Monday 24 March 2014

டீ வித் முனியம்மா-----------பார்ட் 2

இன்னா மீச எங்கே  அல்லாரும் வரல............

இன்னா முனியம்மா நேரத்தே நீ வன்னு..........

அட இன்னா மீச வன்னு பன்னுன்னு.......தமியி நாட்டுல இம்மாம் நாளாகீற இன்னியும் தமியி வரல உனுக்கு.......

டேய் பயம் இன்னடா லேட்டு .......

இன்ணா முனியம்மா நீ மொதலா வந்துட்டு சும்மா குரல் உட்டுகினு கீற.......

தொ பாய், பாணலிங்கம், நாடாறு  அல்லாரும் வந்துகினு கீறாங்க..........

முனியம்மா சட்டு புட்டுன்னு இன்னா நூசு படி............

இன்னா நூசு வயக்கமா வர எலிக்சன் நூசுதான்.............இன்னா பாயி, நாடாறு, லிங்கன்னே இன்னா லேட்டா வரீங்க........எங்க லோகுப்பயல காணோம்.....சரக்கு வுட்டு மட்டை ஆயிட்டானா?

சரி இன்னிய நூஸ லுக்கு வுடலாம்.........

அயகிரி இன்னா வை.கோவை சந்திச்சுகிராறு...........எப்படியும் அவுரு நைனா கச்சிய ஒரு வழி செய்யாம வுடமாட்டாராங்காட்டியும்.......இன்னா அம்மாவுக்குதான் கெலிப்பு..........

அம்மா இன்னா பறந்து பறந்து போகுது, சூப்பு குடிக்குது, மக்களை நல்லா உசுப்புது, செய்வீங்களா செய்வீங்களா? இன்னு கேக்குதே இன்னா செய்ய சொல்லுது..........ஒன்னியும்புரில..........

முனிம்மா இன்னா நக்மா படம் போட்டுக்கிறான் இன்னா நூஸு அத்தப்படி......

டேய் பயம் பொம்பள படத்த போட்டா உனுக்கு அது நூஸா..........மவன அஞ்சலையாண்ட கீது பாரு உனுக்கு........

நக்மா பிரச்சாரத்துக்கு போவ சொல்ல எவனோ கை வச்சிகிறான்...........அஹான் அது எப்பவும் தொரந்துகினு பப்பரப்பென்னு தான் போவும்............இவனுக அல்லாருக்கும் வாத்தியாரு பயக்கட பாண்டிதான் போல......

அது யாரு பயக்கட பாண்டி புதுசா கட போட்டுகிறானா நமக்கு எதிர--------செல்வம்.

டேய் போடா டோமரு அவருதாண்ட மொதலா கைபோட்டது..........துரைமுருகனுக்கு முன்னால.........இது தெரியாம நூசு கேக்க வந்துட்ட............

நம்ம கேப்டனு ஏன்னா சொல்றாரு...........

அவரு இந்த முற வேப்பாளறு பேரெல்லாம் சொல்லாமலே பிரச்சாரம் செஞ்சுகின்னு கீறாரு..........சும்மா புல் மப்புல தொ நிக்கிறான் பாரு இவனுக்கு ஒட்டு போடுங்க மக்கழே.........அப்படின்னு சொல்லிகிறாரு, பேர சொன்னா பாஸ்கரு பாண்டின்னு குயப்பம், தலீல தட்டனும்...........அதான் புச்சா ட்ரிக் வச்சிக்ராறு............

ஆமா நம்ம அம்மா பிரதமருன்னு சொல்றாங்களே அவுக இன்ன எளிக்சணுல நிக்குறாங்களா?

அடப்போ பாயி.............அம்மா, மமுதா, ஆனை சின்னத்த வச்சிகினு அதே மாதிரியே இறுப்பாங்களே மாயாவதி அவுக கூடத்தான் பிரதமருன்னு சொல்லிகினு எளிக்சணுல நிக்காமையே கீறாங்க..........இதெல்லாம் ஒரு கேள்வியா?

சரி வுடு நமக்கு வேல கீது..........

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

சோக்கா கீதுப்பா! கண்டினியு பண்ணுப்பா!

திண்டுக்கல் தனபாலன் said...

ப்ப்ப்பா...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

drogba said...

டமில் மரந்து போச்சு

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.