Tuesday 2 June 2009

நாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்


இந்தக் கதை ஒரு நண்பனின் உறவினருடன் நாங்கள் கண்ட ரெகார்ட் டான்ஸ் பற்றியது. சற்று ஒரு மாதிரியாக குன்சாவாக இருக்கும், ஆதலால் விடலைப்பசங்கள், பொடியர்கள் மற்றும் விரல் சூப்பத் தெரியாதவர்கள் "ஜூட்" விடலாம்.

படித்து முடிந்து வேலை தேடும் சமயம், செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, போஸ்டல் ஆர்டர் வைத்து விண்ணப்பித்துக் கொண்டிருந்த நேரம். அம்மா காலையில் நன்றாக சமைத்து வைத்திருப்பாள். வீட்டில் மற்ற எல்லோரும் அலுலகம், கல்லூரி என்று காலையில் புறப்பட்டவுடன், அம்மாவுடன், அமர்ந்து நல்ல சாப்பாடு. பின்பு ஒரு தூக்கம், மதியம் எழுந்தவுடன், கறந்த பாலில் நல்ல காபி, பின்பு காலாற நடந்து நாயர் கடையில் ஒரு தம், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, விளையாட்டு என்றிருந்து ஒரு மாதிரியான "Boredom" வந்து விட்ட நேரம்.

நண்பன் முத்துராமனின் இரண்டாவது அக்காளுக்கு திருமணம் நிச்சயமாகி, கல்யாணம் திண்டிவனத்தில் நடக்கவிருந்தது. எங்கள் நண்பர்க் குழுவின் எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். எல்லோரும் போகலாம் என்று பிளான் போட்ட நேரம், எனக்கு அப்பாவிடம் அனுமதி கிடைக்காது. ஆனால் நண்பர்கள் என்னை வற்புறுத்தியதாலும், மேலும் அங்கு நிழலான காரியங்கள் செய்யலாம் எனக்கு ஆசை காட்டினார்கள். ஆதலால் அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். எப்படியோ அப்பாவிடம் பேசி எனக்கு அனுமதியும், என் செலவுக்கு பணமும் வாங்கிக் கொடுத்து விட்டாள்.

கல்யாணத்திற்கு எல்லாம் முதல் நாள் காலையிலேயே திண்டிவனம் போய் சேர்ந்து விட்டோம். இரவு மாப்பிள்ளை அழைப்பெல்லாம் முடிந்தவுடன், நண்பர்கள் எல்லோரும் இரவு அருகில் உள்ள விடுதியில் ஒரு ரூம் எடுத்து, முதலில் சிறிது பீர் அருந்தினோம். இதில் நண்பன் முத்துராமனும் அடக்கம். ஆனால் அவன் விரைவில் கல்யாண விடுதிக்கு செல்லவேண்டும் என்று புலம்பிக்கொண்டிருந்தான். ஆனால் நண்பர்களில் ஒருவன் இங்கிருந்து ஒரு ஐந்துக் கிலோமீட்டர் தூரம் போனால் ஒரு இடத்தில் ரெகார்ட் டான்ஸ் நடப்பதாகவும், அதற்க்கு போகலாம் என்று ஆசை காட்டினான். விரைவில் வந்துவிடலாம் என்று முத்துராமனையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டோம். இதற்கெல்லாம் தலைவன் "கஜக்கோல்" என்கிற ஸ்ரீதர் தான். அவன் யாரிடமோ சொல்லி ஒரு நான்கு வாடகை சைக்கிளுக்கு ஏற்பாடு செய்துவிட்டான். எல்லோரும் அந்த நிழலான இடத்தை அடைந்தோம்.




அது ஒரு பழைய வீடு போல இருந்தது. நடுவில் முற்றமும், சுற்றி நான்கு தாழ்வாரமும் இருந்தது. அதன் வடக்கு மூலையில் ஒரு ஆறு பேர் சில வாத்தியக் கருவிகளுடன் அமர்ந்து, அதை அப்பப்போ தட்டிக்கொண்டு இருந்தனர். நாங்கள் யாவரும் ஒரு இடத்தில் அமர்ந்து செட்டில் ஆகும் முன்பு அந்த இடத்தில் விளக்கு அணைக்கப்பட்டது. வாத்தியங்கள் உயிர் பெற்று எழுந்தவுடன் ஒரு சிகப்பு ஜிகினா உடை அணிந்து ஒருத்தி கீச்சுக் குரலில் பாடினாள். எங்களுக்கெல்லாம் இவள் தான் ஆடப்போகிராளா, அல்லது வேறு யாராவதா எப்படி இருக்கும் என்ற ஆவலில் மயான அமைதியிலிருந்தோம்.பிறகு ஒரு சிறிது செகண்ட் இடைவெளியில் அடுத்த பாட்டு துவங்கியவுடன் வேறொருத்தி வந்து புல் கவர் செய்து ஆடிவிட்டு போனாள்.(அம்பயர் பக்னர் பார்த்தல் எல்.பி.டௌபில்யு தான்) , அப்போது நண்பன் கஜகோல் அருகில் இருப்பவரிடம் விசாரித்ததில் இங்கு நேரம் போகப்போக அம்மண கு. ஆட்டமும் இருப்பதாக தெரிவித்தான். எங்கள் எல்லோருக்கும் காதெல்லாம் ஜிவ் என்று ஆகி, மேற்படி ஆட்டத்தை காண அடுத்து யுவதியின் வழிமேல் விழி வைத்து காத்திருந்தோம். மேற்படி ஆட்டத்தை போலவே மேலும் ஒரு நான்கு ஐந்து ஆட்டங்கள் வேறு வேறு பேர் ஆடிவிட்டு போனார்கள், ஒன்றும் சுகமில்லை. பிறகு ஒரு பத்து நிமிட இடைவேளைக்காக எல்லா இடத்திலும் விளக்கு போடப்பட்டது.

நிற்க, அப்போது தான் என் கூட வந்திருந்த பாலு, "சொம்பை" எதிர் தாழ்வாரத்தில் பார்த்து விட்டன், பிறகு எங்கள் எல்லோரிடமும் டேய், "சொம்பும்" இங்கே வந்திருக்குடா என்றான். எங்கள் எல்லோரையும் விட முத்துராமனுக்கு தான் திகைப்பும் பயமும். நாங்கள் எல்லோரும் வெளியே இருட்டில் வந்து தம் அடிக்கும் பொது, முத்துராமன் கல்யாண கூடத்திற்கு திரும்பிவிடலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்தான். ஆனால் எங்கள் எல்லோருக்கும் இவ்வளவு தூரம் வந்து விட்டு எதிர் பார்க்கும் அம்மண கு. ஆட்டம் பார்க்காமல் போவதாக இல்லை. ஒஹ், சொல்லமறந்து விட்டேன், முத்துராமனின் பயத்திற்கு காரணம், பாலு சொன்ன அந்த “சொம்பு” என்பது முத்துராமனின் பெரிய அக்காவோட கணவரின் பட்டப்பெயர். பெயர்க்காரணம் ஒன்றும் ஆச்சர்யம் அல்ல, இவர் ஒரு ஒன்றும் தெரியாதவர் போல இருப்பார், கொஞ்சம் லூசும் கூட. மேலும் அவர் முத்துராமனின் குடும்பத்திற்கு மிகவும் மரியாதைப்பட்டவர். ஆதலால் அவர் கண்ணில் பட்டால் வீட்டில் எல்லோரிடமும் சொல்லி விடுவாரென்று பயம்தான்.

ஆனாலும் அவனை எப்படியோ சமாதனம் செய்து, தலையில் ஒரு கர்சிப் கட்டி நாங்கள் பழைய இடத்திலே விளக்கு அணைத்தவுடன் போய் அமர்ந்து கொண்டோம். ஆட்டம் தொடங்கியவுடன் முதலில் வந்தவள் தன் மேல்பாகம் முழுவதையும் ஒரு நான்கு செகண்டுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் காட்டிசென்றாள். அடுத்த வந்த இரண்டு நுங்கு மார்பு நங்கைகள் முழுவதும் மேலாடையை துறந்து ஆட அந்த இடத்தில் சற்று ஜிவென்று சூடு ஏற ஆரம்பித்த சமயம், மற்றுமொரு இடைவேளை, விளக்குகள் எரிய, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, முத்துராமனின் பக்கத்தில் சொம்பு, முதலில் என்னை அடையாளம் கண்டு, "எங்கேடா இங்கே" என்று ஒரு முறை முறைத்து, பின்பு முத்துராமனையும் பார்த்துவிட்டது. எப்படிடா வந்தீர்கள் என்று, கேட்க, நாங்கள் பயத்தில் அது வந்து இந்த கஜகோல் தான் என்று நாங்கள் தடுமாறிய போது, எப்படி திரும்ப போகிறீர்கள் என்று வினவியது. அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது இது வரும்போது எப்படியோ இங்கு வந்து விட்டது திரும்புவதற்கு எங்களை எதிபார்க்கிறது. சைக்கிளில் வந்தோம் சார் என்றோம். நிற்க.

இப்போது எங்களுக்கு இந்த சொம்பைக் கண்ட பயம் ஒரு புறம், மேற்படி நடனத்தை எதிர்ப்பார்த்து, ஆவல் எல்லாம் கலந்துக்கட்டி இருக்கும் நேரம் அந்த சரித்திர புகழ்க் பெற்ற அம்மண. கு ஆட்டம் தொடங்கியது. முதலில் எல்லாம் அணிந்து அதை ஒரு குப்பையாக மேல்புறம் மறைத்து கொண்டு ஒருத்தி வந்து ஆடத்தொடங்கினாள். சிறிது நேரத்திலேயே திறந்த மார்பாகிவிட்டாள். ஆனால் இந்த கதையின் "ஹைலைட்" அவள் ஆடிய பத்து செகண்ட் நிர்வாண நடனம் அல்ல. அவள் ஆடிய பொழுது அவளை ஒரு நூறு ருபாய் தாளை வைத்துகொண்டு சொம்பு அவளை அழைத்ததும், பின்பு அவள் அவருக்காக ஒரு பிரத்தியேக நடனம் ஆடியதும்தான்.

இதற்க்கெல்லாம் முத்தாயிப்பாக சொம்பு திரும்பும் பொழுது "இது என்னடா ஆட்டம்னு இதப் பார்க்கவந்தீக" என்றார். சார் அது வந்து என்று நான் இழுக்கும் பொது, "பாண்டிச்சேரி வாங்கடா அங்க என்னமா இருக்கும்" என்றார்.

இப்போதெல்லாம் "சொம்பைப்" பார்த்தால் என்ன சார் எப்போ பாண்டி போலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

இராகவன் நைஜிரியா said...

பாவம் சொம்பு...

கும்மாச்சி said...

நன்றி ராகவன் அப்படியே வோட்டப் போடுங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

மீள்பதிவு.. படிச்சதுதான் நண்பா

aanmigakkadal said...

எது அதிகம் தடை செய்யபபடுமோ,அதுவே அதிகம் ரசிக்கப்படும்
இப்படிக்கு
www.aanmigakkadal.blogspot.com
www.online-astrovision.blogspot.com

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.