Saturday 31 December 2011

புதிய ஆண்டு


எதிர்பார்ப்புகள் அனைத்தும்
கடந்த ஆண்டில் கழிந்து போன
நினைவுகளாய்

எழுதப்படாத நாட்குறிப்பில்
அழித்து எழுதமுடியா
நிராசைகளாய்

நினைவில் வந்துபோகும்
புதிய எண்ணங்கள்
கனவுகளாய்

தொடரும் புத்தாண்டில்
நிறைவேறும் நினைப்பில்
எதிர்பார்ப்புகளாய்

எல்லோர் எண்ணங்களும்
விருப்பங்களும் இனிதே ஈடேற
வரும் புத்தாண்டில்

கடலளவு ஆனாலும்
மயங்காமல்
கையளவு என்றாலும்
கலங்காமல்


எல்லோரும் இன்புற்றிருக்க
வேண்டும்,  நல்லெண்ணங்கள்
வேண்டி
பிறக்கட்டும் புத்தாண்டு

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கண்ணதாசனை நினைவூட்டியது.வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

எஸ். ரா, வருகைக்கு நன்றி, தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

மகேந்திரன் ஸார் உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

SURYAJEEVA said...

விடியல் வரும் என்று எதிர்பார்க்காமல்,
யாராவது விடியலை கொண்டு வருவார்கள் என்று காத்திருக்காமல்
அனைவரும் இணைந்து விடியலை கொண்டு வருவோம்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி, சூர்யா.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

M.R said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

குறையொன்றுமில்லை. said...

எல்லோரும் இன்புற்றிருக்க
வேண்டும், நல்லெண்ணங்கள்
வேண்டி
பிறக்கட்டும் புத்தாண்டு


இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

ஏ.ஆர், லக்ஷ்மி உங்களின் வருகைக்கு நன்றி.

உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

ஹேப்பி நியூ இயர் பாஸ்

கும்மாச்சி said...

சி.பி. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.