Friday 15 January 2010

கட்டினாக் கோட்டை முட்டினாக் கொடநாடு.


மண்ணாங்கட்டி, மறுபடியும் வரேனுங்க. அது என்னாங்க புது செய்தி, அம்மாக் கோட்டை பக்கம் போயிருக்கிராங்கன்னு நம்ம மருதுக் கிட்டே கேட்டா இந்த போக்கனங்க்கெட்டப் பய போயஸ் தோட்டத்துல்லே புல்லு வெட்ட சொல்ல ஒட்டுக் கேட்டா மாதிரி இல்லப் பேசறான்.

சும்மா கொடநாடுக்கும் போயஸ் தோட்டத்துக்கும் போய் புளிப்பு ஊத்திச்சாம். அதாலே கோட்டைப் பக்கம் போய் நாம மஞ்சத் துண்ட வம்பு வலிக்கலாம்னு சகோதரிக்கிட்டே சொல்லிக்கின்னு சடுதியிலே போய்ட்டாங்களாம்.

போய் என்னாத்தடா கிழிச்சாங்கன்னு கேட்டா மருதுப் பையன் சொல்றான், அம்மா சும்மா வுட்டு கேட்டதிலே மஞ்சத் துண்டு மப்பாயிட்டாராம்.

அட போலே போய் வேலையப் பாரு. அந்தாளு பனங்காட்டு நரி சல சலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டாரு. அப்படின்னா இவன் மேலே வம்புக்கு இழுக்கிறான்.

“இன்னா அம்மா இன்ன சோக்கா பாடினாங்க தெரியுமா. “தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதேன்னு” அப்போ இன்னா சொல்வாராம் அப்படிங்கிறான்.

“அட போலே எந்தத் தலைவனே சொல்றாங்கன்னு அந்த அம்மாவுக்கே தெரியலே. அவங்கக் கட்சியிலே எங்கடா தலைவன் இருக்கிறான். அம்மாதானேடா அல்லாம். ஏலே மருது என்னாட சொன்னே மவனே நாளைக்கு வேலைக்கு வராதே”.அப்படின்னு வெருப்பிலே வெடிச்சா

“அட போ பெருசு சும்மா அம்மா வழிய மறக்காம இருக்க சொல்ல போய் கையெழுத்து போட்டு வந்திருக்காங்க, இத்தப் போய் பெரிசா பேசிக்கின்னு, நான் வேலைக்கி வரலேன்னா வரப்புலே களை எல்லாம் எவன் பிடுங்குவானாம்”, அப்படிங்கிறான் நியாயம் தானுங்களே.

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆம்.. உண்மைதான்.. யார் வருவா களைபுடுங்க..

நல்ல நக்கல்..ரசித்தேன்...

மன்மதக்குஞ்சு said...

நன்னா ஷொன்னேள் போங்கோ

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.