Wednesday 17 July 2013

வெட்கம் கெட்ட அரசும் விலையில்லா அரிசியும், விலையுள்ள தண்ணீரும்

மனிதனின் அத்தியாவசிய தேவையான குடிநீர் காசுக்கு விற்கப்படுகிறது, அதுவும் மலிவு விலையிலையாம். விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், ஃபேண் கொடுத்த அம்மாவிற்கு தண்ணீரை விலையில்லா தண்ணீராக கொடுக்க மனம் வரவில்லை. இந்த கேடுகெட்ட செயலுக்கு விளம்பரங்கள் வேறு, அம்மாவின் நூறாண்டு கால சாதனையில் இதுவும் ஒன்றாக பறை சாற்றப்படும்.

இதில் உள்ள உள்குத்து பாமர மக்களுக்கு புரிந்திருக்க நியாயமில்லை. தண்ணீரை தனியாருக்கு தாரை வார்த்து இரு தரப்பினரும் ஏழை மக்களின் தாகத்தில் அடித்து கொள்ளை அடிக்கப்போகிறார்கள். இலவச டி.வி. கொடுத்து கேபிள் இணைப்பில் கொள்ளையடித்ததாக குறை கூறிய கும்பல் இப்பொழுது தண்ணீரை தனியார் மயமாக்கி "ரத்தத்தின் ரத்தங்கள்" காசு பார்க்க வசதி செய்து கொடுக்கிறது.

அ.தி.மு.க ஆட்சிக்கு வரும்பொழுதும் தண்ணீர் தட்டுப்பாடு கூடவே வரும். தண்ணீர் லாரிகள் தமிழ்நாடு எங்கும் நடமாடும். அதை ஓட்டுபவர்கள் யாரென்று சொல்லத்தேவையில்லை. மெட்ரோவாட்டர் இலவச தண்ணீர் சப்ளை என்று போட்டுக்கொண்டு ஒரு லோடு (எட்டாயிரம் லிட்டர்) தண்ணீருக்கு ஆயிரத்தி ஐந்நூறு வரை வாங்குவார்கள்.தனியார் வாட்டர் சப்ளை நிறுவனங்களோ அதே லோடிற்கு மூவாயிரம் ருபாய் வரை வாங்குகிறார்கள். ஏனென்றால் அவர்களது வியாபாரம் ஓட்டல்கள், தனியார் ஐ.டி. கம்பெனிகள் என்று பெரிய அளவில் வியாபாரம். ஆதலால் நம்மை போன்ற ஜுஜூபிகளுக்கு தண்ணீர் லோடு அடிக்கமாட்டார்கள்.

இந்த தண்ணீர் சென்னையை பொறுத்த வரையில் பள்ளிப்பட்டு , பாலவாக்கம், வள்ளுவர்கோட்டம் போன்ற இடங்களிலிருந்து நிரப்பப்படுகிறது. இது நியாயமாக நமக்கு இலவசமாக வரவேண்டிய தண்ணீர்.இப்பொழுது சென்னையில் பெரும்பாலான இடங்களில் மெட்ரோ வாட்டர் வருவதில்லை. எத்துனை முறை முறையிட்டாலும் அழுத்தம் இல்லை என்ற காரணம் கூறப்படுகிறது. ஆனால் இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தட்டுப்பாடு எனபது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

காவிரித்தாய், வீராணம் ராணி என்று தனக்குத்தானே பீற்றிக்கொள்ளும் அம்மா ஆட்சியில் இதெல்லாம் சகஜம்.

விலையில்லாஅரிசி, மிக்சி, கிரைண்டர், மலிவு விலைதண்ணீரில் அம்மா படம் போடும்பொழுது டாஸ்மாக் சரக்கில் போடாதது ஏன் என்ற கேப்டனின் கேள்வி நியாயமே.

நல்ல காலம் மலிவு விலைஆணுறை அம்மா வழங்கவில்லை. அதில் அம்மா படம்!!!!!!!!!!! நினைத்து பார்க்கவே.......................உவ்வே.......!!!!
 

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்ணீரான கொடுமை...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

தண்ணீர், தண்ணீர்..,

இக்பால் செல்வன் said...

நீரும், காற்றும் மனிதனின் தார்மீக உரிமை இவற்றை விற்பதே கொடுஞ்செயல், இரண்டையும் அழித்து, மாசாக்கி பின்னர் நம்மிடமே விலைக்கு விற்பது, என்ன உலகமடா? நமக்கு வரவேண்டியதை நமக்கே தருவது அதுவும் விலைக்கு, இதெல்லாம் சாதனையா? சொரணைக் கெட்ட மக்கள் உள்ள நாட்டில் எருமைகள் அதிகாரம் கொள்வது மெய்யே..

தமிழ்வாசி பிரகாஷ் said...

தனியார் நிறுவனமே 20 லிட்டர் கேன் 20 or 25 ரூபாய்க்கு தரும் போது அரசு ஒரு லிட்டர் கேன் 10 ரூபாய்க்கு...

கொள்ளையோ கொள்ளை....

வெளக்கமா(தத்தடி)ன பதிவு...

அன்பு துரை said...

மிகவிரைவில் காஃபி-யா, டீ-யானு கேட்டு உபசரிக்குற நிலைமை போயி பச்ச தண்ணியா, சுடு தண்ணியா கேட்டு உபசரிக்குற நிலைமை வரும்..

//** விலையில்லாஅரிசி, மிக்சி, கிரைண்டர், மலிவு விலைதண்ணீரில் அம்மா படம் போடும்பொழுது டாஸ்மாக் சரக்கில் போடாதது ஏன்.. **//

நீங்க வேற.. இறந்துபோன சடலத்துக்கு வைக்கும் மலர் வளையத்தில் கூட விளம்பரம் தேடியாகிவிட்டது.. விரைவில் இதுக்கும் விளம்பரம் வைப்பாங்க.. சரியான வாசகங்கள் கிடைக்கல போல..

Advocate P.R.Jayarajan said...

//நல்ல காலம் மலிவு விலைஆணுறை அம்மா வழங்கவில்லை. அதில் அம்மா படம்!!!!!!!!!!! நினைத்து பார்க்கவே....................... உவ்வே.......!!!! //

தங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு எல்லையே கிடையாது.....!

Manimaran said...


//விலையில்லாஅரிசி, மிக்சி, கிரைண்டர், மலிவு விலைதண்ணீரில் அம்மா படம் போடும்பொழுது டாஸ்மாக் சரக்கில் போடாதது ஏன் என்ற கேப்டனின் கேள்வி நியாயமே.//

கரெக்டு

Manimaran said...

குடிகாரன் தண்ணி...குடி தண்ணி ரெண்டிலுமே புரட்சி பண்ணுவாங்க எங்க புரட்சித் தலைவி..

”தளிர் சுரேஷ்” said...

காட்டமான வார்த்தைகள்! உண்மைதான்! மின்சாரம் கூட செயற்கை தட்டுப்பாடு கொண்டுவருகிறார்களொ என்று எண்ணத்தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

டாஸ்மாக் தண்ணியும் ரேஷன் கார்டில் ரேஷன் முறையில் மலிவாக கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே....!

MANO நாஞ்சில் மனோ said...

அம்மா ஆட்சி நடக்குதுய்யா கொலை கேஸ்ல உள்ளே தூக்கி வச்சிரப்போறாங்க, கருணாநிதி'ன்னு பேர் இருந்த ஒரே காரணத்துக்காக ஒரு டாக்டரின் வாழ்க்கை சூனியம் பிடிக்க வச்சவிங்க இவிங்க.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.