Wednesday 3 June 2009

"பிந்து"....ரயில் சிநேகம்


வண்டி புறப்பட இன்னும் நாற்பது நிமிடம் இருந்தது. என்னோட பெர்த்தைக் கண்டுபிடித்து பெட்டியை சீட்டுக்கு கீழே வைத்து அமர்ந்தேன். பெட்டியிலிருந்து ஞாபகமாக புத்தகத்தை வெளியில் எடுத்துக்கொண்டேன். நான் எப்போதும் பக்கவாட்டில் இருக்கும் இரண்டு பெர்த்துள்ள படுக்கையைதான் தேர்ந்தெடுப்பேன். இது எனக்கு மிகவும் வசதியான ஒன்று. இரண்டு சீட்டையும் இழுத்துப் போட்டுக்கொண்டு புத்தகத்தை படித்துக்கொண்டு எப்போது வேணும் என்றாலும் தூங்கிக்கொண்டு போகலாம். எதிர்ப்புறம் உள்ள ஆறு இருக்கைகளில், ஒரு இளம் கணவன் மனைவியும், இரண்டு பிள்ளைகளும், ஒரு முதிய கணவன் மனைவியும் இருந்தனர். நான் வேலை நிமித்தமாக ஒரு நேர் காணலுக்கு சென்று கொண்டிருந்தேன்.

என்னுடைய பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. நான் கொண்டுவந்த புத்தகத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன். வண்டி புறப்படுவதற்கு இருபது நிமிடம் முன்பு ஒரு பெண்ணும், ஒரு இளைஞனனும் என் இருக்கையின் கீழே தன் பெட்டிகளை வைத்தனர். பின்பு இளைஞன் அவளிடம் "ஓகே, நான் கிளம்பறேன் போனவுடன் தாத்தாவை போன் பண்ணச்சொல்" என்று சொல்லிவிட்டு வண்டியை விட்டு இறங்கினான். வண்டி சென்ட்ரலை விட்டுக் கிளம்ப ஆரம்பித்தது. அப்போது நான் அவளை நோக்கினேன். அவள் என்னைவிட இரண்டு மூன்று வயது சின்னவளாய் இருப்பாள் போல் தோன்றியது. சமீபத்தில் டிகிரி முடித்தவள் போல் இருந்தாள்.

சிறிது நேரம் போன பின் அவள் தான் பேச்சை ஆரம்பித்தாள். நான் எங்கு போகிறேன் எதற்காகப் போகிறேன் என்றும் என்னைப் பற்றி எல்லாம் விசாரித்ததால் நான் தற்காலிகமாய் என் வாசிப்பை நிறுத்தி விட்டு, பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளை விசாரித்ததில் அவள் பெயர் "பிந்து" என்றும், அவள் சென்னையில் பட்டப் படிப்பை முடித்து விட்டு ரிசல்ட் வருவதற்குள் தன்னுடைய தாத்தா பாட்டியுடன் விடுமுறையை கழிப்பதற்க்காக டெல்லி செல்வதாக கூறினாள். அப்போதுதான் அவளை நன்றாக கவனித்தேன். நல்ல கோதுமை நிற தோலும், கரிய கூந்தலும், திருத்தப்பட்ட புருவமும், இவளை வேறே ரேஞ் என்று நினைக்கத் தோன்றியது. பிறகு சிறிது மௌனத்துக்குப் பிறகு, தூங்கலாமா, என்றவுடன், நிலைமையை உணர்ந்து நான் மேலே உள்ள பெர்த்தில் படுக்க சென்றேன். பிறகு புத்தகத்தில் என் மனம் செல்லவில்லை, அவளை பற்றியே யோசித்துக்கொண்டு, தூங்கிப்போனேன்.

காலையில் என்னை அவள் தான் எழுப்பினாள், குட் மார்னிங், ரமேஷ் எழுந்திருங்க. குட் மார்னிங் என்று சொல்லிவிட்டு "toothbrush" ஐ எடுத்துக்கொண்டு, வாஷ்பசின் நோக்கி நடந்தேன். நான் முகம் கழுவி வருவதற்குள் எனக்காக சூடாக காபியை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். பின்பு எங்களது பேச்சைத் தொடர்ந்தோம் நான் படிக்கும் புத்தகம் பற்றியும், அவளின் ரசனையைப் பற்றியும் பேச்சு தொடர்ந்தது அவள் பேசப் பேச நானும் என் கூச்சத்தை தவிர்த்து பேச ஆரம்பித்தேன். எங்கள் பேச்சு "The other side of Midnight" ல் வந்த நோயால் பேஜ், கதேரின் டோக்லஸ், அலெக்சாண்டர் டோக்லஸ், மற்றும் "Kane and Able" புத்தகத்தின் தொடக்கமே "He who started screaming, when she stopped screaming" என்று ஆசிரியரின் வாசகரின் கதைக்குள் இழுக்கும் திறமை,மற்றும் "கரையெல்லாம் செண்பகப்பூ" கல்யாணராமன், வள்ளி, ச்நேகம்மா என்று போய்க்கொண்டிருந்தது.பின்பு கொஞ்ச நேரம் நான் கொண்டு வந்த செஸ் போர்டில் ஒரு கேம் ஆடினோம்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அவள் ரமேஷ், "எங்கே பெண்களுக்கு சுருள் முடி அதிகம்" என்று கேட்டாள். நான் இதை பிந்துவிடமிருந்து சற்றும் எதிர் பார்க்கவில்லை. நான் அவள் கண்களை நேராகப் பார்த்த பொழுது, அதில் தெரிந்த விஷமத்தனத்தில் திக்குமுக்காடினேன். இந்த நேரம் ஒரு "மில்லி செகோண்ட்தான்" பிரம்மாவுக்கு "சூசூ போற நேரமாக வேனால் இருக்கலாம்" , ஆனா எனக்கு அவளின் மேல் இத்தனை நேரம் இருந்த மதிப்பு சிதறுவதற்குள்
"Come on Ramesh don't be naughty In Africa" என்றாள்.

பின்பு நாங்கள் பேசிய பேச்சுகள், போபால் ஸ்டேஷனில் இறங்கி, வண்டி தாமதம் என்றவுடன் காலாற பேசிக்கொண்டு நடந்தது எல்லாம் எழுதவேண்டும் என்றால் இன்னும் குறைந்தது பத்து பதிபபுகளாவது வேண்டும். டெல்லியில் அவளை கூட்டிப் போவதற்கு தாத்தா வருவார் என்றும், டெல்லி வருவதற்கு முன்பு என் உச்சந்தலையில் கையை கவிழ்த்து வைத்து விரல்களால் ஒரு கோலம் போட்டு "பை பை" பிறகு சந்திப்போம் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அவள் சென்றவுடன் அவளிடம் அவள் முகவரியை வாங்க மறந்து விட்டோம் என்ற நினைவு எனக்கு வந்தது. ஆனால் அவள் காலையிலேயே என்னுடைய இருப்பிடம் பூர்வீகம் எல்லாவற்றையும் கேட்டுத்தெரிந்து கொண்டுவிட்டாள். ஆதலால் இனி எங்களுக்குள் மீண்டும் சந்திப்பு என்றால் அவள் தொடர்பு கொண்டால் தான் உண்டு.

பிறகு ஒரு இரண்டு வருடம் கழித்து ஒரு புத்தாண்டு வாழ்த்து அனுப்பி இருந்தாள். அதிலிருந்து எங்கள் கடிதப் போக்குவரத்து தொடங்கியது. அதுவும் எப்படி வருடத்திற்கு ஒருமுறை அல்லது தொடர்ந்து ஒரு மூன்று நான்கு வருடத்திற்கு ஒரு முறை என்று.அவள் தற்போது மணந்து, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகி. லக்னோவில் எங்கேயோ இருப்பதாக் தெரிவித்திருந்தாள். ஒரு முறை தன் குடும்பத்தின் புகைப்படம் அனுப்பியிருந்தாள். சில சமயம் தான் படித்த புத்தகம், பார்த்த சினிமா என்று எழுதுவாள். நானும் என்னுடைய குடும்ப நிலவரங்கள், என் மனைவி, இரண்டு பையன்களைப் பற்றியும் எழுதேவேன்.

பிறகு ஒரு முறை நான் சென்னைக்கு விடுமுறையில் ஒரு உறவினரின் மகள் கல்யாணத்திற்காக சென்ற பொழுது, கல்யாணக் கூடத்தில் என் உச்சந்தலையில் கை வைத்து யாரோ கலைத்தார்கள். திரும்புமுன் என் மனதில் ஆயிரம் என்ன ஓட்டங்கள். திரும்பியவுடன் "பிந்து நீ எங்கே இங்கே என்றேன்" . அவளும் அந்த கல்யாணத்திற்கு பிள்ளை வீடு உறவினராக வந்திருந்தாள். பின்பு என்ன இரண்டு குடும்பங்களுடனான அறிமுகம், நீண்ட நேரம் பேச்சு.

அவள் தன் முதல் பெண்ணுக்கு திருமணம் முடித்து பாட்டியாகி விட்டாலும், அந்த ரயில் பயணத்தில் என்னை திக்குமுக்காட வைத்ததை நினைவு கூர்ந்தாள்.
நாமும் அடிக்கடி பயணம் செய்கிறோம், சில ரயில் சிநேகங்கள் தொடர்கின்றன, ஒரு இன்ப நிகழ்வாய்.

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

NaagaArasan said...

NANBARAE,

ANUBAVAM MIHA MIHA ARUMAI.

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.