Monday 13 August 2018

பொது அறிவு?

வாழ்க்கைக்கிற்கு பொது அறிவு மிக அவசியம். எல் .கே.ஜி தொடங்கி ஆணி பிடுங்கப்  போகும் வரை நம் வாழ்விற்கு பொது அறிவு தேவை. ஆதலால் நீங்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்திருப்பது அவசியம், இது ஒரு மாதிரி!!!!... வினாத்தாள் தான்.

அமெரிக்காவை கண்டு பிடித்தது யார்?
நீராவி எஞ்சினை கண்டுபிடித்தது யார்?
உழவர் சந்தை கொண்டு வந்தது யார்?
கணினியை கண்டு பிடித்தது யார்?
இணையத்தை நமக்கு கொடுத்தது யார்?
அண்ணா அறிவாலயம் கட்டியது யார்?
சமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்?
தொல்காப்பியருக்கு தமிழ் ஆசான் யார்?
திருவள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?
அரசியல் சாணக்கியர் யார்?
தாஜ்மகாலை கட்டியது யார்?
கத்திப்பாரா பாலத்தை வடிவமைத்தது யார்?
செம்மொழி மாநாடு நடத்தியது யார்?
தமிழ் ஈழம் கண்ட தலைவர் யார்?
பகுத்தறிவுத் தந்தை யார்?
ஃபியூஸை பிடுங்கியது யார்?
புல்டோசர் விட்டது யார்?
தொலைபேசியைக்  கண்டுபிடித்தது யார்?
சீனப் பெருஞ்சுவர் கட்டியது யார்?
சமூகநீதி காத்தவர் யார்?
ஊழலின் தந்தை யார்?
சிலப்பதிகாரம் செய்தது யார்?
மனைவி,துணைவி, இறைவி என்று இலக்கணம் வகுத்தவர் யார்?
தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் யார்?
கட்டுமரத்தைக் கடலில் விட்டது யார்?
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்?
இறந்தும் போராடியத்  தலைவர் யார்?
நிலவிற்கு ராக்கெட் விட்டது யாரு?
அணு!!!!வை கண்டு பிடித்தது யார்?
ஐ.நா வைக் கட்டமைத்தது யார்?
சரித்திர நாயகன் யார்?
திராவிட தலைமகன் யார்?


இன்னும் போல ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விடை தெரியவில்லை என்றால், நீங்கள் ஒன்று உலக்கைக்கு பிடிக்காத "நூலை" வைத்திருக்க வேண்டும், இல்லை அந்த கூட்டத்தின் அடிவருடியாக இருக்க வேண்டும்.

மேற்கொண்ட கேள்விகளுக்கு விடை ஒன்றே தான்............உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் கீழ் கண்டவர்களை அணுகினால் பொது அறிவு பெற்று வாழ்க்கையில் சீரும் சிறப்பும் பெறுவீர்கள்.

பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து பிரியாணி பிடுங்கும் கூட்டத்தில் யாரை வேண்டுமானாலு அணுகலாம்.
இணையத்தில் உ.பி.  போராளிகளை அணுகலாம். இவர்களை இனம் கண்டுகொள்வது எளிது. (எனது முந்தைய பதிவில் இந்த அறியத் தகவல் உள்ளது).
மேலும் சமீபத்தில் மெரீனா சென்றால் நீங்கள் கேட்கவே வேண்டாம் தன்னாலேயே விடை கிடைக்கும். ஆனால் இந்த சலுகை இன்னும் சில நாட்கள் மட்டுமே. முந்துங்கள்.




Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

Unknown said...

கல்லக்குடி

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... ஹா...

Balu said...

Thiruttu Nithi😜

ஸ்ரீராம். said...

பொது அறிவு புது அறிவு!

ஹா... ஹா... ஹா...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கேள்விகள்! :)

நெல்லைத்தமிழன் said...

நல்லவேளை இன்றாவது படித்து அறிந்துகொண்டேன். என்றைக்காவது உபயோகமாக இருக்கும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.