Monday 1 June 2009

பீனாவின் நிலை


சுதீஷை நான் ஒரு பார்ட்டியில் சந்தித்தேன். அவன் என்னுடன் பேசிய விதமும் நடந்து கொண்ட முறையும் என்னுள் எப்பொழுதும் எழுந்து அடங்கும் நிராசையை மறுபடியும் தூண்டிவிட்டது. அவன் என்னைவிட ஒரு நான்கு வயது அதிகம் இருப்பான் போலத் தோன்றியது. அந்தப் பார்ட்டிக்கு நான் அழைக்கப்பட்டாலும் அங்கு எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய வாழ்க்கை நான் வாழவில்லை.

நான் கேரளா மாநிலத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். என்னுடைய தாய் என்னையும் என் தம்பியையும் நன்றாகவே வளர்த்தாள். என்னை நன்றாக படிக்க வைத்தாள். ஆனால் நான் வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது, என் தாய் தவறான அறிவுரைகளால் என்னை நடிகையாக ஆக்க ஆசைப்பட்டாள். என்னுடைய உடல்வாகும், நிறமும், அழகும் பார்ப்போரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும்.

அவள் என்னை ஒரு தயாரிப்பாளரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவர் என்னை போட்டோ சூட் என்று ஏதேதோ சொல்லி என்னை தனிமைப் படுத்தி அவர் தேவையை முடித்துக் கொண்டார். அவர் எடுக்கப் போகும், படத்தில் நான் தான் கதாநாயகி என்றும் என்னை ஆசைக் காட்டி மேலும் இரண்டு மாதங்களுக்கு என்னை உபயோகப் படுத்திய பின் ஒரு நாள் படப்பிடிப்பில் எனக்கு மேக்கப் எல்லாம் போட்டு, நடிக்க வைத்தார் ஆனால் கதாநாயகியின் ஆறு தோழிகளில் ஒருத்தியாக. அந்தப் படம் இன்றுவரை வெளிவரவில்லை. கதாநாயகி மற்ற தோழிகளின் கதியும் தெரியவில்லை. இவை எல்லாம் என் அன்னையின் மேல் எனக்கு தீராத கோபத்தை உண்டாக்கியது. நான் என் அன்னையிடம் விவரத்தை சொன்ன பொழுது அவளின் மெத்தனம் மேலும் என்னை வெறுப்படைய செய்தது.

எல்லா சராசரிப் பெண்களுக்கும் தோன்றும் கல்யாணம், குடும்பம் போன்ற ஆசைகள் எனக்கு நிராசையாக தோன்ற ஆரம்பித்தது. அப்பொழுது தான் எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு நபர் என் வீட்டிற்கு வந்தார், அவர் அம்மாவிடம் என்னை கல்யாணம் செய்து கொள்வதாகவும், இரண்டு மாதம் கழித்து சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாகவும் சொன்னார். ஆதலால் என்னை அவருடன் ஜாலியாக இருக்கச் சொல்லி அம்மா கட்டாயப் படுத்தினாள். அந்தக் கயவன் இரண்டு மாதம் கழித்து காணாமல் போனான்.

இப்பொழுது ஒரு தொழிலதிபக் கிழவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறேன். கிழவன் எங்கள் குடும்பத்தை நன்றாகவே கவனித்துக் கொள்கிறான். எங்களை இப்பொழுது சென்னையில் செட்டில் செய்து விட்டு தம்பியை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கும் டூ வீலர், கம்ப்யூட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்து குடும்ப செலவிற்கு ஏராளமாகவே பணம் தருகிறான். ஆனால் என் உணர்ச்சியை குழிதோண்டி மண்போட்டு மூடிவிட்டான், படுபாவி. அன்னை என் நிலைமையை புரிந்து கொண்டு நான் எப்போதாவது ஜிம்மில் பார்க்கும் ஏதாவது ஒருவனை மாட்டி, கிழவன் ஊரில் இல்லாத நாளில் அழைத்துக் கொண்டு வந்தால், அவர்கள் கொடுக்கும் எச்சில் பானத்தை குடித்து அவர்களுக்கு கோழி வறுவல் கொடுத்து, எங்களை முதலிரவு அறைக்கு அனுப்பும் தோழி போல அனுப்பிவைப்பாள்.

என் வாழ்க்கையை விமர்சிக்கும் முன்பு, என்னை ஒரு முறை பார்த்து என்னுடன் பேசிப் பாருங்கள் ஒவ்வொரு ஆண்மகனும் என்போன்ற ஒருத்திக்கு ஏதாவது ஒரு சமயத்தில் ஏங்குவீர்கள்.

சுதீஷும் நானும் அந்தப் சந்திப்பிற்குப் பின் நன்றாக பழக ஆரம்பித்தோம். அவன் வேலை நிமித்தமாக வெளி ஊர்களுக்கு சென்று தங்கும் பொழுது என்னையும் கூட்டிச்செல்ல ஆரம்பித்தான். சில சமயம் இரண்டு மூன்று நாட்களுக்கு தங்கும் பொழுது அவன் அலுவலகம் செல்லும் நேரங்களில் அவனுடைய உடைகளை ஒழுங்குப்படுத்தி அவனுக்காக ஒரு மனைவியைப் போலக் காத்துக் கொண்டிருப்பேன். சுதீஷ் என்னை மிகவும் நன்றாகவே நடத்தினான்.

சுதீஷ் என்னை நன்றாக புரிந்துக் கொண்டான். நான்தான் சுதீஷிடம் என்னைக் கொடுத்தேன். நான் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். நான் முன்பு சொன்ன என் கல்யாண ஆசை மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.

கிழவனுக்கு நான் ஊர் மேயும் சேதி தெரிய ஆரம்பித்து விட்டது. என் அம்மாவிடம் ஆசை காட்டி எங்களை கூண்டோடு ஐதராபாடுக்கு மாற்றி விட்டான். அங்கு என் அம்மாவின் பெயரில் ஒரு பிளாட் வாங்கி என் உணர்ச்சிக்கு மேலும் சமாதிக் கட்டிவிட்டான்.
சுதீஷ் எனக்காக காத்திருந்து, வெறுத்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டான். மறுபடியும் நான் அவனை சந்தித்த பொழுது அவன் சொல்லிய வார்த்தைகள் என்னை வாழ்நாள் முழுவதும் தொடருவது திண்ணம்.

“பீனா நம் சந்திப்பு நீ படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்திருந்தால் நம் இருவர் வாழ்வும் நன்றாக இருந்திருக்கும்”.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

மன்மதக்குஞ்சு said...

எனக்குள் இருக்கும் "சினிமா எடுக்கும் தொழிலதிபராக ஆகும்" ஆசையை தூண்டி விட்டது.
நல்ல கதை, நல்ல நடை, தொடர்க

இராகவன் நைஜிரியா said...

வைரஸ் தாக்குதலில் மீண்டு வந்த கும்மாச்சியே ... வருக... வருக...

திரட்டிகளை இணைக்கும் போதும், புது டெம்ப்ளேட் போடும் போதும் மிகக் கவனமாக இருங்கள்.

மேலும் ஃபயர்பாக்ஸ், கூகுள் கிரோம் உலவிகளை பாவியுங்கள். நல்லா இருக்கும்.

கும்மாச்சி said...

நைஜீரியா ராகவன், தங்கள் வருகைக்கு நன்றி.

இந்த வலைத் தளத்தில் என்னை முதல் நபராக தொடர்வதற்கு, மேலும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.