Tuesday 3 December 2013

கலக்கல் காக்டெயில்- 129

ஏற்காடு காவு

ஏற்காட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல் பலியாக தி.மு.க நிர்வாகி ஒருவர் பலியாகியிருக்கிறார். தேர்தலில் பங்கு பெரும் இரண்டு பிரதான கட்சிகளுமே நேற்றைய  தினம் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டன. பிரச்சாரம் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது இரண்டு கட்சிகளுமே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.


வரவரே தமிழ்நாடும் பீகாராக மாறிவருகிறது. ஆனால் தமிழ்நாட்டை ஆண்டு வருகிற கழகங்கள் "தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்கிறது" என்று காவல் துறை மானிய கோரிக்கை  விவாதத்தில் சட்டசபையில் அறிவித்து பென்ச் தட்டுவதில் ஒன்றும் குறைவில்லை.

பாய்லின், ஹெலன், லேஹர்

இந்த வருட வடகிழக்கு பருவமழை  தொடங்கியதிலிருந்து மூன்று காற்றழுத்த தாழ்வு நிலைகள் புயலாக உருவெடுத்து முறையே பாயலின், ஹெலன்,  லேஹர் ஒரிஸ்ஸாவிலும் ஆந்திராவிலும் கரையைக்கடந்தன. ஆனாலும் இதன் தாக்கமாக வடதமிழகத்தில் மிகக்குறைவான மழையே பெய்தது. சென்னையின் குடிநீர் தேவைக்கு இன்னும் போதிய மழை கிட்டவில்லை.

வடகிழக்கு பருவ மழைக்காலம் டிசம்பர் மாதத்தில் முடிந்து விடும். இனி அடுத்து வரவிருக்கும் மடியோ, இல்லை நானக்கோ, இல்லை ஹட்ஹட்டோ இந்தப்பக்கம் மழையைக் கொண்டு வராவிட்டால் சென்னை வரும் வருடம் தண்ணீருக்கு அலையவேண்டியது தான்.

தண்ணி டேங்கர்கள் நல்ல காசு பார்க்கலாம். போன வருடம் கோடையில் ஒரு லாரிக்கு மூவாயிரம் ருபாய் வரை சம்பாதித்தார்கள். அம்மா தண்ணீரெல்லாம் அம்பேலாகிவிடும்.

ரசித்த கவிதை 

அன்னியர் கப்பல் ஏறி
ஆயின பல்லாண்டிங்கே
என்னென்ன வகையில் நாடு
ஏற்றங்கள் பெற்றதென்று
சின்னதோர் கணக்குப் போட்டால்
சிந்தையாமகிழும் நாட்டில்
மன்னிய வேலையின்மை
வறுமைப்பேய் ஒழிந்ததுண்டா?

----------------------------------------------கா.வேழவேந்தன்

நகைச்சுவை 

கணவன் மனைவியிடம்: கண்ணே என் வாழ்க்கையில் நீ நிலவாக இருப்பாயா?

மனைவி: நிச்சயமாக  அன்பே.

கணவன்: அப்போ 9, 955, 887.6 கிலோமீட்டர் தள்ளியே இரு.

ஜொள்ளு 







Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

ராஜி said...

பொண்டாட்டி தள்ளி இருந்தாதான் ஜொள்ளு விட முடியும்!!

நம்பள்கி said...

இந்த பாப்பாவின் மூஞ்சி அம்சமா இருக்கு!
நன்றி!

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

பெண்டாட்டி கூட இருந்தாலும் ஜொள்ளுவிட பயிற்சி எடுக்கணும்.

நம்பள்கி said...

என் வாழ்கையில் இப்பத்தான் இவ்வளவு அழகான பெண் முகத்தை நான் பார்த்ததால்...
தமிழ்மணம் வோட்டு க+
க+ = + 1 vote

கும்மாச்சி said...

நம்பள்கி வருகைக்கு நன்றி. நீங்க மூஞ்சியைதான் ரசித்தீர்கள் என்று நம்புகிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

பருவ மழைக்காலம் என்று எங்க ஊரில் இல்லாமல் போய் விட்டது...


ம்... நல்ல கவிதை... நன்றி கும்மாச்சி...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

rajamelaiyur said...

இந்த இரண்டு கட்சிகள் ஒழிந்தால்தான் நமக்கு நிம்மதி

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! தமிழகம் பீகாராகத்தான் மாறி வருகிறது! மழையும் குறைந்து விவசாயமும் குறைந்துவிட்டது! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

இவ்வளவும் தெரிந்தே தமிழர்கள் இவர்கள் இருவரையே
துாக்கி நிறுத்துகிறார்களே.... ஏன்...?

நம்பள்கி அந்தப் பெண்ணின் மூஞ்சியை ரசித்தாராம்...!!!!
அதற்காகத் தான் ஓட்டு போட்டாராம்!!!
என்னக் கொடுமை கும்மாச்சி அண்ணா...

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.