Wednesday 20 January 2010

கழற்றி விடப்பட்ட கடவுள் கூட்டணியும், புடவை துவைப்பதுவும்


“ஏலே மருது இன்னாடா இன்னிக்கு வயலுக்கு இவ்வளவு தாமதமா வரே என்று மண்ணாங்கட்டி” குரல் விட்டார்.

“அடே போ பெரிசு கலிஞர் கொடுத்த பெட்டிலே இந்த குட்டிங்க எல்லாம் புட்டத்த ஆட்டிக்கின்னு இருந்தாங்களா, அத்தே பார்த்து அசந்து தூங்கிட்டேன்”.

“ஏலே ஏண்டா தாமதம்னு கேட்டா அசிங்கமா வா பேசுதே போலே போய் வேலயப்பாரு. ஏண்டா நீங்க எல்லாம் பொட்டியில எத்தினி உருப்படியான விஷயம் காமிக்கிரானுங்கோ அத்தே பாக்க மாட்டீங்களா”.

“அட போ பெருசு அதெல்லாம் உன்னியப் போல பெருசுங்களுக்குத்தான்”.

“சரி அத்தே விடு அந்த மதுரக்காரர் அதாண்ட விசயகாந்து இப்போ மத்த கட்சிங்கக் கூட கூட்டணி வச்சிக்க போராராமே, செய்தில போட்டுக்கிறான்”.

“அஹ அஹான் பெரிசு அவருக கட்சியிலே அல்லாரும் சொல்லிக்கிரானுங்கா கூட்டணி இல்லேன்னா அம்பேல் ஆயிடுவோம்னு. அவனுங்க எல்லாம் கைக்காச வுட்டு நொந்து போய்க்கிரானுங்க”.

“அது சரிடா அந்தாளு கடவுளோடையும், மக்களான்டையும் தான் கூட்டனின்னு சொன்னாரு. மேலே வேற அந்த மருத்துவர அஞ்சு வருசம் புடவை துவைப்பாரு, அஞ்சு வருசம் வேட்டி துவைப்பாருன்னு நக்கல் பண்ணாரு. இவரு இப்போ இன்னாத்த துவைப்பாராம்”

“அட போ பெரிசு கடவுள் அத்தக் கேட்டுத் தான் அம்பேல் ஆயிட்டாரம, எங்கே கோமணத்தே உருவிடுவாரோன்னு. மக்களுங்க இப்போ விவரமாயிட்டானுங்க, காசு எவன் தாரானோ அவனுக்குத்தான் கூட்டணிங்கிரானுங்க. எப்போடா எவனாவது மண்டையப் போடுவான் எப்படா இடைத் தேர்தல் வரும்னு கைய தேய்ச்சிக்கின்னு இருக்கானுங்க”.

“சரி இப்போ அவரு யாரோடாப் போவாரு. ஏலே சொல்லுடா மருது”.

“அடப்போ பெருசு உன்னோட காலத்திலே வழிமடையையும், வரத்து மடையும் கையாலேயே துறந்து மூடி விவசாயம் பண்ணே, அத்தே பம்ப் செட் வரைக்கும் கொனாந்து வுட்ட எவன் அன்றாயரையாவது துவைக்கட்டும், இல்லே அ. கு....டி யாவது தேய்க்கட்டும், நம்க்கின்ன பெருசு சும்மா தொனதொனக்கதே வேல செய்யவுடு. நானே மானட மயிலாட பாத்து மப்பாயிருக்கன்”.

ஏலே ஏலே என்னாலே மொனமொனக்குதே, வேலையப் பாரு.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

vasu balaji said...

:))

கார்த்திகைப் பாண்டியன் said...

பிழைக்கத் தெரிந்தவர்..:-(((

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. கிளம்பிட்டாங்கையா...

இருட்டு கடை அல்வா மாறி
ஆரம்பிச்சதும் தெரியல.. முடிச்சதும் தெரியலே..
நல்ல பதிவு..

virutcham said...

mmm...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.