Sunday 8 December 2013

சொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம்


புரட்சி தலைவர் வழிகாட்டுதலின் பேரில் நல்லாட்சி புரியும் என் தலைமையிலான ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்பதே இந்த ஏற்காடு இடைத்தேர்தல் நிரூபிக்கறது--------தமிழக முதல்வர்.  

சுண்டலும் பிரியாணியும் கட்டு கட்டாக பணமும் கழண்டதனால தான் இந்த வெற்றின்னு கூடுவாஞ்சேரி கோவிந்தன் சொல்றாரு.

வருந்தாதீர்கள் தோல்விகளை ஏணிப் படியாக்கி கொள்ளுங்கள்-------ஏற்காடு தோல்வி குறித்து கலைஞர்.

குடுக்குற காசுல ஆட்டையைப் போட்ட  உடன் பிறப்புகளே அடுத்த முறையாவது உள்குத்து குத்தாமல் அடுத்தவன் காசுல ஆட்டையைப் போடப்பாருங்கள்.


எல்லாப் புகழும் மோடிக்கே-----தேர்தலில் வென்ற முன்னாள் முதல்வர் வசுந்த ராஜே சிந்தியா.

பின்ன வேற யாராவதுன்னு சொன்னா நாற்காலியப் பிடுங்கிடுவாக.

2014ல் மோடி பிரதமராவது உறுதி--------வை.கோ 

 எத்தனை நாளுக்குத்தான் அம்மா முந்தானியே பிடிச்சிக்கிட்டு அலையறது.


தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆராய்ந்து பார்க்கும் ---------மத்திய அமைச்சர் நாராயண சாமி 

இன்னும் பதினைந்து நாட்களில் நாங்க அமோக வெற்றி பெறுவோம், சே! கூடங்குளம் நியாபகத்துல சொல்லிட்டோமோ.

தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் ஆராயும்-நாராயணசாமீ # நீங்க கரண்ட்ல பண்ண ஆராய்ச்சி கூடங்குளத்தில கடல பர்பியாக் கெடக்குதாம். அத எடுங்க!---------ட்விட்டர் தாத்தா ட்விட்டரில் 

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

மகேந்திரன் said...

சூழ்நிலை நரம்பில்லா நாக்கினை எப்படியெல்லாம் சுழற்றி
பேச வைக்கிறது...!!

திண்டுக்கல் தனபாலன் said...

/ தோல்விகளை ஏணிப் படியாக்கி கொள்ளுங்கள்.... /

அப்படியா...? நல்லது நன்றி...

கும்மாச்சி said...

மகேந்திரன், தனபாலன் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

ரெண்டுல ஒன்னு தானே....?

Thulasidharan V Thillaiakathu said...

சொல்றாங்க சொல்றாங்க....இந்த துளசி தரனும், கீதாவும்....ரொம்ப நல்ல நக்கல்ஸ் அண்ட் கலக்கல்ஸ் னு!!! நாங்க காசு வாங்காத ஏமாத்தாத ஓட்டுப் போட்டாச்சு!!!

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.