Tuesday 9 June 2009

ராஜேந்திரன் மாறவில்லை............................








ராஜேந்திரன் என்னுடன் ஆறாவது வகுப்பிலிருந்து பள்ளிப்படிப்பு முடியும் வரை படித்தான். எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் வீடு. சிறுவயதில் தந்தையை இழந்தவன். அவனது தாய் ஐந்தாறு எருமை மாடுகள் வைத்துக் கொண்டு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு தங்கையும் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவான், எங்களுடன் விளையாடுவான். பரீட்சை நேரத்தில் பாஸ் செய்வதற்காக என்னிடம் வந்து பாடம் கற்றுத்தரச் சொல்லி உதவிக் கேட்பான்.

நல்ல கட்டுமஸ்தான உடல். அவன் அம்மாவுக்கு உதவியாக மாடு கறப்பான். மாட்டிற்கு புண்ணாக்கு உடைத்து, கரைத்து வைப்பான். அவனது புஜங்கள் நல்ல முருக்கேறியிருக்கும். எங்கள் வீட்டுக்கு வந்தால் சில சமயம் அம்மா அவனை தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து போடசொல்வாள். சடுதியில் மரத்து மேல் ஏறி தேங்காய் பறித்துப் போடுவான். அவன் சரளம்மாக பேசுவது என்னிடம் மட்டும் தான்.

.....த்தா சங்கரு என்ன உங்க கிரிக்கெட்லே சேர்த்துக்கோ என்பான்.
அந்த வார்த்தை இல்லாமல் அவனால் ஒரு வாக்கியம் கூட பேச முடியாது. நான் கேப்டன் ஆன பொழுது பலத்த எதிர்ப்புக்கிடையே அவனை பதினொன்றாவது ஆளாக இணைத்தேன். ஓடி வந்து வேகமாக பந்து எறிவான். எதிராளி அவனை திறமையாக அடித்து விட்டால், அடுத்த பந்தை "குஞ்சாவைப்" பார்த்து எறிவான். அவர்கள் விக்கெட்டை விட்டு நகர்த்து போல்ட் ஆகி விடுவார்கள்.

அவன் பரீட்சை வினாத்தாளைப் பார்த்தால் எல்லோருக்கும் சிரிப்பு வரும். முதல் இரண்டு மூன்று கேள்விகளுக்கு என்னிடம் முதல் நாள் கற்றுக்கொண்டதை வைத்து ஒப்பேற்றி விடுவான். வாத்தியார் அசந்திருக்கும் பொழுது என் பேப்பரில் ஒன்றை உருவி காப்பி அடித்து விடுவான். பிறகு எல்லா பக்கத்திலு ஒரே மாதிரி சங்கிலிபோல சுழிதுசுழித்து எழுதுவான். அதை எந்தக் கொம்பனாலும் படிக்க முடியாது. அதற்கு அர்த்தமும் கிடையாது. சிலசமயம் அடிஷனல் சீட் வாங்கி அதேபோல சுழிப்பான். வாத்தியார் திருத்தி திரும்பக் கொடுக்கும் பொழுது அவனைத் திட்டிக்கொண்டே கொடுப்பார்.

பிறகு நான் படிப்பை முடித்து வெளிநாட்டுக்கு வேலைக்குசென்று விடுமுறையில் திரும்பிய பொழுது, என்னைப் பார்க்க வந்தான்.

..............த்தா டேய் எனக்கு டீஷர்ட் வாங்கியாந்தயா...., ......த்தா வேறே என்ன வாங்கியாந்த.? அப்போது அவனுக்கு கல்யாணமாகி இருந்தது, ராஜேந்திரா இப்போ என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்றதற்கு, ....த்தா பால் வியாவாரம் தான் எனிக்கி என்ன தெரியும் என்றான்.

இப்போது வெகு நாட்களுக்குப் பிறகு அவனை சந்தித்தேன். த்தா எப்போடா வந்தே, ...த்தா எங்கேடா இவ்வளவு நாளா காணோம் என்றான். நாங்களும் இப்போ வூடு மாத்திக்கினோம் கோயம்பேடுக்கு அப்பால்லே என்றான்.

உனக்கு எவ்வளவு குழந்தைகள் என்றேன், ....த்தா ஒரு பையன் ஒரு பொண்ணு என்றான். என்ன செய்கிறார்கள் என்றேன், பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சிட்டேன், மருமவன் மளிகைக் கடை வைத்திருக்கிறான் என்றான். பையன் என்றேன், பையனைப் பற்றிக் கேட்டதில் அவன் முகத்தில் ஒரு பெருமிதம். டேய் அவன் என்னைப்போல் இல்லை +2 படிக்கிறான், நல்லாப் படிக்கிறான் என்றான்.

சமீபத்தில் அப்பாவுக்கு இதயக் கோளாறு என்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவசர விடுப்பில் சென்றேன், ஊர் சென்றவுடன் நேராக அப்பாவைப் பார்க்கச்சென்றேன். அப்பா ICU விலிருந்து வெளியே வந்து வார்டில் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்து விட்டார். “என்னை கவனித்த இதய நிபுணர் டாக்டர் ராஜ்குமார் யார் தெரியுமா, உன்னுடன் சின்ன வயதில் இருப்பானே ராஜேந்திரன் அவனுடைய மகன்” என்றார்.

பின்பு நான் டாக்டரை சந்தித்து, சிறிது நேரம் பேசிய பின்பு, ராஜேந்திரனைப் பற்றி விசாரித்தேன். அவன் இன்னும் கோயம்பேடில் இருப்பதாகவும், எவ்வளவு அழைத்தும் தன்னிடம் வந்து வசிக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டான்.

அடுத்த நாள் நான் ராஜேந்திரனின் வீட்டுக்கு போனேன். சிறிய வீடு நன்றாக இருந்தது. வீட்டிற்கு பின்புறம் மாட்டுதொழுவம். இன்னும் பால் வியாபாரம் பண்ணிக்கொண்டு இருந்தான்.

மனைவிக்குத் கேளாமல் மெலியக் குரலில் ".....த்தா எப்போடா வந்தே என்றான்". விவரங்களைக் கூறி அவன் மகனிடம் என்னுடைய அப்பா மருத்துவம் பார்த்துக் கொள்கிறார் என்றேன்.

ஏண்டா இன்னுமா பால் வியாபாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறாய், மகனுடன் மகிழ்ச்சியாக இருப்பது தானே என்றதற்கு
ராஜேந்திரன் "...த்தா இப்போகூட மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன், என் தொழிலை நான் எப்படிடா விடுவேன் " என்றான்.

ராஜேந்திரன் மாறவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

நாகா said...

மெய்யாலுமே பிளிர்றீங்க சார்..!

கும்மாச்சி said...

நன்றி நாகா

கலையரசன் said...

உங்க லிங்க படிச்சுபாத்துட்டு பாராட்டாம
போக முடியல..
விவரித்த விதம் அருமை!!

niyazpaarvai said...

கும்மாச்சி நானும் dohaவில்தான் இருக்கேன் நாம சந்தித்தால் நிறைய பரிமாறிக் கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் தங்கள் வசதிப்படி என்னை தொடர்பு கொள்ளலாம்.
Niyaz
niyaz_fawaaz@yahoo.com

niyazpaarvai said...

கும்மாச்சி நானும் dohaவில்தான் இருக்கேன் நாம சந்தித்தால் நிறைய பரிமாறிக் கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் தங்கள் வசதிப்படி என்னை தொடர்பு கொள்ளலாம்.

Unknown said...

ஆஹா மிக மிக அருமையா இருந்தது!!...நீங்கள் கதைய சொல்லிய விதம் பிடிச்சிருக்கு !!... ரஜென்றனின் கிரிக்கெட் தலேன்ட், சங்கிலி போன்று எழுதுவது அருமையா இருந்தது ... நீங்கள் கதயை முடித்த விதம் சூப்பர்!!!....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.