்யா.............சாய்ஷா...





Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆசையல்ல... பேராசை...!

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான கலக்கல்.

V.GOPALAKRISHNAN said...

Aiadmk பிளவுபட்டதுபோல் இன்னொரு திமுக அழகிரி ஆதரவாளர்களுடன் வரும்

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல் காக்டெயில்.... ரசித்தேன். குறிப்பாக கவிதையை!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.