Friday 5 June 2009

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் பூதம்


அவன் ஆத்மா, அவள் சீமா. இருவருக்கும் கல்யாணமாகி சில நாட்கள்தான் ஆகிறது. இருவரும் தேன்நிலவுக்கு அந்த மலைப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறார்கள். முதல் நாள் வந்து விடுதியில் தங்கி காலையில் இந்த கோல்ப் மைதானத்திற்கு வந்து ஜாலியாக கோல்ப் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆத்மா அடித்த டீ ஷாட் அந்த மைதானத்தை தாண்டி வெளியே உள்ள ஒரு பங்களாவின் கண்ணாடி ஜன்னலை உடைத்து பந்து வீட்டின் உள்ளே விழுந்தது. ஆத்மா சீமாவின் முகத்தைப் பார்த்தான்.

சீமா "என்னங்க இப்படி பண்ணிட்டீங்க வாங்க அந்த வீட்டில் மன்னிப்புக் கேட்டு வருவோம் என்றாள்.

இருவரும் அந்த வீட்டை நெருங்கினார்கள். அழைப்பு மணியை அடித்தார்கள். சிறிது நேரம் காத்திருந்தும் ஒருவரும் வரவில்லை. ஆத்மா கதவைத் திறந்தான். வாசல் கதவு திறந்தே இருந்தது.

நுழைந்தவுடன் அந்த வீட்டின் ஹாலில் ஒருவன் சோபாவில் படுத்திருந்தான். பக்கத்தில் ஒரு பூ ஜாடி உடைந்திருந்தது.

சோபாவில் படுத்திருந்தவன் "வாங்க உங்களைத்தான் எதிர் பார்த்தேன்" என்றான்.

ஆத்மா "மன்னிக்கவேண்டும்" என்றான்.

படுத்திருந்தவன் "மன்னிப்புத் தேவையில்லை", மேலும் "நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்றான். நான் முன்னூறு வருடங்களாக இந்த ஜாடியில் அடைபட்டிருந்த பூதம், நீங்கள் என்னை விடுவித்தீர்கள். ஆதலால் எங்களுடைய பூத உலக வழக்கப்படி நான் உங்களுக்கு பெரியதாக கொடுக்க வேண்டும்" என்றான்.

"நான் உங்களுக்கு நூறு கோடி ரூபாயும், இந்த வீட்டையும் கொடுக்கிறேன்" என்றது பூதம். ஆனால் ஒரு நிபந்தனை "நான் முன்னூறு வருடம் ஜாடியில் இருந்ததால் பெண் வாசனையே அறியாமல் இருந்து விட்டேன், ஆதலால் உன் மனைவியை சிறிது நேரம் என்னிடம் தனியாக விடு" என்றது.

சீமா அதிர்ச்சியில் ஆதமாவை நோக்கினாள். ஆத்மா அவளை தனியாக வெளியே அழைத்து சென்றான்.

"டியர் இதற்கு நீ ஒத்துக்கொள்ள வேண்டும். நாம் கனவிலும் நினைத்தாலும் கிடைக்காத நூறு கோடியும் இந்த வீடும் கிடைக்கப் போகிறது. அதலால் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள். நாம் பிறகு குஜாலாக இருக்கலாம். மேலும் பூதம் தானே யாருக்கு தெரியப் போகிறது" என்றான்.

ஆத்மா சீமாவை புதியவனிடம் விட்டுவிட்டு மைதானத்தை நோக்கி நடந்தான்.
புதியவன் சீமாவிடம் ஜாலியாயாகப் பொழுதைக் கழித்தான். எல்லாம் முடிந்தவுடன் பூதம் சீமாவிடம் கேட்டது.

"உன் கணவன் என்ன லூசா இந்த இருபத்தொயோன்றாம் நூற்றாண்டில் பூதத்தை எல்லாம் நம்புகிறான்".

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன ஒரு சிந்தனை.. அடடே.. கதை கலக்குது போங்க..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.