Friday 12 June 2009

வைதேகி-என் மீரா


வைதேகிக்கு வகுப்பில் ஏத்தம் அதிகம் தன்னுடன் நிறைய மாணவர்கள் பேசுகிறார்கள் என்று. அப்படி ஒன்றும் நல்ல பிகர் எல்லாம் கிடையாது. சொல்லப் போனால் அட்டபிகுர். தேய்ந்துபோன கிராமபோனில் வரும் பி.யு. சின்னப்பா குரலில் பேசும். எங்கள் வகுப்பில் மொத்தம் இருபது ஆண் பிள்ளைகள், பத்து பெண் பிள்ளைகள். வைதேகியைவிட வகுப்பில் சில சுமாரான பிகர்கள் உண்டு. விஜயலட்சுமி, நேத்ரா, மீராவேல்லாம் கொஞ்சம் பெட்டெர்.

வைதேகியின் அலட்டலுக்கு காரணம், ரங்கராஜன், ஆறுமுகம், கோபி. மூவரும் குடம் குடமாக ஜொள்ளு விடுவார்கள். ரங்கராஜனின் அப்பா ஒரு பவுடர் கம்பெனியில் மேனேஜர். நாங்களெல்லாம் பள்ளிக்கு பையில் புத்தகங்களை கொண்டு வருவோம். ரங்கராஜன் ஒரு அலுமினியப் பெட்டி கொண்டு வருவான். அதெல்லாம் பணக்கார குடும்பங்களில்தான் வாங்கிக்கொடுப்பார்கள்.

வகுப்பில் நுழையும்பொழுதே வைதேகியை ஓரக்கண்னால் பார்த்துக்கொண்டு அவன் அப்பாவின் பெருமையை எங்களிடம் கூறுவான். அதில் பாதி பொய் இருக்கும். எங்கப்பா இன்னிக்கி பம்பாயிலிருந்து விமானத்தில் வந்தார், டிக்கெட் கிடைக்கலை, பைலட் பக்கத்திலேயே உட்கார்ந்து வந்தார் என்றெல்லாம் கதை விடுவான். அதைக் கேட்டு அந்தப் பெண்கள் எல்லாம் வாயைப் பிளந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும்.

ரங்கராஜன் அவன் அப்பா கம்பெனியிலிருந்து எடுத்து வரும் லெட்டர் பேட், பேனா, பென்சில், சாம்பிள் பவுடர் டப்பா எல்லாம் கொண்டு வந்து வைதேகிக்கு கொடுப்பான், அவளும் எல்லாப் பல்லையும் காட்டி வாங்கிக்கொள்வாள். இதயெல்லாம் கவனித்த கோபி அவன் தங்கையின் புதிய நோட்டுப் புத்தகங்கள் இரண்டை எடுத்து வந்து அவன் பங்குக்கு வைதேகியிடம் கொடுத்தான். அடுத்த நாளே அவன் அம்மா வந்து வைதேகியிடம் குய்யோ முறையோ என்று கத்தி, “அவன் கொடுத்த நீ வாங்கிப்பியோ” என்று பிடுங்கிச் சென்றுவிட்டாள்.

ரங்கராஜன் வைதேகியிடம் தன காதலை தெரிவிக்கப் போவதாக எங்களிடம் சொன்னான். அன்று மாலை பள்ளி முடிந்ததும் அவளை தனியாக தள்ளிக் கொண்டு போனான்.
அடுத்த நாள் அவன் காதலை சொல்லியிருப்பான், நாங்கள் எல்லாம் அவன் வரும்பொழுது, "விழியில் நுழைந்து பவுடர் கொடுத்து உயிரில் கலந்த உறவே" என்று பாடக் காத்திருந்தோம். ஆனால் அவன் வரும்பொழுதே மூஞ்சியை தொங்கப் போட்டுகொண்டு "மாமியார் வீட்டுக்கு போகும் குரங்குபோல வந்தான்". நாங்கள் இடைவேளையில் அவனை விசாரித்த பொழுது "இல்லைடா அவள் "பி" செக்ஷன் நந்துவை விரும்பராடா என்றான்.

பின்பு ஒருவாரம் ரங்கராஜன் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு டல்லாக இருந்தான்.

அடுத்த வாரம் ஒரு நாள் நிறைய பேனாக்களும், லெட்டர் பேடும், பவுடர் டப்பாவும் கொண்டு வந்து மீராவிடம் கொடுத்தான்.

"என் மீரா அதை வாங்க மறுத்து விட்டாள்".

கமுக்கம்மா கடலைப் போடணும்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

கலையரசன் said...

கமுக்கம்மா கடலைப் போடணும்..
கரைக்டா சொன்ன அண்ணாச்சிக்கு
ஒரு டக்கீலா ஹாட் சொல்லுப்பா!!

கும்மாச்சி said...

கலையரசன் ஆதரவிற்கு நன்றி.

VISA said...

ஏய் கதை கலக்கல்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.