Wednesday 22 February 2012

பத்திரிகா தர்மம்


தி.மு.க.வுக்கு எதிரான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது “பத்திரிகா” தர்மம் அல்ல@#கலைஞர்
தலைவரே அது பத்திரிகா அல்ல பத்திரிகை.......குசும்பு கொஞ்சம் ஓவர்தான்

தமிழ் நாட்டில் எட்டு மணி நேர மின்வெட்டு..............அரசு அறிவிப்பு
இன்வெர்ட்டர் விலை ஏற்றம் வியாபாரிகள் கொண்டாட்டம், மக்கள் தவிப்பு 

பத்மநாபாவின் ஒரு நகையை மதிப்பிடவே குறைந்து இருபது நிமிடம் ஆகும்.............கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவிப்பு
நகையை லவுட்டறதுக்கு அவ்வளவு நேரம் ஆகாது.........தமிழக அரசு

சங்கரன்கோவிலில் நாங்கள் போட்டியிடவில்லை, யாராவது போட்டியிட்டால் ஆதரிப்போம்##பா.ம.க. தலைவர் ஜி.கே.வேலுமணி.
கேப்டனை ஆதரிப்பீங்களா? எதற்கும் மருத்துவர கேட்டுட்டு பேசுங்கப்பு.

தமிழகத்தில் மின்சாரம் எப்போ போகுது எப்போ வருது ஒன்னும் புரியல
என்ன வாழ்க்கைடா இது?, சம்சாரம் இல்லாமல் கூட இரண்டு வாரம் இருக்கலாம், மின்சாரம் இல்லாம இரண்டு மணி இருக்க முடியல.

ஜெயலலிதாவிற்கு ஒன்றும் தெரியாது, எல்லாவற்றுக்கும் நானே காரணம் ..............நீதிபதிமுன் கதறியழுத சசிகலா
அப்படி சொல்லவில்லை என்றால் சென்னை திரும்ப முடியாது..............களி எப்படியும் நிச்சயம்.


ராவணவதம் தொடர்கிறது, மேலும் இரண்டு வழக்கு பாய்கிறது...........செய்தி
கொடுக்கிறத கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை இல்லை......இப்போ வருந்தி என்ன பயன்.

சங்கரன்கோவில் திராணியை நிரூபிக்க தி.மு.க.வும் களமிறங்கியது வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமார்.
வேட்பாளருக்கு செலவழிக்க திராணியிருக்கணும் அதுதான் முக்கியம்.

எல்லா மாநிலங்களிலும் காங்கிரசை ஒழிப்பேன்..............சீமான் ஆவேசம்.
அப்ப்...............பா .......................முடியல.

படம் எடுக்காதார்கள்தான் பிரச்சினை பண்ணுகிறார்கள்..............இயக்குனர் அமீன்
அணில் அப்பாவதானே சொல்லுறீங்க, அதான் அவரு மகன் படத்தையும் நிறுத்திட்டாங்க.

மெட்ரோ குளுகுளு ரயில் பெட்டிகள் பிரேசிலில் தயாராகின்றன.........செய்தி
கட்டணம் என்ன பிளைட் ரேஞ்சுக்கு இருக்கும்.........அம்மான்னா சும்மாவா?


ஹைக்கூ
மழைக்கு பயந்து
அறையில் ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

முத்தரசு said...

நீல நிற எழுத்துக்கள் நெத்தியடி பாஸ்

கும்மாச்சி said...

நன்றி மனசாட்சி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.