Monday 1 June 2009

துணை நடிகையும் வாழைக்காயும்


எங்களது கிரிக்கெட் டீமுக்கு என்று தனி பிட்ச் எல்லாம் கிடையாது. தெருவில் மொத்தம் நாற்ப்பது வீடுகள் இருக்கும், இந்த தெருவில் உள்ள விடலைப் பையன்கள் டீம் தான் இது. இரண்டு வீட்டு சுவற்றில் கோடிட்டால் விக்கெட், தெரு தான் பிட்ச். அவ்வபோது பந்து சுவற்றை தாண்டி விழுந்தால், அந்த வீட்டு பாட்டி பல குரலில "எந்த கட்டேலே போறவண்டா கல் எரியறது" என்று 200௦௦ டெசிபல் சௌன்ட் உடும். நான் சொல்லவந்தது கிரிக்கெட் பற்றி அல்ல.
அப்படி ஒரு நாள் விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது, விளையாட்டு ஒரு அசாத்திய மௌனத்துடன் நிறுத்தப்பட்டது. காரணம் எங்கள் வயதினால் ஒருவள் கடந்து சென்றதால். பின்பு விளையாட்டு தொடரும் பொழுது ராஜா தான் கேட்டான், யாரடா இது புதுசா இருக்கு. சுண்டு உடனே டேய் நம்ம பக்கெட் நாரயணன் வீட்டுலே புதுசா குடி வந்திருக்கங்கடா என்றான். அத்துடன் அந்த பேச்சு முடிந்தது, ஏறக்குறைய அவளையும் மறந்து விட்டோம்.
ஒரு நாள் நாங்கள் எங்களது தெருவில் உள்ள ஒரே ஒரு நாடாரின் காய்கறி கடை (இவர் கடைய வைத்து ஒரு பதிவு போடுவோம்ல) அருகே இருந்த பொது எங்கள் விளையாட்டில் ஊடால வந்தவள் அங்கு வந்து வாழைக்காய் வாங்கினாள். அன்று முதல் அவள் பெயர் "வாழைக்காய்" ஆனது.
பிறகு பாலா அவளின் நதி மூலம் ரிஷி மூலத்தை ஆராய்ந்து அன்று விளையாட்டு சமயம் மூதரிக்கப்ப்டது. அவளின் அம்மா ஒரு துணை நடிகை என்ற விஷயம் எல்லோரிடமும் ஒரு வித நிழலான செய்தி ஆக சொல்லப்பட்டது.
அன்று முதல் அவளைக் கண்டால் எங்கள் டீமில் உள்ள மொட்டையும்(ரமேஷ்), கஞ்சுமிட்டி (பெயர்க் காரணம் அறியவில்லை) "வாழைக்காய்" என்று குரல் உடுவார்கள். மேலும் அவள் அவளுடைய அம்மாவுடன் வந்தால் ஒருவன் "வாழைக்காய்" என்பான் மற்றொருவன் ஆமாம் போடு ஒன்னு "எக்ஸ்ட்ரா" என்பான். முதலில் இது அவளுக்கு புரியவில்லை என்றாலும் காலப்போக்கில் அவள் புரிந்துகொண்டு ஒருமுறை நின்று எங்களது விளையாட்டையும் நிறுத்தி முறைத்து விட்டு சென்றாள்.
அடுத்த முறை மேட்டர் கொஞ்சம் சீரியஸ். மற்றோருமுறை வாழைக்காயும் அவள் அம்மாவும் எங்களைக் கடந்தவுடன், விளையாட்டு தொடங்கிய பொது நான் அடித்த புல் bladed சாட் சரியாக வாழைக்காயின் பின்னால் சம அடி, நிஜக்காய் நசுங்கியிருக்கும். நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும், ஒரு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் கஞ்சுமிட்டி சும்மா இல்லாமல் டேய் வாழைக்காய் பஞ்சர் என்றான். பந்தை எடுக்க சென்ற பாலாவோ "எக்ஸ்ட்ரா எட்செட்ட்ரா" என்று கேவலமாக கேலி செய்தான். நிஜமாகவே இது அவர்களை கோபம் கொள்ள செய்தது. வாழைக்காயின் அம்மா என்மேல் தன் பாதரட்சையை பிரயோகம் செய்தாள். மேலும் பல இன் சொற்களையும், சாபங்களையும் என்மேல் வீசினாள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் அவர்களை ஏறக்குறைய மறந்து விட்டோம். முழப் பரீட்சை, லீவ் என்று ரொம்ப பிஸி ஆகி விட்டோம். பிறகு சிறிது நாட்களில் அவர்கள் எங்கள் தெருவை விட்டு போய் விட்டார்கள் என்று பாலா ஒரு நாள் சொன்னான்.

பிறகு இப்போது நாங்கள் எல்லாம் ஒவொரு திசைக்கு மேல் படிப்புக்க்காகவும், வேலைக்காகவும் பிரிந்து ஒவ்வொரு ஊரில் இருக்கிறோம். சிறு வயது நண்பர்கள் இப்போது யார் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரமெல்லாம் தெரியவில்லை.

கிட்டத்தட்ட முப்பைதைந்து வருடத்திற்கு பிறகு சமீபத்தில் நான் விடுமுறையில் குடும்பத்துடன் தாய்லாந்து சென்ற பொது நடுக்கடலில் படகில் செல்லும் போது பாலாவை சந்திக்கப்போகிறோம் என்று நினைக்கவில்லை.
பாலாதான் என்னை அடையாளம் கண்டு வந்தான். பிறகு தன்னுடைய மனைவியை எங்கள் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினான். என்னிடம் இவள் உனக்கு தெரிந்தவள் தான் என்றான். எனக்கு அவளை அடையாளம் தெரிந்த பொது ஏய் இவள் வாழைக்காய் தானே என்று பிறகு நாக்கை கடித்துகொண்டேன்.
சாரிடா மன்னிச்சுக்கோ அவளுடைய பெயர் எனக்கு தெரியாதுடா, நீயும் மனைவி என்று தானேடா சொன்னே, பெயர் சொல்லவில்லையே என்றேன்.
பிறகு நாங்கள் சிறிது நேரம் பேசிவிட்டு, நான் குடும்பத்துடன் அன்றிரவே மத்ய கிழக்கு நாட்டுக்கு திரும்பி விட்டேன். மறக்காமல் இருவரும் தொலை பேசி எங்களை பரிமாறிக்கொண்டோம்.
பிறகு அவர்கள் எப்படி சந்தித்தார்கள், அவன் மனைவியிடமும் மாமியாரிடமும் மன்னிப்பு கேட்டானா என்றெல்லாம் கேட்க ஆவலாக இருந்தது.
அடுத்த முறை அவனை காண்டக்ட் செய்யும் பொழுது கேட்கவேண்டும்.

பிடித்தால் இங்கே வோட்டப் போடுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.